வாக்படர் - ஜீவராசிகள் அனைத்தும் இன்பம் பெறவே முற்படுகின்றன. இன்பம் பெறுவதற்கான முயற்சிகள் பலன் தர நேர்மையின் துணை தேவை. அவரவரது கடமை வரம்பினுள் அடங்கி, தனக்கும் பிறர்க்கம் பிற்கேடுகள் விளையாதபடி மன வாக்காயங்கள் நேர்மையுடன் பணிபுரிய வாழ்வை அமைத்துக் கொள்வதில் தீவிரமாக ஈடுபடுவது அதற்கு அவசியம்
சரகஸம்ஹிதை - உடலையும் மனதையும் பாதிக்கவல்லவை என அறிந்தே அதில் ஈடுபடுதலாகிய அறிவுத் தடுமாற்றமின்றி பொறிகளை அடக்கி, நல்ல நினைவுடன், தேசத்திற்கும் காலத்திற்கும் தன் உடல்நிலைக்கும் ஏற்றவற்றை உணர்ந்து, நன்னடத்தையைத் தொடர்ந்து கையாள்வதொன்றே நோய் வராமல் பாதுகாக்க உதவக்கூடியது
வாக்படர் - நல்லதும் கெட்டதும் மனதில் பதிகிறது. மனதில் பதிந்தவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தமில்லை. தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்க்கவும், ஏற்க வேண்டியவற்றை ஏற்கவும் சிந்தித்து பகுத்தறிந்து செயல்படும் புத்தி உண்டு. மனம் கொண்டவற்றை எல்லாம் ஏற்கும் சபலம் இந்த புத்தியை தடுமாறச் செய்யலாம். பகுத்தறிவுடன் சிந்தித்து ஏற்றதைச் செயளவில் கொண்டு செலுத்தும் திறமையை திருதி என்பர். மனச்சபலம் இதனையும் கவிழ்க்கும். பகுத்தறிந்தவை நமக்கு - இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவையா என எடைபோட முன் அனுபவம் உதவும். இந்த முன் அனுபவத்தை அறிவுக்கண்முன் கொண்டு வருவது ஸ்மிருதி எனும் ஞாபகசக்தி. மனச்சபலம் இந்த ஸ்மிருதியைப் புறக்கணிக்கத் தூண்டும். இதனை பிரஜ்ஞாபராதம் - அறிவுத் தடுமாற்றம் என்பர். இந்தத் தடுமாற்றம் தொடர்ந்து தவறான வழியில் செல்லத்தூண்டும். பின்விளைவு - மனமும் உடலும் எப்போதும் நோய் வாய்ப்படக் காரணமான உடல்நிலை சீர்கேடு.
சரகர் - உடல், மனம், ஆத்மா என்ற மூன்றின் சேர்க்கை ஆயுள். இந்தச் சேர்க்கை நல்ல முறையில் நீடித்திருத்தல் வாழ்வாகும். நீண்ட ஆயுளை கெடுப்பதற்கு எதிரிகள் பல. அவை எப்போதும் இடைவெளியை எதிர்பார்த்து நிற்கின்றன. தன்னைச் சூழ்ந்து நிற்கும் அவற்றை நன்கு உணர்ந்து அவைகளுக்கு இடமளிக்காமல் ஒவ்வொரு நொடியிலும் ஆயத்தனாக இருந்து மனத்திடத்துடன் தன் நடைமுறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
சரகர் - நன்மை எது என்பதனைக் கருத்துடன் விசாரித்துத் தேர்ந்து எடுப்பவனுக்குக் கல்வி, அறிவு, ஞாபகசக்தி, செயல்திறன், மனோதிடம், நன்மை பயப்பதையே நாடும் சீரிய மனப்பாங்கு, சொல்தூய்மை, மணவடக்கம், தைரியம் இவை எப்போதும் துணை நின்று கை கொடுக்கும். மனதிற்குப் பிடித்ததை நாடுபவனுக்கு இவை துணை நிற்கமாட்டா.
ஸுச்ருதர் - உணவும் பானங்களும் உடலிலுள்ள வாயு, பித்தம், கபம், ரத்தம் இவைகளைத் தனித்தும் சேர்த்தும் கெடுத்து உடல் நோய்களை ஏற்படுத்துகின்றன. விருப்பும் வெறுப்பும் பல்வேறு உருப்பெற்று, கோபம், சோகம், பயம், மகிழ்ச்சி, துயரம், பொறாமை, அசூயை, ரக்கம், அழுக்காறு, வேட்கை, பேராசை முதலிய மனக்கிளர்ச்சிகளை ஏற்படுத்தி மன நோய்களை ஏற்படுத்துகின்றன.
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |