LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மற்றவை

சூடாமணி நிகண்டு மூலம்

 

காப்பு
காப்பு
முடிவி லின்பத்து முவா முதல்வனைப் போற்றி செய்தே 
அடிதொறு மிரண்டு மொன்று மாதியிற் பொருளடக்கி 
நடைபெறு ககரமாதி னகரவீ றெதுகை யாகப் 
படியிலோர் சொற்பொருட் பல்விதத் தொகை பகரலுற்றாம்
ககரவெதுகை
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் 
பகலே நாளொரு முகூர்த்தம் பகலவ னடுவே தேசு 
மகரமே சுறாப் பூந்தாதாம் வசி கூர்மை வசியம் வாளே 
அக மன மனையே பாவம் அகலிடம் உள்ளுமாமே.
சிகரி கோபுரமே வெற்புச் சீறெலி கருநாரைப்பேர் 
சிகழிகை மயிர்முடிப்பேர் சிறந்த வாசிகை தேமாலை 
சிகரமே மலையினுச்சி திரை சென்னி திவலை வெற்பாம் 
மகம் யாகம் ஓர்நாளென்ப மாய்வென்ப மறைவுஞ் சாவும்.
இகல் பகை வலி போர் முப்பேர் இகுளையே தோழி நட்பாம் 
புகரென்ப மழைக்கோள் குற்றம் புற்கெனு நிறமு முப்பேர் 
நகம் மலை யுகிர் மரப்பேர் நகை மகிழ் ஒளி சிரிப்பாம் 
ககனம் விண் படை காடென்ப கடவுள் தேமுனி நன்மைப்பேர்.
சாகஞ் சாகினி வெள்ளாடு தேக்கெனுந் தருவுமாமே 
பாகலே காரவல்லி பலா வென்றும் பகரலாமே 
யூகமே கருங்குரங்கோடு உட்பொருளுணர்தல் தர்க்கம் 
நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பி யானை.
திகிரியே மூங்கில் வட்டந் தேருருள் ஆழி வெற்பாம் 
சிகியென்ப மஞ்ஞை தீயாந் தீதுறு கேதுவும் பேர் 
ஞெகிழியே சிலம்பின் நாமம் நெருப்புரு கொள்ளிக்கும் பேர் 
எகினமே புளி மா ஞாளி கவரிமாநீர்நா யன்னம்.
ஆகுவே யெலியி னாமம் ஆம்பெருச்சாளிக்கும் பேர் 
யோகமே தியானங் கூட்டம் உபாயமாம் உயர்ச்சிக்கும் பேர் 
போகி யிந்திரன் பாம்பென்ப போகில் புட்பொது பூமொட்டாம் 
கோகிலங் குயில் பல்லிப் பேர் குடங்கரே குடிசை கும்பம்.
பொகுட்டுத் தாமரைப் பூங்கெட்டை பொருப்புச் சேற்றெழுந்த கொப்புள் 
இகுத்தலே செகுத்தல் வீழ்த்தல் இரித்தலோ டழைத்தல் ஈதல் 
புகைக்கிடு நாமந் தூமம் பேற்றும் யோசனைக்கும் பேரே 
அகைத்தல் வேதனை யொடித்தல் அறுத்திட லுயர்த்தலாமே.
சிக்கமே குடுமி நாமஞ் சீப்புட னுறியு மேற்கும் 
கொக்கு மாமரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம் 
வக்கிரங் கொடுமை மீளல் மடங்குத லுடனே வட்டம் 
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு.
தூக்கென்ப பாட்டுங் கூத்தும்ந் துலாமும் ஆராய்தலும் பேர் 
பாக்கென்ப தெதிர்காலத்தை பகரிடைச்சொற் றுவர்க்காய் 
மேக்கு மேற்றிசை மேலும் பேர் மெய் யுண்மை யுடலுமாமே 
ஊக்கமே வலி யுற்சாகம் உள்ளத்தின் மிகுதிக்கும்பேர்.
10 
பக டிபம் பெருமை யேறு பஃறி யாண்மேதி யைம்பேர் 
தகடிலை யைம்மை யென்ப தபனனே யிரவி தீயாம் 
அகடெண்ப நடுவே குக்கி யருளென்ப கருணை சத்தி 
மகரந்தங் கள்ளுந் தேனு மலர்த்தாதும் வழங்குமுப்பேர்.
11 
சகுந்தம் புட்பொதுவே கங்கஞ் சடை யென்ப வேணிவேராம் 
சிகண்டியே பாலையாழின் றிறத்திசை மயில் அலிப்பேர் 
சகுனி புள் நிமித்தம் பார்ப்போன் சமமென்ப தம ரொப்பாகும் 
சகுனமே கிழங்கு புள்ளின்சாதியும் நிமித்தமும் பேர்.
12 
சக்கரம் பெருமை யோர்புள் தரணியே பிறப்பு வட்டம் 
மிக்க தேருருளே யாழி வரையென விளம்பு மெண்பேர் 
பக்கம் புட்சிறகு நட்புப் பகர் திதி யருகு மாகும் 
நக்கனே அருகன் சம்பு நிருவாணி நாட்டுமுப்பேர்.
13 
பூகமே திரளை பூகம் புன்கணென்பது நோய் துன்பம் 
வாகுவே யழகு தோளாம் மாசியே மக மோர்மாதம் 
பாகமே பிச்சை பங்காம் பயோதரம் புயலே கொங்கை 
வாகை பண் பொழுக்கம் வெற்றி தவந் தொழில் வழங்கண் மிக்காம்.
14 
நோக்கேன்பத யழகு பார்வை நுதலென்ப புருவ நெற்றி 
சேக்கையே மிருகந்துஞ்சுமிடம் முலை சிறந்த பாயல் 
பூக்கமே கமு கூரென்ப புலிங்கந் தீப்பொறி யூர் புள்ளாம் 
ஆக்கம் பூமகள் செல்வப்பேர் அறல் கருமணல் நீராமே.
15 
சீகரங் கரகம் வீசுங்கவரி யுந்தி வலையும் பேர் 
சாகரந் துயிலொழித்தல் சமுத்திர மிருபேர் சாற்றும் 
காகுளி தவிசு கண்டெத்தெழு மொலி இசையுங் காட்டும் 
ஈகை பொன் ஈங்கைப் பேரி ரவியே மலை யாதித்தன்.
16 
தகை யென்பதழகு பண்பு தயையொடு பெருமை நாற்பேர் 
அகியென்ப தரவி ரும்பாம் அரிட்டமே கள்ளுக் காக்கை 
ககமென்ப தம்பு புள்ளாங் கடுத்த லொப் பையம் வேகம் 
அகவல் பா மயிற்குரல் கூத் தந்தமே யழ கீறென்ப.
17 
அக் கென்பு விடை முரிப்பு மணி சங்கு மணியுமாகும் 
நக்கலே நகை யுண்டற்பேர் ஞாட் பமர் பாரங் கூட்டம் 
இக்கென்ப கரும்பு கள்ளாம் ஈரமே குளிர்ச்சி அன்பு 
மக்கள் மானுடர் சிறார்பேர் வரைதலே கொள்ளல் நீக்கல்.
18 
கேகயம் மஞ்ஞை யோர் பண் அசுணமாக் கிளத்து முப்பேர் 
தோகையே மயிற்வால் மஞ்ஞை விலங்கின் வால் சொல்லு முப்பேர் 
போகமே பாம்பின் மெய்யும் போகத்தின் விகற்ப மாகும் 
போகுதல் நெடுமை நேர்மை போகுதலெனு முப்பேரே.
19 
கைக்கிளை இசை விகற்ப மொருதலைக் காம முப்பேர் 
சுக்கை தாரகை மாலைப் பேர் சூத்திரம் பொறி நூ னூற்பா 
எக்கரே சொரிதலோடு குவிதலும் இருபே ரென்ப 
மொக்குளே குமிழி பூவின்முகிழேன மொழியலாமே.
ஙகரயெதுகை
20 (1) 
புங்கமே யுயர்ச்சி யம்பு பொரும் அம்பின் குதை முப்பேரே 
திங்க ளம்புலி மாதப்பேர் சித்திரன் ஓவன் தச்சன் 
கங்கென்ப வரம்பின் பக்கங் கருந்தினை பருந்து மாமே 
தொங்கலே பீலிக்குஞ்சந் தூக்கொடு தொடுத்த மாலை.
21 (2) 
சங்கமே கணைக்கா லோரெண் சபை சங்கு புலவர் நெற்றி 
பங்கென்ப முடமேயாகும் பாதியுஞ் சனியு மேற்கும் 
வங்கமே வெள்ளி நாவாய் வழுதலை ஈயமாமே 
அங்கணஞ் சேறு முற்றம் ஆஞ் சலதாரேக்கும் பேர்.
22 (3) 
ஞாங்கர் வேல் பக்க முன்பு மேலென நான்குமாகும் 
தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல் 
வாங்கலே வளைத்தல் கொள்ளல் வையென்ப கூர்மை வைக்கோல் 
வேங்கைபொன் புலி மரப்பேர் வீ நீக்கம் பூப்புள் சாவாம்.
23 (4) 
மங்குல் காரிருள் விண் முப்பேர் மருந் தமுதொடு மருந்தாம் 
பங்கியே பிறமயிற்கும் பகருமாண் மயிற்கும் பேராம் 
அங்கதம் பன்னகந் தோள் அணியுடன் வசைச் சொல்லாகும் 
பங்கமே சேறு தூசு பழுதொடு பின்ன மாமே.
24 (5) 
அங்கமே யுடலுறுப் பென் பாறங்கங் கட்டி லைம்பேர் 
பிங்கலம் பொன்னும் பொன்னின் நிறத்தையும் பேசலாகும் 
பொங்கரே மரத்தின் கோடு பொருப் புய ரிலவு முப்பேர் 
பொங்கலே கொதித்தல் மிக்காம் பொச்சாப்பு மறவி தீதாம்.
சகரயெதுகை
25 (1) 
பாசனம் மென்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் 
வாசமே யிருப்பிடம் பூமணம் புள்ளின் சிறகு தூசாம் 
கோசமே மதிலுருப் பாண்குறி முட்டை முறை பண்டாரம் 
தேசிகன் வணிகன் றேசாந்திரியொடு குருவுமாமே.
26 (2) 
மூசல் மொய்த்திடல் சாவென்ப முடலையே திரட்சி யுண்டை 
கீசகங் குரங்கு வேயாங் கேழ் நிறமொளி யொப்பாகும் 
வீசலேயெறிதலீவாம் வெம்மை யுட்டணம் விருப்பம் 
கேசர மகிழ்பூந்தாதாங் கிருட்டியொ ரீற்றாப் பன்றி.
27 (3) 
அசி படைக்கலமே வாளே அவமதிச் சிரிப்பு முப்பேர் 
நிசி யிரா மஞ்சள் பொன்னாம் நீர் புனல் குணம் பூராடம் 
பிசியென்ப பொய்யும் சோறும் பேசரும் பொருளு முப்பேர் 
சுசி கோடைசுத்தந் தீயாஞ் சுடர் விளக் கிரவி யங்கி.
28 (4) 
ஆசென்ப விரைவு குற்றம் அற்ப மெய்க்கவச நாற்பேர் 
காசென்ப கோழை குற்றங் கதிர்விடு மணி முப்பேரே 
ஆசினி பலாவிசேடம் மரவுரி மரக்காழ் விண்ணாம் 
தேசிக மழகு காந்தி திசைச்சொல் லோர்கூத்துச் செம்பொன்.
29 (5) 
பச்சையே மரகதம் தோல் பரிமளப் புதல் மால் புந்தி 
கச்சை யென்பது தழும்பு கயிறொடு கவச முப்பேர் 
செச்சைமை வெட்சி தேய் வைதிகையென்ப திசை சுணங்காம் 
மிச்சையே பொய்த்தாலாகு மிடித்தலஞ் ஞானமுப்பேர்.
30 (6) 
பிச்ச மாண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையுமாகும் 
கச்சம் யானைக்கழுத்திற் கய றளவொடு மரக்கால் 
எச்சமே குறை சேயாக மிகமென்ப மரக்கோடி யானை 
அச்சமே யகத்தியைம் மை யஞ்சலிம்முப் பேராமே.
31 (7) 
ஆசையே திசை பொன் அன்பாம் ஆகுலம் வருத்த மோசை 
காசையே காயா நாணல் காமர் தா னழகு காதல் 
பாசமே கயிறு கூளி பக ரூசித்துளை அன்பாகும் 
தூசென்ப தாடை யானைப் புரசை தூசிப்படைப் பேர்.
32 (8) 
தாசியே பரணி சூளை தளியென்பது துளியே கோயில் 
வேசரி கழுதையே கோவேறு வேசரி யுமாகும் 
ஆசுகம் பகழி காற்றாம் அந்தரி யுமையே துர்க்கை 
கோசிகஞ் சாம வேதங் கூறு பட்டாடைக்கும் பேர்.
33 (9) 
பசுவேறு சீவனாவாம் பாரதி வாணி தோணி 
வசுவே ஆன்கன்றும் பொன்னும் வசுக்களுந் தீயு நாற்பேர் 
அச மூவாண்டுறு நெல் லாடாம் அணை யென்ப கரையே மெத்தை 
சசி யென்ப கர்ப்பூரஞ் சந்திர னயிராணி முப்பேர்.
34 (10) 
விசும்பு பொன் னுலகு மேகம் விண்ணொடு திசையு நாற்பேர் 
தசும்பு நற்குட மிடாவாஞ் சாத்தனே அருகன் ஐயன் 
இசை புகழ் கிளவி பாட்டாம் ஏங்கலே யொலி யிரங்கல் 
பிசுனனே கோளன் பொய்யன் உலோபனும் பேசு முப்பேர்.
35 (11) 
வச்சிரங் சதுரக்கள்ளி வைரமே குலிச முப்பேர் 
நொச்சியே சிந்து வார மதில் சிற்றூர் நுவலலாமே 
தச்சனே சித்திரைப்பேர் தபதி யென்றானுமாகும் 
உச்சி நண்பகலுச் சிப்பேர் உறுப் பவயவ முடம்பாம்.
36 (12) 
பாசென்ப பசுமை மூங்கில் பப்பென்ப பரப்போ டொப்பாம் 
மாசென்ப சிறுமை குற்றம் மழை அழுக்கொடு நாற்பேரே 
கேசம் பெண்மயிற்கும் ஆண்பாற் மயிற்குங் கிளத்தலாகும் 
வாசியே குழன் முன்னா ண்மா வாசி யென் னேவ னாற்பேர்.
37 (13) 
மிசையென்ப துணவு மேடு மீமிசைச் சொல்லு முப்பேர் 
விசயமே வென்றி வெல்லம் வெங்கதிர் மண்டலப்பேர் 
முசலியே யுடும்பு தாழை முந்திய ராம னோந்தி 
வசதி நல்லிட மூர் வீடாம் வர னயன் பரமன் காந்தன்.
ஞகரயெதுகை
38 (1) 
துஞ்சலே நிலை பேறாகுந் துயில் சோம்பு சாவுமாகும் 
பஞ்சரஞ் செருந்தி கூடாம் பரதரே கழியர் நாய்கர் 
கஞ்சமே தாளங் குல்லை கமல வெண்கலம் வட்டப்பம் 
குஞ்சம் ஈயோட்டி நாழி குறள் குன்றி குறளைச் சொல்லே.
39 (2) 
நெஞ்சென்ப மன மார்பின்பேர் நிழல் செல்வங் குளிர்ச்சி சாயை 
மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முது கிவ்வைந்தே 
வஞ்சி மேற்செல வோரூர் பா வல்லி மென்மருங்குற் பெண்ணாம் 
தஞ்சமே எளிமை யென்ப தரு பற்றுக்கோடுமாமே.
40 (3) 
அஞ்சனங் கறுப்பு மை திக்கானையி லொன்று முப்பேர் 
மஞ்சரியே பூங்கெத்து மாலை செந்தளிருமாகும் 
அஞ்சலி வணங்கல் வாவற்பறவையு மாகுமென்ப 
இஞ்சியே புரிசை யிஞ்சி யெறுழென்ப வலி தண்டாமே.
41 (4) 
கிஞ்சுக முருக்குச் செம்மை கிருட்டினன்தான் மால் பார்த்தன் 
கஞ்சமே கண்ணாடி கரிக்குருவிக்கும் பேரே 
பஞ்சமே சிறுமை யைந்தாம் பகழி யம்பிதன் குதைப்பேர் 
வஞ்சனை மாயை பொய்யா மாயன் மால் கருநிறத்தோன்.
42 (5) 
குஞ்சியாண் மயிர் புட் பார்ப்புக் குன்றியின் கொடிமுப்பேரே 
வஞ்சமே கபடம் வாளா மாயம் வஞ்சனை பொய் யென்ப 
கஞ்சனே குறளன் வேதன் களங்கந்தான் அழுக்குக் குற்றம் 
கஞ்சிகை சிவிகை யாடை கட்டிடு திரையுமாமே.
டகரயெதுகை
43 (1) 
நடலை வஞ்சனை பொய் யென்ப நடுங்கிய நுடக்க முப்பேர் 
மடல் பனையேடு போல்வ மலரித ழோர் நூற்கும் பேர் 
படர் நடை நினைப்பு நோவாம் பகர்ந்திடில் வீரர்கும் பேர் 
குட நகர் பசு வோர் கூத்துக் கும்பமே கரும்பின் கட்டி.
44 (2) 
மாடமே உழுந்தோ டில்லாம் மழையென்ப குளிர்ச்சி மேகம் 
கூடமின் மறைவு கொல்லன் சம்மட்டி குவட்டி னுச்சி 
சேட னோர்சாதி பாங்கன் செகந்தாங்கு மனந்தனென்ப 
கேடகம் பரிசை வேறோர் கேடிலுர் பலகை முப்பேர்.
45 (3) 
இடங்கரே முதலை தூர்த்தர் குடங்கரின் முப்பேரென்ப 
முடங்கலே மடங்கல் கைதை முங்கில் நோய் ஓலை யைம்பேர் 
படங்கு மேற்கட்டியென்ப பகர் பெருங்கொடி யுமாகும் 
விடங்க மேர் கொடி கொடுங்கை மிதவையே தெப்பஞ் சோறாம்.
46 (4) 
குடிஞை புட்பொதுவும் யாறும் கூகையு யாகுமென்ப 
தடி வய லுலக்கை வில்லு தண்டுமின் தசை யுடும்பாம் 
தொடி வளை யொருபலப்பேர் சூழ்ந்த கங்கணமு மாகும் 
மடி யடங்குதலே சோம்பு வயிறு நோய் புடைவை தாழை.
47 (5) 
படிவமே வடிவ நோன்பாம் பந்தமே கிளையுங் கட்டும் 
வெடியச்சம் பரிமளிக்கு மென்புகை வௌியிம் முப்பேர் 
துடியெலம்பறை காலப்பேர் தூத் தூய்தூன் பற்றுக்கோடாம் 
கொடிறு பூசங் கதுப்பாங் குரவையே கட லோர்கூத்து
48 (6) 
கடிகை நாழிகையே துண்டங் கதவிடு தாழே முப்பேர் 
படிறு பொய் கிள விரண்டாம் பகர்தலே விற்றல் பேசல் 
சுடிகையே மடகு முச்ச சுட்டியு மிட்டபேரே 
இடி யிடிப்பேரே நென்மா வேற்றிடு முறுதிச் சொல்லே.
49 (7) 
நாடி நாழிகை நரம்பாம் நந்தல் கேடுடனே யாக்கம் 
பாடியே நகர நாடு பாசறை யாயரூர்ப் பேர் 
கோடிகந் துகில் பூந்தட்டாங் குடம்பையே முட்டை கூடு 
கோடி யெண் புதுமை தூசாங் குடிமியே வெற்றி யுச்சி.
50 (8) 
உடு விண்மீன் கிடங்கு நாவாயோட்டுங்கோ லம்பி லீர்க்காம் 
கடு விட முள்ளுத்தானே யரிதகி கசப்பு நாற்பேர் 
படு மரக்குலையே கள்ளுப் பரவு நீர்நிலை நன்மைப் பேர் 
படுதலே யொலி யின்றாதல் பகரி லுண்டாதல் பூத்தல்.
51 (9) 
மாடுபொன் பக்கஞ் செல்வம் வைகல் வைகறை நாடங்கல் 
சேடென்ப பெருமை நன்மை திரட்சியே யழகு நாற்பேர் 
பா டிடம் பெருமை யோசை பட்டே பட்டாடை சிற்றூர் 
ஈடென்ப குழைவே யொப்பே வலியொடு பெருமையும் பேர்.
52 (10) 
மடையென்ப மதகு சோறு மணிப்பணிக் கடைப்பூட்டும் பேர் 
படைபடைக்கலம் கலப்பை படுக்கை பல்லணமே தானை 
இடை நடு வென்ப மற்று மிடப்பெயர் நுசுப்புமாமே 
மட மறியாமை சத்திர மன்னிய முனிவாசப் பேர்.
53 (11) 
வாடை யென்பதுதான் வீதி வடக்காற்றுந் தானுமாமே 
ஆடு மேழகம் வெற்றிப்பேர் அல்கல்நாள் சுருங்கல் வைகல் 
கோடை மேல்காற்றினொடு குதிரை வெண்காந்த ளேன்ப 
ஓடை நீர்நிலை கிடங்கே யொரு மரம்வல்லி பட்டம்.
54 (12) 
அடுப் பென்ப பரணி நாளே யச்சமே சுல்லி முப்பேர் 
வடுச்செம்பு தழும்பு வண்டாம் மத்தக நெச்சி சென்னி 
இடக்கடரே மறைத்த வார்த்தை கும்பமு மென்ப நூலோர் 
கடைப்பிடி மறப்பிலாமை கருதிய தேற்றமாமே.
55 (13) 
பட்டமே ஓடை தூசு பதவி வாள் கவரிமா வாம் 
புட்டமே காகமாகும் புடைவையு நிறைவு முப்பேர் 
குட்டமே தொழுநோய் ஆழங் குளமெனப் பெயர் முப்பாற்றே 
வட்டமே பரிசை நீர்ச்சால் வலயங் கைம் மணி தூ சூர் கோள்.
56 (14) 
திட்டையே யுரலு மேடுந் திண்ணையு நண்ணு முப்பேர் 
தட்டை வேய்த் தினைத்தாள் கிள்ளைதனைக் கடிகோலே முண்டம் 
கிட்டியே தலையீற்றாவாங் கிருட்டியாந் தாள முப்பேர் 
கட்டளை நிறைகல் லொப்பே யிட்டிகை யியற்ற லாணி.
57 (15) 
நாட்டங் கண்ணோர்பண் வாளாம் நாகு சங் கிளமை நத்தை 
ஓட்ட மேலுதடே தோல்வி யுயிரென்ப காற்றறே சீவன் 
கோட்டங் கோண் படப்பை நாடு கோயி லவ்விய மான் கொட்டில் 
தோட்டியங்கு சங்க பாடந் துணையென்பதளவும் ஒப்பும்.
58 (16) 
தடமலை பெருமை கோணஞ் சரிகரை அகலம் வாவி 
அடல் கொலை வலிபோராகும் அருத்தமே பொருள் பொன் பாதி 
உடல் பொரு ளாகமென்ப வோங்கல் வெற் புயர மூங்கில் 
விடமே யிடபராசி விடை மரக்கொம்பு முப்பேர்.
59 (17) 
கடகமே சேனை வட்டங் கைவளை மதி னாற்பேரே 
வடகந் தோல் அத்தவாளம் வலமென்ப திடமே வெற்றி 
படுவி கள் விற்பாள் குண்டம் பரமென்ப கவச மெய்யாம் 
நொடி பிதிர் கிளவியாகு நூ னநிச்சயமே குன்றல்.
60 (18) 
கடங் கயிறு வாக் கதுப்புக் கான் சுர முடம்பு நீதி 
குடங் கடா மீமம் யானைக் குழாங் கடன் முழவைந் தேழாம் 
மடங்கலே சனி சீய மறலி நோ யுக மூழித்தீ 
படங் கரிமுகபடா நற்றுகில் பாம்பின்பட முப்பேரே.
61 (19) 
ஆடலே பெண்ணான் கூடல் வார்த்தைக் கூத்தாடல் வென்றி 
பாடலஞ் சிவப்பினோடு பாதிரி குதிரை முப்பேர் 
கோடரங் குரங்கு சோலை கொம்பொடு குதிரையாகும் 
ஆடவர் புருடர் நாமம் ஆ மிளையவர்க்கும் பேரே.
62 (20) 
கடிமணம் விரைவு கூர்மை காலம் பேய் விளக்கங் காப்பு 
வடி வச்சம் வாச மையம் வரைவு விம்மித மேழாறாம் 
வடுகே யிந்தளராகப்பேர் மருதயாழ் திறனுமாமே 
வடவையே குதிரைப் பெட்டை யுவாப்பிடி வடவைத் தீயாம்.
63 (21) 
கோடு சங்கூது கொம்பு மரக்கொம்பு விலங்கின் கொம்பு 
நீடு செய் வரம்பு குன்றின் முகடு நீர்க்கரை யேழ்பேராம் 
மோடு மேடு தரமாகும் முறுவலே நகைத்தல் பல்லாம் 
ஆடி யே யோர்மாதங் கண்ணாடி யுத்தராடமாமே.
64 ( 22) 
தட்டுத்தேர் நடுவு குற்றந் தட்டொடு பரிசை முட்டாம் 
செட்டி வாணிகன் செவ்வேளாஞ் செப்புரை கரண்டகப் பேர் 
மட்டென்ப தெல்லை கள்ளாம் மார்கமே சமயம் வீதி 
பட்டிகை யென்ப கச்சுப் பகட்டுட னிரதமாமே.
65 ( 23) 
கடைமுடி விடம் வாயிற்பேர் களே வரம்பிண முடம்பாம் 
உடை துகில் செல்வமென்ப வுடுக்கை தண்ணுமை துகிற்பேர் 
அடை யிலை கனமே யப்ப மடுத்தல் செல்வழி ஐம்பேராம் 
நடைவழி ஒழுக்கஞ் செல்வம் நாரென்ப கயி றன்பாமே.
66 (24) 
விடையெதிர்மொழியு மேறும் விடுத்தலும் விளம்பு முப்பேர் 
கிடை சடை யுவமை நெட்டி கீதமே யிசையும் வண்டும் 
படியங்கவடி சோபனம் பகை குண முவமை பாராம் 
குடி குலம் புருவ மூராங் கொடி வல்லி துவசங் காக்கை.
67 (25) 
நட்டமே நடனங் கேடா நகரென்ப மனையு மூரும் 
தொட்டலென்பதுவே யுண்டல் தோண்டல் கைதீண்டல் முப்பேர் 
தட்டலே தடை கிட்டற்பேர் தையெரு மாதம் பூசம் 
கட்டலென்பது தடுத்தல் களைதல் பந்தித்தல் கள்ளல்.
68 (26) 
புட்கர நிறைவு பாண்டமுகந் தீர்த்தம் புனல் வான் சேனம் 
கட்கம் பங்கயமே யானைக்கைநுனி குரு கீ ரைந்தாம் 
வெட்சி யென்பதுவே செச்சை மிகு நிரைகவர்த லென்ப 
பெட் பென்ப பெருமை யன்பாம் பிரசந் தேன் மது வண்டாமே.
69 (27) 
அடுதலே அட்ட லென்ப அடர்தலு கொலையு முப்பேர் 
சடிலமே நெருங்கலோடு சடை குதிரை முப்பேரே 
படலையே படர்தன் மாலை பதலையே வாசிக்கோவை 
கிடுகு தேர் மரச்சுற்றின் பேர் பரிசைக்குங் கிளத்தலாமே.
70 (28) 
படலிகை பீர்க்கு வட்டம் பரந்த கைம்மணி பூந்தட்டாம் 
கொடியனே கொடியன் கேதாங்குண்டாழந்தாழ்வாண்மாவே 
தொடுவென்ப மருதப்பூமி தோட்டங்கைதவ முப்பேரே 
முடிமயிர் முடியே சென்னி மகுடமுமொழியலாமே.
