|
|||||
சொன்னா புரியாது - திரை விமர்சனம் ! |
|||||
நடிகர் : சிவா
நடிகை : வசுந்தரா கஷ்யப்
இயக்கம் : கிருஷ்ணன் ஜெயராஜ்
இசை : யத்தீஷ் மகாதேவ்
எப்போதும் பெண்களுடனே சுற்றி திரியும் சிவாவுக்கு, கல்யாணத்தில் ஈடுபாடு இல்லை. ஆனால் சிவாவின் அம்மா, சிவாவை நச்சரித்து பெண் பார்க்க அழைத்துச் செல்கிறார். அங்கு மணப்பெண்னாக வரும் வசுந்தரா தமிழ் கலாச்சரத்திற்கேற்ற குடும்ப பெண் போல் நடந்து கொள்கிறாள். இப்படியொரு பெண்ணை நம் தலையில் கட்டி வைக்கிறார்களே என்று சிவா வருந்தி, இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த திட்டமிட, இதே திட்டத்தோடு காத்திருக்கிறார் வசுந்தரா. ஒரு பாரில் வசுந்தரா மப்பேறி சரிந்து விழுகிற காட்சி பேஸ்புக்கில் வெளிவர, அதை பார்த்து அதிர்ச்சியாகிறார் சிவா. பிறகு இருவரும் சேர்ந்து கல்யாணத்தை ஒரு வழியாக நிறுத்தி விடுகின்றனர். இதற்காக நடத்தப்பட்ட பார்டியில், போதை தலைகேறிய சிவாவும், வசுந்தராவும் படுக்கை அறையில் தவறு செய்து விடுகிறார்கள். பிறகு ஒருவரையொருவர் பிரிய துடித்தாலும், இருவருக்குள்ளும் ரகசியமாக முளைக்கிறது காதல். அதை வழக்கமான ஈகோ வந்து தடுக்க, மீண்டும் எப்படி இணைந்தார்கள் என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தில் டப்பிங் கலைஞராக சிவா, வாயை திறந்தாலே தியேட்டரில் சிரிப்பலை பரவுகிறது. அதுவும் டிஸ்கவரி சேனலில் இருந்து சைனீஸ் படம் வரைக்கும் பிரித்து மேய்ந்திருக்கிறார்.சிவாவுக்கு நண்பர்களாக வரும் மூன்று பேருமே படத்தின் காமெடிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.
நாயகி வசுந்தர அறிமுகம் ஆகும் போது குடும்ப குத்து விளக்காக அறிமுகம் ஆகுவதும், பிறகு மார்டன் பெண்ணாக மாறி அதிர்ச்சி அளிப்பது படத்தில் மிக பெரிய திருப்பம்.
யத்தீஷ் மகாதேவ் என்கிற புதிய இசையமைப்பாளர் இசையில் எல்லா பாடல்களும் ஏதோ கேட்க வைக்கிறது.
கதையின் கருவை பற்றி அதிகம் சிந்திக்காமல், காமெடி மட்டும் வைத்து படத்தை இயக்கியிருக்கும் புதுமுக இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜுக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் சொன்ன புரியாது ! காமெடி கலாட்டா ! |
|||||
by Swathi on 26 Jul 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|