|
||||||
சாக்ரடீஸ் சிந்தனைகள் |
||||||
இசையை ரசிக்கத் தெரிந்தவர்கள் வாழ்க்கையையும் ரசிக்கத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். நீங்கள் நேசிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் முதலில் நீங்கள் மற்றவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது. ஒவ்வொருவரும் தன்னுடைய கடமை எதுவென்று உணர்ந்து அதைச் சிறந்த முறையில் செய்துகொண்டிருந்தால் சமுதாயம் வளர்ச்சி அடையும். குழந்தைகளை மனிதநேயமுடையவர்களாக வளர்க்கும் கடமை பெற்றோர்களுக்கு உண்டு. குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பதன் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம். யார் தன்னுடைய வேலை அல்லது தொழிலைச் சரியாகச் செய்கிறாரோ, அவர் கடவுளுக்குப் பிரியமானவர். சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான். தனக்கு நேரக்கூடிய துன்பத்தை மனதின் சமநிலையோடு பொறுத்துக்கொள்கிறவனே மனிதருள் உயர்ந்தவன். ஒரு செடி, வளர்வதற்கான முழு ஆற்றலுடன் இருக்கும்போது காற்றும் மழையும் கடுமையான வெப்பமும் அதை என்ன செய்துவிட முடியும்? துணிவும் அறிவும் கொண்ட உள்ளம் எந்த நிலையிலும் கலக்கமோ, குழப்பமோ அடையாது. உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும். |
||||||
by Swathi on 10 Mar 2014 2 Comments | ||||||
Tags: Socrates Quotes Socrates Quotes Tamil Socrates Thoughts Socrates Thoughts Tamil Socrates Philosophy சாக்ரடீஸ் சாக்ரடீஸ் சிந்தனைகள் | ||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|