71 (29) 
ஆடகந்துவரை பொன்னாம்அஞரறிவிலரே துக்கம் 
கோடகமுடியருப்புங்குதிரையும்புதுமையும்பேர் 
பீடிகையாவணம் பூந்தட்டொடுபீடமுப்பேர் 
தோடு பூவிதழே பெண்ணை மடல் போல்வ தொகுதிக்கும்பேர்.
72 (30) 
அடரென்பநெருங்குதற்பேரைம்மையுவடிவுமாகும் 
விடர்முனியிருப்புத்தூர்த்தர்கமர் வெற்பின் முழைகாடைம்பேர் 
விடலையே தலைவன் பேரும் விறலொன்றன்பேருமாகும் 
அடிசெண்டு வௌி தாளாதி கவிதையின்பாதமாமே.
ணகரயெதுகை
73 (1) 
புணர்வு தோய்ந்திடலிசைப்பாம் பொழில் புவிபெருமை சோலை 
உணர்வென்ப தௌிவே யூடல் ஒழிதலே அறிவுமாகும் 
குணமென்ப கயிறு பண்பு கும்பம் வின்னானி நாற்பேர் 
கணமுடுநோய் திரட்சிகாலநுட்பம் பேய் வட்டம்.
74 (2) 
ஆணமே குழம்போடன்பாம் அலநாஞ்சில் அமையுமென்றல் 
ஓணமாயோனாளாறாம் ஊதிய மிலாபங் கல்வி 
காணமே பரியூண் செக்கோர் காணம் பொற்காசு நாற்பேர் 
கோணலே மாறுபாடுங் கூனுமாம் வளைவுமாமே.
75 (3) 
குணில் குறுந்தடி கடிப்பாங் குல்லையே துளவு வெட்சி 
மணி நவமணியே கண்டை வனப்பொடு கருமை நன்மை 
துணி சோதிநாளே துண்டந் துளி மழைத்துளி பெண் ணாமை 
பிணி முக மயில் புட்பேராம் பிசிதம் நீ ரிறைச்சி வேம்பு.
76 (4) 
நா ணிலச்சைப்பேர் தானே கயிறென்று நாட்டலாகும் 
தோணியே கடைநாள் வங்கந்தொடு கணை தெப்பஞ் சேறு 
வாணியே யோர்கூத்தின்பேர் வாக்கு நாமகளுமாமே 
ஏணியே யுலகோடெல்லை யிறைவை மானென்றுஞ் சொல்லும்.
77 (5) 
திணை நிலங் குல மொழுக்கஞ் செவி யென்ப காது கேள்வி 
பிணை யாசை விலங்கின்பெண்பேர் பிலவங்கங் குரங்கு தேரை 
கணை யம்பு திரட்சியும் பேர்கட்சியே காடுங் கூடும் 
பணை வயல் பரியின் பந்தி பருத்தல் வே யரசு பீடாம்.
78 (6) 
யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை 
பாணந்தான் மேகவண்ணக் குறிஞ்சி யெய்கணை பூம்பட்டாம் 
சேணென் பதகலநீளஞ் செப்பிடி லுயர முப்பேர் 
ஆணை மெய்யுடனே வென்றி சூ ளேவலாக நாற்பேர்.
79 (7) 
அண்டமாகாய முட்டை அயிலென்ப வேலே கூர்மை 
துண்டமே சாரைப்பாம்பு துணியொடு வதன மூக்காம் 
கண்டமே கவசம் வெல்லங் கழுத் திடுதிரை வாள் துண்டம் 
முண்டகந் தாழை கள்ளு முளரி மத்தக முள் மூலம்.
80 (8) 
அண்டரே பகைவர் வானோர் ஆய ரென்ராகு முப்பேர் 
சுண்டனே சதய நாளுஞ் சூரனும் வேறுகாட்டும் 
கண்டல் கேதகை முள்ளிப்பேர் கரைதலே விளித்த லோசை 
பண்டம் பொன் பணிகாரப்பேர் பாகு பால் குழம்பு பாக்காம்.
81 (9) 
விண்டென்ப மாயோன் வெற்பு மேகமே மூங்கில் காற்றாம் 
தொண்டென்ப பழமை யொன்பான் றொழும் பொடு வழிபாடாமே 
தண்டென்ப குழாயே வீணை தடி படை மிதுனம் ஓந்தி 
வண்டென்ப சங்கு குற்றம் வளை யளி வாளி யைம்பேர்.
82 (10) 
உண்டையே திரளை யாகம் உறுபடை வகுப்பு மென்ப 
தொண்டை யாதொண்டை கொவ்வை தூங்கும் யானைத் துதிக்கை 
கொண்டையெ மயிர் முடிக்கு மிலந்தையின் கனிக்குங் கூற்றாம் 
கண்டிகை பதக்கம் வாகுவலயமே கலன் பெய்செப்பு.
83 (11) 
தண்ண மோர்கட் பறைப்பேர் தறித்திடு மழுவுமாகும் 
வண்ண மேர் சந்தம் பண்பாம் மறை யிராசியமே வேதம் 
பண்ணென்ப பாட்டும் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர் 
மண் ணணு வொப்பனைப்பேர் முழவின் மார்ச்சனை யுமாமே.
84 (12) 
அணங்கு நோய் அழகு தெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம் 
துணங்கையே விழாப் பேய் கூத்தாம் ஆதிரைநாளுஞ் சொல்லும் 
குணுங்கர் தோற்கருவி மாக்கள் குயிலுவர் இழிஞர் முப்பேர் 
துணங்கற லிருள் விழாவாந் தோன்றலே சுத னாதன் பேர்.
85 (13) 
புணரியே வாரி நீரிற்பொருதிரை கரை முப்பேராம் 
பணிலமே சலஞ்சலஞ் சங்கிருபெயர் பகரலாமே 
கணி வேங்கை மரமதாகுங் கழனிசூழ் மருதமும் பேர் 
பணியே தோற்கருவி வார்த்தை பாம்பு செய்தொழிலு மாமே.
86 (14) 
பாணி யூர் நீர் கையோசை பற்றுக்கான் போது நாடு 
சேணுறு சோலை பண்டஞ் சிறந்த பல்லியம் பன்னொன்றாம் 
தாணுவே சைலங் குற்றி சங்கர நிலை தூ ணைம்பேர் 
வேணியே சடை விசும்பாம் வியாளமே புலியும் பாம்பும்.
87 (15) 
குண்டலங் குழை விசும்பாங் குபேரனே தனதன் சோமன் 
மண்டலம் பரி யூர் வட்டம் மந்தியே யூகம் வண்டு 
கொண்டலே முகில் கீழ்காற்றாங் கோட்டியே வாயில் கூட்டம் 
மண்டலி பூனை பாம்பு மண்ணொடு நாயுமாமே.
88 (16) 
புண்டரீகந் திக்கானை புலி வண்டு கழுகு கஞ்சம் 
தண்டமே யானைசெல்லும்வழி தண்டாயுதங் குடைக்கால் 
பிண்டி நென்மா வசோகாம் பிதாச் சிவன் பிரம னாரை 
கண்டகஞ் சுரிகை முள் வாள் களவென்ப களாச் சோரப் பேர்.
89 (17) 
பண்ணவன் முனிவன் தேவன் பகர்குரு யருக னார்ப்பேர் 
தண்ணடை மருதஞ்சாரூர் நாடேன யிருபேர் சாற்றும் 
வண்மையே வழங்கல் வாய்மை வளம்புகழ் வலியாமென்ப 
ஓண்மையே மிகுதி நன்மை யொழுங் கறி வழ கைம்பேரே.
90 (18) 
எண் வலி யெள் ளிலக்கம் எளிமை சோதிடம் விசாரம் 
கண் ணிடங் கணுவே கண்ணாங் காஞ்சி மேகலை யோர்பண்ணாம் 
விண் முகில் சுவர்க்கம் வானாம் விபுலம் பார் விரிவு பீடு 
பண்ணையே வய னீர்த் தாழ்வு மருத மாத்துயிலும் பாழி.
91 (19) 
காண்டமே திரை கா டம்பு கமண்டலங் கலன் பெய்செப்பு 
நீண்டகோன் முடிவு தூசு நீர் படைக்கல மீரைந்தாம் 
பாண்டி லே றூர்தி வட்டம் பணை கட்டில் விளக்குத் தாளம் 
ஈண்டென்ப இவ்விடத்தோ டிப்படி சடிதியும்பேர்.
92 (20) 
அண்டச முதலை யோந்தி அரணை புள் ளுடும்பு பல்லி 
நண்டு மீன் தவளை யாமை நாக மிப்பியு மீராறாம் 
சண்டன் கூற்ற வலி வெய்யோனாந் தாள் கதவுறுதாள் பாதம் 
சுண்டையே சுண்டைக் கள்ளாஞ் சுவர்கமே சுவர்கங் கொங்கை.
93 (21) 
பணமென்ப தரவின்பையும் பாம்பும் பொற்காசும் முப்பேர் 
மணமென்ப வாசங் கூட்டம் வதுவையு மாகுமென்ப 
பணவையே பரணும் பேயும் பையுளே சிறுமை நோயாம் 
நுணவை யெண்ணோலை பிண்டி நுனியென்ப நுதி நுண்மைப்பேர்.
தகரயெதுகை
94 (1) 
மதலையே கொன்றை பிள்ளை மரக்கலங் கொடுங்கை தூணாம் 
சிதலை நோய் துணிசொல்லென்ப சீதநீர்குளிரே மேகம் 
பதலை யோர்கட்பறைப்பேர் பருவரை தாழிக்கும் பேர் 
கதலியே வாழை தேற்றுக் காற்றாடி துவச நாற்பேர்.
95 (2) 
இதழ் பனையேடு பூவின் இத ழுதடென விம்முப்பேர் 
கதழ்வு வேகங் சிறப்பாங் களி செருக்கொடு குழம்பு 
மதுகமே யிருப்பை யொட்டி மதுரமாந் தராவுமாமே 
சிதட னந்தகன் மூடன்பேர் திதி பக்க நிலை பேறும்பேர் .
96 (3) 
ஆத னாருயி ரோர் வில்லான் அங்கி யென்பது தீச் சட்டை 
போதகம் யானைக்கன்று போற்றிய இளமைக்கும் பேர் 
ஏதந் துன்பங் குற்றப் பேர் இமமே மயானங் காட்டம் 
சூதன் தேர்ப்பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை.
97 (4) 
சூத மாமரமே வண்டு சூதுட னிரதந் தோன்றல் 
சூதகமே யாசௌசந் தோகைமார் தோயாப்பூப்பாம் 
பூத மா லிறந்தகாலம் புனித மைம்பூதஞ் சீவன் 
மாதவந் தவம் வசந்தம் வாதமே தருக்கங் காற்றாம்.
98 (5) 
மதன் வலி வேள் வனப்பாம் வலித்தலே வளைத்தல் பேசல் 
பதங்கம் புட்பொது விட்டிற் பேர் பலி பூசை பிச்சை நீராம் 
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப் பட்டதாமே 
நிதம்பமே அல்கு லென்ப நெடுமலைப் பக்கமும்பேர்.
99 (6) 
சதி யுரோகணி கற்பாட்டி வஞ்சனை தாளவொத்து 
விதியென்ப வினை யயன்பேர் வேட்டுவன் மகநாள் வேடன் 
பதி யிறை கேள்வ னூராம் பதுக்கையே பாறை தூறு 
பிதிர் கதை நொடி தூவற்பேர் பிண்டமே திரளை பிச்சை
100 (7) 
ஆதியே முத னேரோடல் அருகன் மா லீசன் வேதன் 
பூதியம் புவி யுடற்பேர் பொம்மலே பொலிவுஞ் சோறும் 
பாதிரிப் பாடலப் பேர் பணைத்தெழு மூங்கிற்கும் பேர் 
ஏதி யாயுதம் வாளென்ப இழை நூ லாபரண மாமே.
101 (8) 
சாதியே பிரம்பு கள் ளோர்தரு சிறுசண்பகப் பேர் 
போத ஞானம் தோணிப்பேர் புகல் குதி ருடல் சொல் வெற்றி 
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பாம் 
ஓதிமம் அன்னம் வெற்பா முருத்தலே தோற்றல் கோபம் .
102 (9) 
சுதை மகள் கறவாத்தேனு சுண்ணச்சாந் தமுது நாற்பேர் 
புதையென்ப கணையின் கட்டும் புதுமையும் மறைவு முப்பேர் 
மதுவென்ப நறவுந் தேனும் வசந்தகாலமுமா மென்ப 
கதை தண்டாயுதமே வார்த்தை காரணமிம் முப்பேரே
103 (10) 
சீதையே பொன்னாங்காணி படைச்சால் சீராமன்றேவி 
மேதை தோல் புத னிறைச்சி மிக்க பேரறிவு கள்ளாம் 
கோதை முன்கைத் தோற் கட்டி குழறார் காற் றொழுங்கு சேரன் 
ஓதை பேரொலி மதிற்பேர் உக்கந் தீ யிடை யா னேறு.
104 (11) 
அத்தர் பொன் பாதிகை கண்ணாடி சொற்பொருள் கா டோர்நாள் 
புத்தகங் கோசமென்ப சித்திரப்படாமு மாமே 
நத்தமே யிருளுமூரு நந்துட னிரவு நாற்பேர் 
துத்த மோரிசை நாய் பாலே வயிறு கண் மருந்துஞ் சொல்லும்.
105 (12) 
அத்தென்ப அரைஞாண் செம்மை யசைச்சொலோ டிசைப்பு நாற்பேர் 
கொத்துப் பூங்கொத்துத் தொண்டாந் தூம்பு வேய் துளை மரக்கால் 
தத்தை மூத்தாள் கிளிக் காந்தழல் கிளிகடிகோல் செந்தீ 
உத்தர மூழித்தீ மேலொடு மறுமொழி வடக்காம்.
106 (13) 
கூத்தனே யுயிர் நடன்பேர் குலங் குடி கோயில் கூட்டம் 
ஊழ்த்தலே நினைத்தல் செவ்வியுறு பதனழிவு முப்பேர் 
பாத்தென்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்த முப்பேர் 
தீர்த்தமே விழாவு நீருந் தீர்த்தனே யருக னாசான்.
107 (14) 
குத்தி மண் ணடக்க மென்ப கோணம் வாள் குதிரை மூக்காம் 
பத்தியே முறை யொழுக்கம் பகர் வழிபாடு முப்பேர் 
அத்தி யார்கலியே யானை யத வெலும் பாகநாற்பேர் 
சத்தியஞ் சபத மெய்யாந் தபுதலே சாவுங் கேடும்.
108 (15) 
பித்திகை கருமுகைக்குப் பெயர் சுவர் தலமுமாகும் 
கத்திகை தொடை விகற்பந் துவசமே கமழ் வாசந்தி 
உத்தி செந்திரு வுருப்புச் சுணங்கு ரையாடன் முப்பேர் 
துத்தியே சுணங்கு பாம்பின் சுடர்பொறி புத லொன்றாமே.
109 (16) 
சித்தரபானு செந்தீ திவாகர னாண்டொன்றின் பேர் 
பத்திர மிலை வனப்புப் படைநன்மை சிறகே பாணம் 
சித்திர மழ கோர்பாடல் சிறந்த விம்மித மேரண்டம் 
சத்திரங் குடையே யன்னசாலை கைவிடா வேல் வேள்வி.
110 (17) 
காத்திரங் கன மெய் சீற்றங் களிற்றின் முன்காலே கீரி 
நேத்திரங்கண் பட்டாடை நீலியே கருமை துர்கை 
கோத்திரம் புடவி தானே குலமொடு மலையுமாமே 
பாத்தியே சிறுசெய் யில்லம் பகுத்தலும் வகுத்த நாமம்.
111 (18) 
சதமிலை யிறகு நூறு சத்தமே யோசை யோழம் 
கதவமே கதவு காப்பாங் கழங்கு போய் நடங் கழற்சி 
பதமூர லின்பஞ் செவ்வி பதவி தாள் வரிசை வார்த்தை 
மதியோர் முன்னிலை யசைச் சொன் மாத மம்புலி புத்திப்பேர்.
112 (19) 
பீதகஞ் சாந்து பொன்மை பெருந்தனம் இருவேலிப்பேர் 
சாதகம் வானம் பாடி சனனம் பாரிட முப்பேரே 
சேதகஞ் சேறு செம்மை தேயந்தா னுடம்பு நாடாம் 
மாத ரோர்ரிடைச்சொல் காதல் வனப்பொடு மகளிராமே.
113 (20) 
சோதி மால ருகன் பானு சுடர்விளக் கீச னோர்நாள் 
பூதியே நரகஞ் செல்வந் துர்கந்தம் புழுதி நீறாம் 
வீதியே தெரு நேரோடல் மேலென்ப திடம் விண் மேற்காம் 
மாதிரந் திசை யாகாயம் மலை யானை நில மைம்பேரே.
114 (21) 
தாது பொன்முதலா மேழும் சடமுறு தாதோரேழும் 
பூதமோர் ரைந்துங் காவிக்கல்லுடன் புகலு நாற்பேர் 
வேதிகை பலகை திண்ணை வெதிரேன்ப செவிடு வேணு 
கேதுவே சிகி பதாகை கிள்ளைதான் குதிரை தத்தை.
115 (22) 
கதுப்பே யாண்மயிரும் பெண்பால்மயிரொடு கவுளு முப்பேர் 
விதப்பே கம்பித மிக்காகும் வித்தம் பொன் பழிப்பு ஞானம் 
அதிர் பொலி நடுக்கமென்ப அகப்பாவே புரிசை மேடை 
ஒதுக்கமே நடை மறைப்பாம் ஒருத்த லாண்விலங்கு வேழம்.
116 (23) 
பத்திரி பறவை காளி பரி யிலை பாணமைம் பேர் 
அத்தரி கழுதை விண் ணெட்டகம் பரி அசலம் அம்பாம் 
சத்தியே யுமை வேல் கான்றல் குடை வலி துவசந் தானாம் 
சுத்தியே யகல் வெண்சங்கஞ் சுத்த மோர் கருவிக்கும்பேர்.
117 (24) 
புத்தன்மாலருகன் சாத்தன் பூழில்தானகில் பூமிப்பேர் 
புத்தேளே புதுமை தேவாம் பூட்கை தோல் மேற்கோள் யாளி 
கைத்தல்துன்னங்கைத்தற்பேர் சாறு கள் விழவு தாறாம் 
முத்தமே பிரியமோட்டம் மருதநன்னிலமுத்தாமே.
118 (25) 
அத்தனே மூத்தோன் தந்தை அரனொடு குருவுந்நாற்பேர் 
சித்தமே திட முள்ளப் பேர் சேகரந் தலை மா வேராம் 
கைத்தலே சினங் கைப்பாகுங் கஞறலே பொலிவு கன்றல் 
சித்தென்ப செயமே ஞானஞ் செய் யென்ப நில மேவற்பேர்.
119 (26) 
உத்திரஞ் சித்தரஞ்சேர்ந்தொளிருமில்லுறுப்போ டோர்நாள் 
பைத்தலே முனிவினோடு பசுத்தலும் பகரலாகும் 
மத்திகையே சம்மட்டி சுடர்நிலைதண்டு மாலை 
மத்தென்ப தயிர்மத்தோடு மத்தமு மிருபேராமே.
120 (27) 
மதர்வு மேவுதல் வனப்பு வலி யிட மிகுதி யைம்பேர் 
புதவென்ப கதவோர் புல்லாம் புணர்சியே கலவி கூடல் 
சித ருறி திவலை வண்டு சீலையின்துணி நாற்பேரே 
அதர் வழி புழுதி யாடடின்அதரு நுண்மணலு மாமே.
121 (28) 
முதலை செங்கிடை யிடங்கர் முருந்தென மெழியலாகும் 
அத மிறங்குதல் பாதாங் கீழு மென்றைறுயு முப்பேர் 
கதி நடை விரைவே நான்கு கதியொடு கதியுங் காட்டும் 
மத மிபமதஞ் செருக்காம் மாயையே மாயஞ் சத்தி.
122 (29) 
பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மைப் பேர் 
பேதையோர் பருவம் மூடன் பெண் தரித்திரனே நாற்பேர் 
வாதுவர் யானைப்பாகர் வயப்பரிமாவடிப் பேர் 
மூதிரை யாதிரைப்பேர் முக்கணன் பேருமாமே.
123 (30) 
தாதியே பரணி நாளும் அடிமையும் யிருபேர்சாற்றும் 
போதுதான் காலம் பூவாம் போர்வை தோல் கவச மீக்கோள் 
சாதமே திடம் பதப்பேர் தகைமை ஏர் இரியியல்பு பீடாம் 
வீதலே கெடுதல் சாவே யிலம்பாடும் விளம்பு முப்பேர்.
நகரயெதுகை
124(1) 
இந்தன மிசையே காட்டம் எரி யிடு கனலுமாகும் 
சந்தமே நிறம் வனப்புச் சாற்றிய கவிதை சாந்தம் 
கந்த மிந்திரியம் பகுத்தல் கழுத்தடி கிழங்கு நாற்றம் 
மந்திரம் விசாரம் கோயில் வாசியின் குழாம் வீடே கள்.
125(2) 
அந்திலாங் கசையிடப் பேர் அணவலே அணுகல் புல்லல் 
சந்தியே அந்தி மூங்கில் சதுக்கமும் யிசைப்புமப்பேர் 
நந்தியே சிவனு ேமுறும் நந்தி யீச்சுரனு முப்பேர் 
உந்தி தேருருளே யாறே உவரி நீர் சுழியே கொப்பூழ்.
126 (3) 
கந்து பண்டியுளிரும்புங் கம்பமும் யாக்கைமூட்டும் 
கந்துகங் குதிரை பந்தாங் கன மென்ப புயல் பாரப் பேர் 
பந்து கந்துகமு மட்டுப்படர்நீர்தூந்துருத்தியும் பேர் 
குந்தள மாதரோதி குழற்கொத்து குருளை முப்பேர்.
127 (4) 
வேந்தனே அரசன் திங்கள் வியாழ னிந்திர னாதித்தன் 
காந்தார மிசை காடென்ப காழகங் கருமை தூசாம் 
ஏந்தலே பெருமை மேடா மெஃ குருக்கொடு வேல் கூர்மை 
கூந்தல் பெண் மயிர் பீலிப்பேர் குவலயங் குவளை பூமி.
128 (5) 
அந்தரம் முடிவு பேதம் அண்டமோடிடை நாற்பேரே 
கந்தரமென்ப மேகங் கழுத்தொடு மலை முழைப்பேர் 
மந்தாரந் தரு மரஞ் செவ்வரத்தமு மாகுமென்ப 
சிந்துரம் புளியே யானை செங்குடை திலகம் செம்மை.
129 (6) 
கந்தருவம் பண்வாசி கவந்த மென்பது நீர் மட்டை 
குந்தமே ஒரு வியாதி குருந்தொடு குதிரை கைவேல் 
செந்துவோர் நரக மோரி சீவனோ டணுவு நாற்பேர் 
சிந்து நீர் முச்சீ ராறு கடல் குற ளொறுதேசப்பேர்.
130 (7) 
அந்தி முச்சந்தி பாலையாழிசை இரவு மாலை 
நந்தென்ப நத்தை சங்கா நாறுதல் மணமுண்டாதல் 
மைந்தனே திறலோன் சேயாம் வசந்தமே வேனில் வாசம் 
வந்தியர் புகழ்வோர் பேரு மலடிகள் பேருமாமே.
131 (8) 
விந்தமோ ரெண்ணும் வெற்பும் விருத்தமே வட்டம் மூப்பாம் 
அந்தணர் அறவோர் பார்ப்பர் அணி படை வகுப் பணிப்பேர் 
அந்தகன் குருடன் கூற்றாம் அங்காரகன் றீச்செவ்வாய் 
மந்தகன் சனி கூர்ப்பில்லாமனுடனு மிருபேராமே.
பகரயெதுகை
132 (1) 
உப்பு மெல்லியலா ராடல் உவர் கடல் இனிமை நாற்பேர் 
செப்பமே நடுநிலைப்பேர் தெருவொடு நெஞ்சுமாகும் 
துப் பரக் கூற்றந் தூய்மை துகிர் பகை யனுபவப் பேர் 
கப்பண மிரும்பிற்செய்த நெருஞ்சின்முட் கைவேலாமே.
133 (2) 
தாபரம் மலைபோல் நிற்றல் சடமொடு தருவு முப்பேர் 
நீப முத்தரட்டாதிப் பேர் நிமித்த நீர்க் கடம்பு மாகும் 
யூபமே கவந்தம் வேள்விகுறு தம்பம் படைவகுப்பாம் 
சாபமே சபித்தல் வில்லாந் தளிமமே யழகு மெத்தை .
134 (3) 
சீப்பென்ப கதவிற் றாழும் சீவு கங்கமுமா மென்ப 
நாப்ப ணென்பது தேர்த்தட்டு நடுவும் யாழ்வுறுப்பு முப்பேர் 
காப்பென்ப காவலோடு கதவும் வெண்ணீருமாகும் 
யாபென்ப கவிதை காட்டாம் இறால் தேன்கூ டெருது மீனே.
மகரயெதுகை
135 (1) 
சமன்யமன் நடுவுமாகுஞ் சலமென்ப வயிர நீர் பொய் 
கமல நீர் வனசமும்பேர் கலாஞ் சினங் கொடுமையாகும் 
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர் 
ஞமலி நாய் மயில் கள்ளென்ப நனை கள்ளு மலர்மொட்டும் பேர்.
136 (2) 
சாம மோர்வேதம் பச்சை சாமமே கருமை நாற்பேர் 
வாமமே குற ளிடப்பால் வனப்பொடு தொடையுமாமே 
பூ மலர் வனப்புக் கூர்மை பொலிவொடு பிறப்புப் பூமி 
ஏமமே சேமங் காவல் இன்பம் பொன் னிரவே மையல்.
137 (3) 
உம்பரே தேவராகும் உயர்நிலமுடன் மேலும் பேர் 
வம்மென்ப புதுமை கச்சு மண நிலையின்மை நாற்பேர் 
கும்பமே குட மிராசி கும்பி மத்தகமுமாகும் 
கும்பென்ப சிம்பு தோடாஞ் சுகமென்ப கிளியே யின்பம்.
138 (4) 
ஆம்பல் வேய் கள்ளுக் கவ்வை யல்லி வங்கியமே யானை 
சாம்பல் கூம்புதல் பழம்பூத் தமிழென்ப தினிமை நீர்மை 
தாம்பென்ப கயிறுதானே தாமணி தனக்கும் பேராம் 
காம்பு வேய் மலர்த்தாள் பட்டே கடிமலர்க் கொம்பு நாற்பேர்.
139 (5) 
அம்மையே வரு பிறப்பும் அழகுமாந் தாயுமாகும் 
சும்மையென்பதுவே நெற்போர் நா டொலி சுமையுஞ் சொல்லும் 
செம்மை செவ்வையுஞ் சிவப்புந் திரிதலே யுலாவல் கேடாம் 
கொம்மையே யிளமை வட்டங் கொங்கை கைகுவித்துக்கொட்டல்.
140 (6) 
அம் அழகு அசைச்சொல் நீராம் அழனந் தீ பிணமு மாகும் 
கம்மென்ப தலை ஆகாயங் கனங் கானீர் விதி வெளுப்புச் 
செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன் 
கம்மியர் கைவினைப்பேர் கண்ணாளர் தாமுமாமே.
141 (7) 
வாமனங் குறள் புராண மாதிரக்கயத்தி லொன்றாம் 
காமரம் அத்தநாளோ டடுப் பிசைப்பொதுவுங் காட்டும் 
நேமி சக்கரம் பார் வட்டம் நேமி புட் கட லையைம்பேரே 
தேமென்ப திடந் தித்திப்புத் தேன் நாற்றந் திசை தேசப்பேர்.
142 (8) 
தாமம் வெற் பொழுங்கு கொன்றைச் சாந் தொளி நகரந் தாம்பு 
பூ மணிக்கோவை மாலை பொருகளங் கரி யீராறாம் 
சோம னோர்வள்ளல் லிந்து சுரும்பென்ப மலையும் வண்டும் 
சாமியே முதல்வன் செவ்வேள் தலைவி ஆசான் வெறுக்கை.
143 (9) 
குமுதமே யடுப் போர்திக்கின்குஞ்சர மொலி வெண்ணெய்தல் 
சிமயமே மலை வெற்புச்சி தீத் தீயே நரகு தீங்காம் 
அமறலே பொலிவு துன்னல் அரிறூறு பிணக்கம் மாசு 
சிமிலியே குடுமி சிக்கஞ் சிள்வீடு தானுமாமே.
144 (10) 
சம்புவே இரவி நாவல் சங்கரன் அயன் மா லோரி 
தும்பியே களிறு வண்டாந் துன்னலே செறிதல் சேர்தல் 
கம்புளே சங்கு சம்பங்கோழி யென்றிருபேர் காட்டும் 
அம்பரங் கடல் விண்தூசாம் அண்ணலே தலைவன் பீடு.
145 (11) 
கிம்புரி முடி தந்தப்பூண் கேட்டைதான் முகடி யோர்நாள் 
கும்பி சே றானை பூதி குலைதான் செய்கரை காய்க்கொத்தாம் 
உம்ப லாண்விலங்கு வேழம் உயர்குல மெழுச்சிக்கும் பேர் 
அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்தலர் தூற்றலாமே.
146 (12) 
கம்பலை அச்சம் ஓசை கம்பிதந் துன்பம் நாற்பேர் 
செம்புலம் பாலைசேருந்திணை செருக்கள மிரண்டாம் 
தம்பபே கவசந் தூணாஞ் சமழ்தலே வருத்த நாணம் 
கம்பமே நடுக்கந் தம்பங் கந்தனே அருகன் செவ்வேள்.
147 (13) 
அமரரே விபுதர் தெவ்வர் அவந்தி தாம் கிள யோரூராம் 
அமுது பால் தேவருண்டியாகு மின்சுவையு முப்பேர் 
அமலையே ஆரவாரம் அயினியோ டுமையுமுப்பேர் 
தம மிருள் ராகுவின்பேர் சாரங்கம் விற்பொது மால் வில்லாம்.
148 (14) 
ஆம்பிரம் புளிமா தேமாவாம் புளிப்பினுக்கு மப்பேர் 
சாம்பு பொன் பறையாமென்ப தாண்டவங் கூத்தே தாவல் 
பாம்பென்ப கரை மராளம் பை யராப்படமே பச்சை 
ஆம்பியே யொலி காளானாம் அயிராணி யுமை யிந்திராணி.
149 (15) 
காமனே வாசவன் வேள் கழுதுந் திப்பிலியு மாகும் 
காமமே விரகம் ஆசை கணிச்சிதான் மழுவே தோட்டி 
பூமனே பிரமன் செவ்வாய் புரையோரே கீழோர் மேலோர் 
சேமமே காவ லின்ப தெக்கிணம் வலந் தெற்காகும்.
150 (16) 
காமுகன் விடன் வேண் மாலாங் காதென்ப கொலையுங் காதும் 
கோமளம் பசுவனப்புக் கூறிய இளமைக்கும் பேர் 
நாமமாங் கலித்தல் மிக்கு நற்பொலி வெழுச்சி யோசை 
மாமையே நிறம்வனப்பாம் மலயசஞ் சந்தந் தென்றல்.
யகரயெதுகை
151 (1) 
காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயங் கறி கரித்தல் 
நேயம் நெய் எண்ணெய் யன்பாம் நிறமென்ப மருமங் காந்தி 
ஆயமே கவற்றிற்றாயம் ஆதாயம் மாதர்கூட்டம் 
சாயலென்பது மேம்பாடு தருமழகுடனே மென்மை.
152 (2) 
வய நீர் புட்பொது வலிப்பேர் வயல் வௌி பழனமும் பேர் 
சயம் வெற்றி சருக்கரைப் பேர் சட முடல் வஞ்சம் பொய்யாம் 
நியமமே நியதி வீதி நிச்சயம் நகரங் கோயில் 
இயமென்ப வொலியே வார்த்தை வாச்சிய மிம்முப்பேரே.
153 (3) 
அயமென்ப நீர் தடாகம் ஆடு வெம்பரி யிரும்பாம் 
கய மென்மை குளமே யாழங் களிறு கீழ் பெருமை தேய்வாம் 
பயமென்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேரைந்தே 
அயனமே வழியினாமம் ஆண்டினற் பாதியின்பேர்.
154 (4) 
பயி ரோலி பயிலே பைங்கூழ் பறக்கும் புட்குரலின்நாற்பேர் 
கயினியே அத்தநாளுங் கைம்மையும் யிருபேர் காட்டும் 
வயிரமே செற்றங் கூர்மை வச்சிரம் ஓர்மணியே சேகு 
கயில் பிடர்த்தலையே பூணின் கடைப்புணர் இருபேர்தானே.
155 (5) 
ஐயமே பிச்சையேற்குமோ டனுமானம் பிச்சை 
ஐயனே மூத்தோன் சாத்தன் அப்ப னீச்சுர னார்பேரே 
தொய்யலே யுழவுஞ் சேறும் துயருமும் மகிழ்சியும்பேர் 
மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரட்பேர்.
156 (6) 
வயவனே வீரனோடு வலியான் காதலனு மாகும் 
குயிறலே செறிதல் கூவல் குடைதல் பண்ணுத னார்பேரே 
வய னிட முதரம் வீடாம் வயாக் கரு வருத்தங் காதல் 
மயல் செத்தை மயக்கம் பேயாம் மறவரே வயவர் வேடர்.
157 (7) 
குயிலே கோகிலமுஞ் சொல்லும் கொண்டலுந் துளையு நாற்பேர் 
வயமாவே குதிரை சிங்கம் மதகரி புலியு மாகும் 
வியலென்ப விசாலம் பீடாம் வேய்துளை வெற்று மூங்கில் 
மயிலையே மீனராசி மீ னிருவாட்சி முப்பேர்.
158 (8) 
சயிந்தவங் குதிரையோடு தலையு மிந்துப்பு மாகும் 
குயந்தனம் இளமையோடு கூரரிவாளு முப்பேர் 
நயந்தோன் நண்பன் கொண்கன் நலம் விருச்சிகமே நன்மை 
பயம்பென்ப தானைவீழும்படுகுழி பள்ளமாமே.
159 (9) 
இயல்நடைதமிழ் சாயற்பேர் ஏல்வையே பொழுது வாவி 
குய்யென்ப கறிகரித்தல் குளிர்நறும்புகை யிரண்டாம் 
செயிரென்ப சினங் குற்றப்பேர் சேடி விஞ்சையரூர் பாங்கி 
உயவை காக்கணமே முல்லையுற்ற கான்யாறுமாமே.
160 (10) 
செய்யலே ஒழக்கங்காவல் சேறு செய்வினை நாற்பேரே 
நெய்தலே கடற்சார்பூமி நெய்தற்பூச் சாபறைபேர் 
வெய்யோன் ஆதவனே தீயோன் வருப்பினன் றனக்கு மப்பேர் 
ஐயையே யுமையாள் துர்கை மக ளருந்தவப் பெண் ணாசாள்.
161 (11) 
ஐ யழ கிடைச்சொல் கோழை யரசனோ டிருமல் சாமி 
மையென்ப தஞ்சனங் கார் மல டிருள் ஆடு மாசாம் 
கையிடம் படையுறுப் பொப்பனை செங்கை சிறுமை சீலம் 
வையந் தே ரே றுரோணி வசுந்தரை சிவிகை யூர்தி.
162 (12) 
சேய் குகன் இளமை தூரஞ் செம்மை றனசண் சிறுமை செவ்வாய் 
வாய் குழ லிடம் வாய்மைப்பேர் மாருதி யனுமன் வீமன் 
ஆய்தலே நுணுக்கந் தேர்தல் ஆறென்ப வழி நதிப் பேர் 
வேய்தல் சூடுதல் மூடற்பேர் விநாயகன் அருகன் முன்னோன்.
163 (13) 
அயிர் தேங்கட்டி யான்ற நுண்மணலே நுண்மை 
செயல் தொழி லொழுக்க மென்ப தெய்வமே கடவு ளூழாம் 
நயமென்ப மகிழ்ச்சி யின்பம் நன்மை நற்பயன் நாற்பேரே. 
பெயரென்ப பெருமை கீர்த்தி பேசு நாமப் பேராமே.
ரகரயெதுகை
164 (1) 
சிரகமே கரகமாகுஞ் சென்னியிற் சோடு மப்பேர் 
கரகமே யாலங்கட்டி கமண்டலந் துளி நீர் கங்கை 
மரபுதான் முறைமை தொன்மை மறலென்ப பிணக்குங் கூற்றும் 
சரபம் எண்காற்புள்ளென்ப வரையாடு தானுமாமே.
165 (2) 
இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை யரைஞாண் பொற்றேர் 
அரணமே கவசங் காடே அணிமதில் வேலி நாற்பேர் 
கரணம் எண் ம னாதிக் கூத்துக் கலவிக் காரண மைம்பேரே 
சரணந் தாள் மறைபுகற்பேர் தன்னம் ஆன்கன்றே யற்பம்.
166 (3) 
உரமென்ப வலியே ஞானம் ஊக்கமே மார்பு நாற்பேர் 
சரமென்ப நெடுங்காலப்பேர் சென்னியும் அன்னதேயாம் 
புரமென்ப புரி முன் மெய்ப் பேர் புரவலன் வள்ளல் வேந்தன் 
கரமென்ப கிரணங் செங்கை கழுதை நஞ் சிறுத்தலும் பேர்.
167 (4) 
அரவ நூபுர பாம் போசை ஆய்வென்ப வருத்தம் ஆய்தல் 
பரவை வாரிதிப் பரப்புப் பங்கயமாதின்கூத்தே 
இரலையே கலை யூதுங்கொம் பிரண்டுடன் முதனா ளென்ப 
அரசு மன் னராச்சியப் பேர் அம்பி நாவாயே தெப்பம்.
168 (5) 
அரம்பை தெய்வப்பெண் வாழை ஆணுவெ யிரத நன்மை 
சரந்தனி மணிவடம் போர் சாயக நாணற்புற்பேர் 
நரந்தமென்பது நாரத்தை நாறுங்கத்தூரிக்கும்பேர் 
சுருங்கையே கரந்துபண்ணும் கற்படை நுழைவியிற்பேர்.
169 (6) 
ஆரமே பதக்கம் முத்தம் ஆத்தி சந்தனமே மாலை 
வார நீக்கரையே யன்பு மலைச்சாரல் கிழமை பங்காம் 
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யோரிசை கண்ணென்ப 
கோரஞ் சோழன்மா வட்டில் கொடுமை பூமொட்டு வாசி.
170 (7) 
இராசிய மறைவே யோனி யிறப்பென்ப மிகுதி போக்காம் 
பராகமே யிரேணுவாகும் பரிமள மலர்த்தூளும் பேர் 
துரேணமே சிம்புள் காக்கை தும்பை வில்லொடு பதக்காம் 
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமு மேற்கும்.
171 (8) 
பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல்வருத்தம் 
புரி வளை விரும்பல் செய்தல் புரத்தொடு கயிறு கட்டாம் 
பரிதலே அறுத்தல் அன்பு பகர்ந்திடில் இரங்கலும்பேர் 
வரி சுணங் கெழுத்துப் பாட்டு வாரிதி இறையே நெல்லு.
172 (9) 
சரி கரவளை வழிப்பேர் சராவமே யகல் சலாகை 
கரியவன் சனியின்பேராங் கண்ண னிந்திரனு மாமே 
பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணைய நாற்பேர் 
கரில் குற்றங் காழ்தலும்பேர் காதை சொற் கதையுமாமே.
173 (10) 
மூறி யேறெருமை ஆற்றல் முறை பீடு நெறிவு மாமே 
வாரி நீர் கதவு வெள்ள மதில் கடல் வருவாய் வட்டை 
நாரி பன்னாடை பெண்ணே நறவு வின்னாணி நாற்பேர் 
பாரி யேர் வள்ளல் கட்டில் பாரி கள் தூசு முந்நீர்.
174 (11) 
அருகலே சுருங்கல் சார்தல் அமுதமே சுதை நீர் மோக்கம் 
பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொன் பண்பு பிள்ளை வாய்மை 
குரு நிற மோர் நோய் தேயங் குரவன் பாரம் வியாழன் 
அருணமென்பது மான் செம்மை ஆ டெலுமிச்சை நாற்பேர்.
175 (12) 
முருகு கள் ளிளமை நாற்றம் முருகவேள் விழா வனப்பாம் 
மருமானே மருமகன் பேர் வழித்தோன்றல் பேருமாமே 
இருசு பண்டியுளிரும்பு செவ்வை யென்றிருபேரென்ப 
கருமையே பெருமையாகுங் கருப்பொடு வலியுமாமே.
176 (13) 
கிருத்திமந் தோலே பண்ணல் கெட்டபொய் விட்டபூதம் 
விருத்தியே தொழில் இலாபம் விரிபொருள் வளர்ச்சிக்கும் பேர் 
துருத்தி யாற்றிடைக்குறைப்பேர் தோலுமாந் துட்டைக்கும் பேர் 
அரத்தமே யரத்தம் செம்மை அரக்கொ டுற்பலங் கடம்பு.
177 (14) 
சீர் செல்வந் தாளவொத்துச் சிர்த்தி காத் தண்டே பாரம் 
தார் கொடிப் படை பூத்தண்டு தாமங் கிங்கிணியின்கோவை 
சூரென்ப நோயே யச்சம் அஞ்சாமை யணங்குஞ் சொல்லும் 
கார் நீர் வெள்ளாடு மேகங் கறுப் பிருண் மாரிக்காலம்.
178 (15) 
ஆர் கூர்மை ஆத்தி தேரினகத்துறு கதிருமாகும் 
பீரென்ப முலையிற் பாலும் பீர்க்கொடு பசலைக்கும் பேர் 
வாரென்ப நெடுமை கச்சு மன்னு நீர் நேர்மை நாற்பேர் 
நேர் சம மீதல் பாதி நெடி லுடன்பாடு நுட்பம்.
179 (16) 
அருணன் சூரியன் தேர்பாகன் ஆதித்தன் புதன் முப்பேரே. 
வருணமே குல நீராகும் மகனென்ப சிறந்தோன் மைந்தன் 
தரணி பா ரிரவி வெற்பாந் தையல் பெண் ணழகுமாகு 
கரிணியே முழையும் வெற்புங் களிற்றொடு பிடியுங் காட்டும்.
180 (17) 
மாரியே விளிவு கள்ளு வடுகி நோய் மேக மைம்பேர் 
ஓரி யாண்மயி ரோர்வள்ளல் முது நரி முசுவென் றோதும் 
காரி யோர்வள்ள லையன் கடுச் சனி வடுகன் காக்கை 
தூரிய மிடப மாடை துந்துபி யெழுதுங்கோலே.
181 (18) 
பிரமமே வேதம் வேள்வி மந்திரம் பிரமன் மாலோ 
டிரவி தீ முனிவர் முத்தி ஈசன் அம்புலி பன்னொன்றே 
அரசனே வியாழன் மன்னாம் அம்பணந் தோணி யாமை 
குரல் கதிர் சிறுகு மாதர்கூந்தல் யாழ்நரம்பு நாற்பேர்.
182 (19) 
தோரை நெல் விகற்பம் முங்கிலரிசி கைவரை சொன் முப்பேர் 
ஆரையே மதில் புற்பாயாம் அகலுளே பரப் பூர் நாடே 
ஓரையே மாதர் கூடி விளையாடலுட னிராசி 
தாரை கண்மழை நேரோடல் தாரகை வழியே கூர்மை.
183 (20) 
ஊர்தி தேர் விமானம் பாண்டில் உம்பலே சிவிகை பாய்மா 
ஆர்வமமோர் நரகம் அன்பாம் அகலம் மார்பொடு விசாலம் 
ஆர்வலர் கொண்கர் அன்பர் அணுவென்பது உயிர் நுண்மைப் பேர் 
ஆர்தலே நிரைதல் உண்டல் அகளந்தான் மிடா நற்றாழி.
184 (21) 
பாரமே கவசந் தோணி பல்லணம் பொறை யினோடு 
நீருறுகரை வன்பார நிறை தரை நிகழ்த்தும் எண்பேர் 
சுரனே யிரவி தீ நாய் துகளென்ப குற்றம் தூளாம் 
சாரங்க மானும் வண்டுஞ் சாதகப்புள்ளு மாமே.
185 (22) 
ஆரல் கார்த்திகை நாள் செவ்வாய் அரணுருப் பொருமீன் நாற்பேர் 
சாரலே மருதயாழி னிசையொடு சைல பக்கம் 
மூரலே நகை பல் சோறாம் முரம்பென்ப மேடு பாறை 
கூரல் புட்சிறகு மாதர் ஓதியு மிரு பேர் கூறும்.
186 (23) 
சாரிகை பூவை சுங்கஞ் சுழல்காற்று தானுமாகும் 
காரிகை யழகு பெண்ணே கலித்துறை யோர்நூற்கும் பேர் 
வாரணங் கவசங் கோழி தடை சங்கு வாரி கைம்மா 
பூருவம் முதுமை முன்பு கிழக்கென்றும் புகலலாமே.
187 (24) 
ஏ ரழகு உழுபெற்றப்பேர் இராசிதா னோரை கூட்டம் 
பா ருலகந் தேர்ப் பாராம் பயல் பள்ளம் பாதி சிற்றாள் 
போ ரமர் சதயத்தோடு புகலு நென் முதலாஞ் சும்மை 
பீருவே யச்சமுள்ளோன் பெயரொடு புருவமாமே.
188 (25) 
அருப்ப மாரிட நோய் காடாம் அரணுட னூரு மப்பேர் 
மரக்கால் ஆயிலியஞ் சோதி மாயவனாடல் முப்பேர் 
நிரப்பென்ப மிடிநிரைப்பேர் நிறையழியாமை நீர்ச்சால் 
துருக்கமே யரண் கத்தூரி குங்கும மரமுஞ் சொல்லும்.
189 (26) 
குருதியே சிவப்பி ரத்தங் குசனெனக் கூறு முப்பேர் 
பரிதியே யூர் கோள் வட்டம் பாற்கரண் நேமி நாற்பேர் 
சுருதியே யொலி வேதப்பேர் சுரம் அருநெறி கான் மார்க்கம் 
இரதி பித்தளை பெண்யானை மதன்தேவி யிச்சை நாற்பேர்
190 (27) 
புரை குற்றம் உவமை யில்லம் புழை யுயர்சியு மைம்பேரே 
விரை மணஞ் சாந்து தூபம் வீரைதான் துயரம் வாரி 
நரை வெள்ளையிவுளி வெண்மை நந்தி நற்சவரி நாரை 
சுரை கள் ஆன்முலை துளைப்பேர் துளும்பலே திமிறல் துள்ளல்.
191 (28) 
மருளென்ப குறிஞ்சி யாழின்றிறத்தொடு மயக்க மும்பேர் 
இருளொரு நரகம் மையல் இருளொடு கருமை யென்ப 
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் பாணர் வீரர் 
இருபிறப் பெயிறும் பார்ப்பும் இந்துவும் புள்ளுமாமே.
192 (29) 
மருதமே யொருமரஞ்செய் மருத மந்நிலப் பாடற்பேர் 
எருவையே கொறுக்கை கோரை கழுகு செம் பிரத்தமென்ப 
தருமராசன்றான் புத்தன் சண்டனே டருகன் றானாம் 
கரியென்ப திருந்தை சான்று கறையடி சேகு நாற்பேர்.
193 (30) 
கருவி பல்லியந் துணைக்காரணங்கள் யாழ் கவச மீட்டம் 
பொருபடைக்கலஞ் தொடர்ச்சி புயல் பலவினைப்பேர் கூட்டம் 
பரியின் பல்லணமே யாடை கசை பதின்முப்பேர் பன்னும் 
சுரிகையே கவசம் வாளாந் துவை பிண்ணாக் கிறைச்சி யோசை.
194 (31) 
குருகு புள் ளிளமை நாரை கொல்லுலைமூக்குங் கோழி 
சரி வெள்ளை மூலநாள் வாசந்தி யொன்பான் பேர்சாற்றும் 
முரசே யுட்டரத்தாதி பேரியமென்று மொழிய லாமே 
தரளமே உருட்சி முத்தாஞ் சார்வென்ப திடமும் பற்றும்.
195 ( 32) 
முரண் வலி பகை யாமென்ப மொய்ம்பு தோள் வலியுமாகும் 
உரை யென்ப கிளவி தேய்வாம் உவாத் தந்தி யிளையோன் பௌவம் 
ஞெரே லொலி விரைவுமாகும் நிதி யிருநிதி பொன்னென்ப 
உரு நிறம் வரிவட்டைப்பேர் ஓதனஞ் சோறே யுண்டி.
196 (33) 
அரி கிளி புணரி மால் தேர் ஐம்மை யிந்திரன் கால் காந்தி 
பரி புகர் பன்றி சிங்கம் பகை புகை பாயல் சோலை 
வரி மதி சேகு தேரை வானரம் இயமன் மூங்கில் 
எரி புரை நிறம் பொன் பாந்தள் இரவி கண்வரி தார் பச்சை.
197(34) 
அரிசி நெற்கதிர் கள் கூர்மை அளி படைக்கலமே யீர்வாள் 
அரிதலே சயன நேமி அடல் விசி பறை யரித்தல் 
பரிபுரமதனுட்பெய்த பரலோ டிவ்வா றேழைந்தாம் 
அரிதமேபசுமை திக்காம் ஆற்பொறி சிரித்தற் பேரே
198 (35) 
அருவியே மலைசார் வாறும் அரிதினைத்தாளு மாகும் 
அரலையே கனி வித் தாழி மரல் கழலையுமாமென்ப 
கரடமே மதம் பாய்கின்ற சுவட்டொடு காகமு மாகும் 
சுரியல்தான் பெண்மயிர்க்கே சொல்லும் மாண்மயிர்க்கும் பேராம்.
199 (36) 
திருவென்ப கமலை செல்வஞ் சிறப்பொடு முப்பேர் செப்பும் 
பரிவென்பதுன்ப மின்பம் பகரும் அன்பிற்கும் பேர் 
கரையே நீர்க்கரை சேர்வாகுங் கைத்து நீள்நிதி வெறுப்பாம் 
சுரகுரு மகவான் றேவமந்திரி யிருபேர் சொல்லும்.
200 (37) 
அரற்றலே அழுகை யோசை யைதென்ப விரைவு நொய்தாம் 
இரத்தஞ் சென்னீர் சிவப்பாம் இலாங்கலி யலந்தென் காந்தள் 
அரக்கென்ப மெழுகு கள்ளின் விகற்பமுஞ் சிவப்புமாகும் 
அருச்சுன மருது வெண்மை யறிக்கைதா னறிவு பற்றாம்.
201 (38) 
அரந்தை யென்பது குறிஞ்சியாழிசை துன்பமாகும் 
அருந்தலே யருமை யுண்டல் அளித்தல்தான் கொடுத்தல் காத்தல் 
அரங்க மாற்றிடைக்குறைப்பேர் ஆடிடஞ் சபையுமுப்பேர் 
அரங்கு பேரிடம் வட்டாடும் இடஞ் சபை மனைவி கற்பாம்.
202 (39) 
முருந்தென்ப மயிலின்றோகைமுதன்முள்ளுத் தவளமாகும் 
விருந்தமே கிளையின் கூட்டம் விலங்கின்கூட்டமு மென்றாகும் 
குரங்கு வானரம் விலங்கின்பொது மிகுகோணலாகும் 
எருந் துரல் கிளிஞ்சிெ லன்பர்இடஞ் செல்வம் விசாலம் வாமம்.
203 (40) 
ஆரியர் மிலோச்சர் நல்லோர் ஆனென்ப யடைச்சொலாவாம் 
ஆரியே கதவு சோழன் அழொடு மேன்மைக்கும் பேர் 
காருகர் தந்து வாயர் கடுங்கொலையாளர் வண்ணார் 
தாரகாரியென்ப காளி சண்முகந் தானுமாமே
204 (41) 
சார் கூட லொரு தாருப்பேர் சான்றோன் மான்றலைநாள் பானு 
வேரென்ப மரவேர் வேர்வாம் விழைச்சு நல்லிளமை போகம் 
பாரா வாரந்தான் வாரி கடற்கரை யிருபேர் பன்னும் 
சாரண ரொற்றரென்ப சமண்முனிவர்க்கும் பேராம்.
205 (42) 
அராகஞ் சென்னிறமே பாலையாழ் முடுகியற்பாட் டாசை 
கரேணுவே பிடி யானைக்குங் கடுங்கொலை யானைக்கும் பேர் 
கிராணமே கிராண மூக்காங் கிளர்சிறு வட்டிலும்பேர் 
கரீரமே மிடா வகத்தி கரியின்பல்லடி முளைப்பேர்.
லகரவெதுகை
206 (1) 
புலவர் பாடுநரே கூத்தர் புத னும்பர் கவிகள் ஓவர் 
வலவனே வெற்றியாளன் மருவுந் தேர்ப்பாகன் மாயோன் 
அலகு நெற்கதிரே யாதி பலகரை நுளம்பு எண் ஏதி 
அலரி கண்வரி யருக்கன் அழ கொருமரம் பூவாமே.
207 (2) 
ஆலமே வடவிருக்க மடுநஞ்சோ டலர்பூ நீராம் 
மூலம் வேர் முதலே யேது முதிர்வுறுகிழங் கோர்நாளாம் 
சீலமே குணந் தண்டித்தல் திகழ்சரித்திர முப்பேரே 
சாலமே வலை சாலே கமராமரஞ் சபை மதிற் பேர்.
208 (3) 
காலம் வைகறை காலப்பேர் கல மலம் யாழ் பூ ணாவாய் 
சாலகங் காலதர்ப்பேர் தானே பூமொட்டாகும் 
தால முண்கலமே நாவே தராதரமே பனையே நாற்பேர் 
ஆல லாடுதலொலிப்பேர் அறுவை சித்திரைநா ளாடை.
209 (4) 
இலம்பக மத்தியாய நுதற்சுட்டென் றிருபேராமே 
இலஞ்சி மா வாவி கொப்பூழ் எயில் குண மகிழே யேரி 
பலங் கனி பயன் காய் சேனை பலங் கிழங் கறுபேராகும் 
அலங்க லென்பது பூமாலை அசைவொடு தளி ரிலங்கல்.
210 (5) 
ஒலி யென்ப திடியே காற்றே யோசை யென்றாகு முப்பேர் 
ஒலியலே யாறுந் தோலும் உடுத்தவாடையும் பைந்தாரும் 
கலுழியே கான்யாறென்ப கலங்கிய நீருமாமே 
கலை மதிப்பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி.
211 (6) 
பீலயே யாலவட்டம் பெருவரை கலாபி தோகை 
பாலிகை யுதடு வட்டம் படைவாளின்முட்டியும்பேர் 
வேலி யூர் மதில் காவற்பேர் மெத்தை மெல்லணையே சட்டை 
தோ லிபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை யைம்பேர்.
212 (7) 
பாலை யொர் மர நிலம் மந்நிலத்தினிலோர பாடலும்பேர் 
வேலையே கடலதற்குமேவிய கரையே காலம் 
மாலையே யிரவோடந்தி மாலிகை யொழுங்கு நாற்பேர் 
சாலையே குதிரைப்பந்தி யறப்புறந் தானுமாமே.
213 (8) 
அல்லி வெள்ளாம்பல் காயா யகவித ழாகமுப்பேர் 
அல் லிரா யிருளே யென்ப ஆக மார்பு டலுமாமே 
சில்லியே வட்டங் கீரை தேருருள் சிள்வீடென்ப 
வல்லி யாய்ப்பாடி வல்லி வரைவொடு நிகளமாமே.
214 (9) 
இல் லிள்ளாள் இல்லையென்றல் இராசி சா விடம் வீ டாறே 
மல் வளம் வலியினோடு மாயவனாடல் முப்பேர் 
சில்லை யென்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தைக்கும் பேர் 
ஒல்லையே விரைவு தொல்லை கடுப்புடன் சிறுபோதாமே.
215 (10) 
வில்லென்ப மூலநாளாம் வெஞ்சிலை யொளியு மப்பேர் 
வல் வலி விரைவு சூதா மலர்தலே யெதிர்தல் தோன்றல் 
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை யனுஷநாளாம் 
கொல்லென்ப தசைச்சொல் ஐயங் கொலையேவல் வருத்த நாற்பேர்.
216(11) 
மால் புதன் பெருமை மேக மாயவன் மயக்கங் காற்றே 
ஆலோ ட லிரண்டு சொல்லும் ஆமென்ப தல்லவும்பேர் 
வால் வெண்மை மிகுதி தூய்மை வசந்தனே தென்றல் காமன் 
சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே.
217(12) 
வலம்புரி சங்கு நந்தியாவர்த்தம் ஓர்மர முப்பேரே 
புலம் பொலி தனிமை யச்சம் பொய்யென்ப பொக்கம் பொந்தாம் 
சலம் பொலி ஞெகிழி குன்றாஞ் செருந்தி பஞ்சரம் வாட்கோரை 
விலங்கு காற்றளை குறுக்கு மிருகத்தின் பொதுவு மாமே.
218 (13) 
உலகமே திசை வெண் பூமி உயரிகுணஞ் சன முயர்ந்தோர் 
அலவனே ஞெண்டு பூஞை அம்புலி கடகராசி 
இலயமே கூத்துங் கூத்தின்விகற்பமு மிருபேரென்ப 
வலவை வஞ்சப்பெண் வல்லோன் வருடைதான் சிம்பு ளாடாம்.
219 (14) 
கலாபமே மணிவடம் மேகலை மயிலிறகு முப்பேர் 
சிலீமுகம் முலைக்கண் வண்டு சித்திரபுங்கந் தானாம் 
சலாகை நன்மணி நாராசஞ் சவளமு மாகுமென்ப 
விலோதம் பெண்மயிர் பதாகை விட மென்ப நஞ்சுந் தேளும்.
220 (15) 
செல் லிடி யேவல் மேகஞ் சிதலை யாகுமென்ப 
எல் லொளி பக லிகழ்ச்சி இரவுட னிரவி யைம்பேர் 
சொல் லுரை கீர்த்தி நெல்லாந் தொடுத்தலே வளைத்தல் கட்டல் 
கல் லொலி மலை கல்லென்ப கரண்ட நீர்காக்கை செப்பாம்.
221 (16) 
கலி வஞ்ச மொலியே வாரி கடையுகம் வல யைம்பேரே 
சிலை யொலி மலை கல் வில்லாஞ் செடியொளி செறிவு தீதாம் 
தலமென்ப திலை புவிப்பேர் தலை யிடந் தலை விண் ணாதி 
திலமே மஞ்சாடி யெள்ளாந் தலக மஞ்சாடி பொட்டாம்.
222 (17) 
வல்லை கான் விரைவு மைந் தாம் வட மணிவட மா றாம்பு 
பல்ல மோர் கணக்கு பாணம் பல்லங் கரடி நாற்பேர் 
மல்லலே வலி வளப் பேர் வாயி லைம்புலன் கடைப் பேர் 
முல்லை மல்லிகையே வென்றி முல்லைநன்னிலங் கற்பாமே.
223 (18) 
கோலென்ப தீட்டி வாட்கோல் துகிலிகை துலாஞ் சம்மட்டி 
சீலமன்னவன்றன்செங்கோல் திரட்சி யாழ்நரம்போ டம்பு 
நீலவஞ்சனக்கோலோடு நீளிலந்தையும் பன்னோர்பேர் 
காலிலி அருணன் பாம்பு காற்றொடு முப்பேராமே.
224 (19) 
கூலமே பண்ணிகாரம் புனற்கரை கோ விலங்கின் 
வாலோ டாவணமே பாகல் வரம்பொடு குரங் கெண்பேரே 
கா லிட மரக்கால் பிள்ளை குறுந்தறி வனங் காம் பூற்றம் 
காலங் குரங் கால் வாய்க்கால் காற்றுத் தேருருள் பன்மூன்றே.
225 (20) 
கோலமே யழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து பீர்க்காம் 
மாலியே யிரவி கள்ளாம் மாந்தலே மரித் துண்டல் 
வே லயில் படைக்கலப்பேர் வேதண்டங் கைலை வெற்பாம் 
சாலி நெற்பொதுவுங் கள்ளு மருந்ததி தானுமாமே.
226 (21) 
உலவை கான் மரத்தின்கொம்பொடுறு தழை விலங்கின்கோடாம் 
மலைதலே பொரல் சூடற்பேர் மந்திரி குபேரன் வெள்ளி 
அலர் பழி விரிபூ நீராம் அவிர்தலே யொளி பீறற்பேர் 
எலி பூரநா ளெலிப் பேர் இரணம் பொன் கடன் மாணிக்கம்.
227 (22) 
ஆலயங் நகரங் கோயில் யானையின்கூட முப்பேர் 
பாலமே மழு நெற்றிப்பேர் பவித்தரஞ் சுசி தருப்பை 
நூலோர் மந்திரிகள் பார்ப்பார் நுவல்கவிப்புலவர்க்கும் பேர் 
வேலாவலயந்தான் பூமி விரிகட லிருபேராமே.
228 ( 23) 
சூலியே கருப்பப் பெண்ணுந் துர்க்கைஞ் சிவனு முப்பேர் 
வாலியே அலாயுதன் கிட்கிந்தையின் மன்னன் பேராம் 
பால் புடை யியல்பு திக்குப் பகுத்தல் பாலென்னு மைம்பேர் 
ஏலமே மயிர்சாந்தோ டேலத்தின் பேருமாமே.
வகரவெதுகை
229 (1) 
நவமென்ப புதுமை கேண்மை யொன்பது நற்கார்காலம் 
கவனமே கலக்கம் வெம்மை குதிரையின்கதி போர் காடாம் 
உவணமே கலுழனாகும் உயர்ச்சிக்கும் கழுகுக்கும்பேர் 
பவணமே யிராசி பூமி படர்காற்று மனையே கோயில்.
230 (2) 
புவன நீர் புவிய மாகும் புரத்தலே காத்தல் வன்மை 
நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமுந் தந்தும் 
தவவென்வ மிகுதி குன்றல் தந்தே நூல் சாத்திரப்பேர் 
சிவ நன்மை குறுணி முத்தே சீவனே யுயிர் வியாழன்.
231 (3) 
இவறலே மறவி யாசையென்ப பேரிச்சைக்கும் பேர் 
இவர்தலே யெழுச்சி யாசை யேறுதல் சேரல் மேவல் 
சுவவென்ப புள்ளின்மூக்குஞ் சுவர்க்கமுஞ் சுண்டனும் பேர் 
குவவென்ப திரட்சி மற்றும் குவிதலே பெருமைக்கும் பேர்.
232 (4) 
தவிசென்ப தடுக்கு மெத்தை யிலகட முப்பேர் தானே 
சவி மணிக்கோவை செவ்வை சாற்றிய வனப்பு காந்தி 
நவிரமே மஞ்ஞை புன்மை நன்மலையுடனே யுச்சி 
நவிலல் சொல்லுதல் பண்ணற்பேர் நவியமே மழு கோடாலி.
233 (5) 
கவுசிகம் விளக்குத்தண் டோர்பண் பட்டுக் கடியகோட்டான் 
சவுரியே திருமால் கள்வன் சனி யம னினைய நாற்பேர் 
மவுலியே முடி கோடீரம் வட்கலென்பது நாண் கேடாம் 
கவலை செந்தினையோர்வல்லி கவர்வழி துன்ப நாற்பேர்.
234 (6) 
சேவகம் வீரம் யானைதுயிலிடந் துயிலுஞ் செப்பும் 
சீவணியோர் மருந்து செவ்வழித்திறத்தோரோசை 
ஆவணம் புணர்தம் வீதி அங்காடி உரிமை நாற்பேர். 
நீவியே துடைத்த லாடை நெருங்கு கொய்சக முப்பேரே.
235 (7) 
உவளக மதி லோர்பக்கம் ஊருணி பள்ளம் உள்ளில் 
கவடென்ப கப்பி யானைக்கழுத்திடுபுரசைக்கும் பேர் 
சிவை யுமை மரவேர் கொல்லனுலைமுகந் திரியும்ஓரி 
கவையே ஆயிலியங் காடு கவர்வழி எள்ளிலங்காய்.
236 (8) 
சிவப்பென்ப சினமும் செம்மையுடன் சினக்குறிப்பு முப்பேர் 
உவப்பென்ப மகிழ்சி மேடாம் ஒழுக்கமே வழி யாசாரம் 
தெவிட்டலே அடைத்தல் கான்றல் நிறைதலு மொலியுஞ் செப்பும் 
துவக்கே தோல் பிணக்கிரண்டாஞ் சூழலே யிடம் விசாரம்.
237 (9) 
சேவலே காவலோடு சேறு புள்ளாண் முப்பேரே 
கேவலந் தனிமை முத்தி கீரமென்பது பால் கிள்ளை 
பூவை சாரிகை காயாவாம் புலி சிங்கம் உழுவை சாந்தே 
வாவலுஞ் சலிகைப்புள்ளுந் தாவலும் வகுக்கலாமே.
238 (10) 
சுவல் பிடர் தோண்மேன் மேடு துரகதக் குசை நாற்பேரே 
கவி மந்தி புலவன் சுங்கன் கழி யென்ப மிகுதி காயல் 
நவிர் உளை மருதயாழ் வாள் நாஞ்சில் எந்திரங் கலப்பை 
கவிகையே குடை கொடைப்பேர் கடிப்பங் காதணி பூண் செப்பாம்.
239 (11) 
மா வண்டு பெருமை பிண்டி வாசி கூப்பிடல் வெறுத்தல் 
காவுறுவிலங்கு செல்வங் கருநிறங் கமலை பத்தாம் 
கோ விழி பசு நீர் திக்குக் குலிசம் விண் கிரணம் பூமி 
ஏ வுரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற் பீரேழாமே.
240 (12) 
ஆவியே வாவி நாற்றம் ஆருயிர் புகை மூச்சைம்பேர் 
கூவிரந் தேர் தேர்மொட்டாந் குவடு நீண்மலை வெற்புச்சி 
காவியே குவளை காவிக்கல்லொடு கள்ளு முப்பேர் 
நாவிதன் மஞ்சிகன் கார்த்திகை பூரநாளுமாமே.
241 (13) 
ஆவென்ப திரக்கம் பெற்றம் ஆச்சாவோ டிசை வியப்பாம் 
காவென்ப துலாம் பூஞ்சோலை காத்தல் தோட்சுமை நாற்பேரே 
பாவென்ப பனுவல் நூற்பா பரவுதல் பரப்பு மாகும் 
தாவென்ப பகை வருத்தந் தாண்டுதல் வலி கே டைம்பேர்.
242 (14) 
கவ்வையே பழிச்சொல் துன்பங்கள் ளொல்ி யெள்ளிலங்காய் 
பவ்வமே குமிழி வாரி பருமரக்கணு உவாவாம் 
தவ்வை முன்பிறந்தாளொடு தாயு மூதேவியும் பேர் 
நவ்வியே தோணி மானா நன் றென்ப பெருமை நன்மை.
243 (15) 
அவலே சிற்றுண்டி பள்ளம் நீர்நிலை யாகு முப்பேர் 
செவிலியே வளர்த்தகைத்தாய் முன்பிறந்தவளுஞ் செப்பும் 
கவுட மோர்கொடி யோர்தேச மிருபெயர் கழறலாமே 
சுவடு வச்சிராங்கி யோரெண் சுபமென்ப தழகு வெண்மை.
244 (16) 
பவமென்ப சனனம் பாவம் பாவந்தான் வினை தியானம் 
சவுரியங் களவு வீரந் தண்மை தான் குளிச்சி தாழ்வு 
யவமொரு தானியப் பேரென்ப நெல்லிற்கு மப்பேர் 
யவனர் சோனகர் கண்ணாளர் சித்திர காரர் ரென்ப.
245 (17) 
ஆவரணந்தான் சட்டை தடை மறைப் பாரணம் ஆடை 
ஏவலே வியங்கோளென்ப எய்திய வருமைக்கும் பேர் 
ஓவியர் சிற்பநூலோரொடு சித்திரக்காரரும் பேர் 
ஓ விரக்கச்சொல் நீக்கமோடு நீர்தகை கபாடம்.
246 (18) 
அவ்வையே தாயின் பேருமௌவையோ டிருபேராமே 
செவ்வி யேர் பொழுதினோடு செப்பிய பருவ மாகும் 
தெவ் வமர் பகை யிரண்டாந் தீவினை கொடுமை பாவம் 
சைவமோர் புராண மீசன் சமயத்தின் விகற்பமாமே.
ழகரயெதுகை
247 (1) 
விழவென்ப மிதுன ராசி விளங்கு முற்சவமு மாகும் 
கழையென்ப புனர்தம் மூங்கில் கரும்பென விரும்பு முப்பேர் 
கழல் கழங்கொடு செருப்புக் காலணி காலந் நாற்பேர் 
கிழமை மூப் புரிமை பண்பாங் கிழி நிதிப்பொதி கீறாமே.
248 (2) 
சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும் 
பாழியே வலி விலங்கின் படுக்கை யூர் பற்றிலாரூர் 
நாழியே யளக்கு நாழி நாழிகை பூரட்டாதி 
ஆழி மோதிரமே நேமி அலை கடல் கரையே வட்டம்.
249 (3) 
இழு மெனலோசையென்ப இனிமை யுமியம்பு மப்பேர் 
விழுமமே சிறப்பு சீர்மை யிடும்பையும் விதித்த பேரே 
தொழுவென்ப துழலை தானே யிரேவதி நாளுஞ் சொல்லும் 
செழுமையே வளங் கொழுப்பாந் தேனென்ப நறவும் வண்டும்.
250 (4) 
கழுது பேய் பரண் வண்டென்ப கயவு கீழ் பெருமை மென்மை 
அழுவமே பரப்பும் நாடும் அழுங்கலே யிரங்கல் கேடாம் 
கழுமல் பற்றொடு மயக்கங் காதலே ஆசை கோறல் 
கழிலென்பதுவே சாதல் கடந்திடல் மிகுதி முப்பேர்.
251 (5) 
மாழை பொன்னு லோகக் கட்டி மடமை யோர் புளிமா வோலை 
கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம்படையுறுப்பாம் 
தாழை கேதகை தெங்காகுஞ் சாகினி சேம்பு கீரை 
ஊழ் முறை வெயில் பகைப்போ ஊசியே சூசி யாணி.
252 (6) 
உழையென்ப திடமான் யாழி னோர் நரம்பிற்கும் பேராம் 
குழை யென்ப தளிர் துவாரங் குண்டலஞ் சேறு நாற்பேர் 
விழைவென்ப புணர்ச்சி காதல் வெறுக்கை யென்பது பொன் செல்வம் 
வழி மர பிடம் பின் மார்க்கம் வழங்கலே கொடை யுலாவல்
253 (7) 
ஈழம் பொன் கள் ளோர்தேசம் எல்லையே அளவை வெய்யோன் 
மேழகங் கவசம்ஆடாம் வேளாண்மை கொடையே மெய்மை 
காழியர் வண்ணா ருப்புவாணிகர் இருபேர் காட்டும் 
வேழமே கரும்பி யானை கொறுக்கைச் சிவேணு நாற்பேர்.
254 (8) 
கூழென்ப துணவும்பொன்னும் பயிரென்று கூறுமுப்பேர் 
காழென்ப மணியின் கோவை கற்பரல் சேகு வித்தாம் 
யாழென்ப மிதுனம் வீணை யிரலைநா ளாதிரைப் பேர் 
கீழென்ப திடங் கீழ்சாதி கீழ் திசை கயமை நாற்பேர்.
255 (9) 
கோழியே குரு கோரூராங் குய்யமே மறைவு யோனி 
மூழியே வாவி சேறோ டகப்பையு மொழியு முப்பேர் 
மூழையே யகப்பை சோறா முறஞ் சுளகொடு விசாகம் 
நூழிலே கோறல் யானை நுண்கொடிக்கொத்தான் பேர்.
256 (10) 
தொழுதி புள்ளொலி கூட்டப்பேர் தொறு நிறை யடிமைக்கூட்டம் 
கெழுவுதல் மயக்கம் பற்றாங் கீலாலங் கறை நீர் காடி 
குழ றுளையுடைப்பொருட் பேர் மயி ரிசைக்குழன் முப்பேரே 
அழிவென்ப வீதல் கேடாம் அவி நெய் சோ றமரருண்டி.
ளகரயெதுகை
257 (1) 
குளம் நுதல் கரும்பின் கட்டி குட்டமுமிட்ட நாமம் 
களம மர்க்களமே கண்டங் களா விடங் கறுப்பே யில்லாள் 
வளமை மாட்சிமை கொழுப்பாம் வாருணங் கடலு மேற்கும் 
விளவென்ப கமர் விளாவாம் விம்ம லேங்குத லொலித்தல்.
258 (2) 
முளரியே விறகு செந்தீ முண்டகஞ் சிறுமை காடாம் 
விளரெண்ப திளமைதானே வெளுப்பொடு கொழுப்புமாகும் 
களபமே யானைக்கன்று கமழ்சாந்து கலவை முப்பேர் 
உளர்தலே சிதறலாகுந் தடவலு முரைக்கற் பாற்றே.
259 (3) 
குளிர் மழு நண் டிருத்தல் குளிர் கவண் முழா மீன்றாரை 
நளிர் குளிர் பெருமை ஞெண்டு நாட்டிய செறிவு நாற்பேர் 
ஒளி வட்டந்தான் கண்ணாடி சக்கர மிருபே ரோதும் 
இளி யிசை யிசித்த லெல்லே யிணங்குத லுரித்தற்கும் பேர்.
260 (4) 
பளிதமென்பது கர்ப்பூரம் பல்லமென்கணக்கு மாகும் 
வௌி லணில் வேழத்தம்பம் வெண்டயிர்கடைதறிப் பேர் 
களிறென்பது ளத்தநாளே கறையடி சுறவு பன்றி 
ஒளி யிருசுடரே தீயே யொளிப்பிடம் புகழுமாமே.
261 (5) 
பாளிதஞ் சோறு கண்டசருக்கரை குழம்பு பட்டாம் 
ஒளியே யானைக்கூட மொழுங்கென்றும் வழங்கும் நூலே 
கோளி தொன்மரமே யத்தி கொள்வோனுங் கொழிஞ்சியும் பேர் 
மீளி திண்ணியன் வலிப் பேர் மேன்மகன் பெருமைக்கும் பேர்.
262 (6) 
அளை தயிர் முழை புற்றாகும் அசனியே யுருமு வச்சிரம் 
உளை பரிமீதுகட்டுமயிர் பிறமயிறும் ஓதும் 
கிளை யென்ப தோர்பண் முங்கில் கேளொடு கிளைத்தலும் பேர் 
இளை புய லிளமை வேலி தலைக்காவ லிவை நாற்பேரே.
263 (7) 
உள்ளலே நினை வுள்ளான் பேர் உழப்பென்ப வலி யுற்சாகம் 
ஞெல்லலே பள்ளம் மேன்மை நீண்ட வீதியு முப்பேரே 
எள்ளலே நகை யிழிப்பாம் யாமந் தெற் கிரவு சாமம் 
ஞொள்கல் சோம் பிளைத்த லச்சக்குறிப்பென்று நுவலற்பாலாம்.
264 (8) 
வள்ளென்ப காது கூர்மை வலி வளம் வாளே வாராம் 
வெள்ளையே முசலி சங்கு வௌிறு வெள்ளாடு வெண்பா 
கள்வனே முசு ஞெண்டி யானை கருநிறத்தவனே சோரன் 
பள்ளி யூர் சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோரூர்.
265 (9) 
விளக் கொளி சோதிநாளாம் வேள்வியே மகநாள் ஈதல் 
அளக்கரே புடவி சே றுப்பளங் கடல் கார்த்திகைப் பேர் 
திளைத்தலே யனுபவித்தல் செறிதலே நிறை தன் முப்பேர் 
இளைத்தலே யிளைப் பிரங்க லென்றூழே யிரவி வெய்யில்.
266 (10) 
பிள்ளையே வடுகன் காக்கை பெட்டல் தான் விரும்பல் வேண்டல் 
மள்ளரே மள்ளர் வீரர் மறவர்க்குங் குறவர்க்கும் பேர் 
உள்ளமே முயற்சி நெஞ்சா முஞற் றிழுக்கொடு தாளாண்மை 
வள்ளியே வல்லி செங்கைவளை புனையிழை முப்பேரே.
267 (11) 
காளமே யூதுகொம்பு கழு நஞ்சு கருமை நாற்பேர் 
வே ளறுமுகன் காமன் பேர் விபூதி யூன் கொடுமை செல்வம் 
கோ ளிடையூ றொன்பான் கொலை குணம் வலி பொய் கொள்கை 
ஞாளியே சுணங்கன் கள்ளாம் நான்மு கனருகன் வேதா.
268 (12) 
களரென்ப மிடறு கோட்டி களர் நிலங் கருமை நாற்பேர் 
தளமிலை படையே சாந்து தாழி பூவிதழே மேடை 
அளகமே மாதரோதி யறன் மயிற்குழற்சி முப்பேர் 
தளை விலங்கொடு தொடர்ச்சி தாட்சிலம் பாண்மயிர்ப் பேர்.
269 (13) 
புள்ளு வண் டவிட்டம் புட்பேர் புளகந் தர்ப்பணம் குமிழ்ப்பாம் 
கள்ளென்ப களவு கள்ளாங் கனலி தீ யிரவி பன்றி 
அள் ளுரஞ் செறிவு காதோ டயிலும் பற்றிரும்பு மாகும் 
வெள்ள மெண் மிகுதி முந்நீர் வேணுவே மூங்கில் வில் வாள்.
270 (14) 
வாளென்ப தொளி கட்கப் பேர் வல்லரி தளிர் பைங்காயம் 
கூளி பேய் தம ரேறு மாசு குறள் படைத்தலைவன் கூட்டம் 
தோளென்ப புயங் கை யாகுஞ் சுந்தரி யுமையே சுண்டன் 
தேளென்ப தனுடநாளே விருச்சிகந் தெறுக்காலும் பேர்.
271 (15) 
அளியென்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையு நாற்பேர் 
அளவையே எல்லை நாளாம் ஆசாரந் துகில் தூ மாரி 
விளரியே யிளமை யாழிலோர்நரம்பி யாழ் நீள்வேட்கை 
வளமென்ப பதவியும் பல்பண்டமும் வனப்பு மாகும்.
272 (16) 
வள்ளமே மரக்கால் வட்டில் கடிகைவட்டிற்கு மப்பேர் 
வள்ளுரம் பசுவிரைச்சி வரைந்த வூன்பொதுவு மாகும் 
அள்ளலே நரகஞ் சேறா மம்பு நீர் புயல் வே யேவாம் 
வெள்ளிலே விளாப் பாடைப் பேர் வேலன் வேள் வெறியாட்டாளன்.
273 (17) 
காளையே எருது பாலைக்கதிபன் இளமையோன் பேர் 
கூளியர் நண்பர் பூதகணவீரர் கொலைத்திறத்தோர் 
கோளகை வட்டமோடு மண்டலிப்பாம்புங் கூறும் 
கேள்வியே செவி கல்விப்பேர் கிடங் ககழ் வாவியாமே.
274 (18) 
இளமையே தண்மை காம மிளமையின்பருவ முப்பேர் 
அளறென்ப நரகஞ் சேறாம் அக்காரம் புடைவை வெல்லம் 
கிளரென்ப கிரணத்தோடு கிளர்கோட்டுமலர்பூந்தாதாம் 
களரி போர்க்களங் காடென்ப கருமஞ்செய்யிடமு மாமே.
றகரயெதுகை
275 (1) 
இறைவையே புட்டி லேணியென்ப கூர் மிகுதி கூர்மை 
குறடென்ப பலகை திண்ணை கொண்மூவென்பது விண் மேகம் 
புறவ மோர்புள்ளுங் காடும் முல்லை நன்னிலனும் போற்றும் 
புறணியெ குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமுந் தோலும்.
276 (2) 
மறஞ் சினம் பிணக்குக் கூற்றாம் மலைந்த சேவகமு மாகும் 
குறிஞ்சி யோரிசை யோர்பண்ணே குறிஞ்சி செம்முள்ளிக்கும் பேர் 
பிறங்கலே மிகுதி வெற்பு நிறை வொலி பெருமை யைம்பேர் 
குறம்பொறை குன்று காடு குறிஞ்சிநன்னிலத்தூர் முப்பெர்.
277 (3) 
தாறு விற்குதையே யெல்லை தாழ் மரக்குலை முட்கோலாம் 
சேறென்ப கும்பி சாரந் தித்திப்பு விழவு கள்ளே 
ஊறென்ப தீமை தீண்டல் உயிர்கொலை யிடையூரென்ப 
ஏறிடி முதல்நாளாகு மிடபமொடெருதுமப்பேர்.
278 (4) 
சிறையே வேறிடமாம் புள்ளின்சிறகொடு காவலும் பேர் 
கறை யிறுத்திட லிரத்தங் கறுப் புரல் விடம் பேரைந்தே 
முறையென்ப கோசமே யூழ் முறைமையு முப்பேரென்ப 
பிறழ்தலே நடுக்கம் வேறுபெயர்தலோ டொளி விடற்பேர்.
279 (5) 
ஏற்றலே கோடலென்ப வெதிர்ந்து போர் செய்தலும் பேர் 
ஆற்றலே பொறை முயற்சி அதிகமே வலியே ஞானம் 
தோற்றலே வலி பிறப்புத் தோன்றுதல் புகழே நாற்பேர் 
போற்றலே புகழ்த லோம்பல் புறமென்ப முதுகு வீரம்.
280 (6) 
அற்றமே மறைவுஞ் சோர்வும் அவகாசந் தானுமாகும் 
குற்றல் குற்றுதல் பறித்தல் குரை யென்பதிடைச் சொலோசை 
எற்றென்ப திரக்க மொத்தல் எறித லெத்தன்மைத்தென்றல் 
கொற்றியே துர்க்கைநாமங் கோவிளங்கன்றுங் கூறும்
281 (7) 
உறழ்வென்ப புணர்வு காலஞ் செறி விடை யீ டொப் பைம்பேர் 
உறவியே யெறும்பு நீரூற் றுலைக்கள முற வுயிர்ப் பேர் 
உறுக ணென்பதுவே துன்ப முறுபய மிடி நோய் நாற்பேர் 
உறுவனே முனி புத்தன் பேர் உலக்கையே யுரோங்க லோணம்.
282 (8) 
விறைப்பென்ப செறிவு வெற்றி வெருவுதல் பொருதல் நாற்பேர் 
பொறுத்தலே பொறை தாங்கற்பேர் புந்திதான் புதனே புத்தி 
இறுத்தலே ஒடித்தல் தங்க லியம்புதல் முப்பேரென்ப 
கறுப் பிருள் சினக்குறிப்பாங் கன்று கைவளை கன்றாமே.
283 (9) 
பொறி மரக்கலமே செல்வம் பூமக ளெந்திரங்கள் 
அறி விலாஞ்சனை யெழுத்தே டைம்பொறி வரி யொன்பான்பேர் 
வெறி வெருவுதல் கலக்கம் வெறியாட்டு வட்ட நாற்றம் 
குறியபேய் துருவை கள்ளுக் கூறு நோயொன்பதாமே.
284 (10) 
உறை பொருண் மருந்து வாழ்நாள் உணவு வெண்கலமே காரம் 
எறிபடைக்கலத்தின்கூடே யெண்குறித்திறுதிபெய்தல் 
நறிய பாற்பிரை யிடைச்சொல் நகர நீர்த்துளி யீராறாம் 
அறை முழை மோதல் பாறை திரை சிற்றின் மொழியாமே.
285 (11) 
இறை சிவன் கடன் வேந்தன் கையிறை யிறுப்பிறை சிறந்தோன் 
சிறுமை புள்ளிறகு தங்கல் சென்னி கூ னிறப் பீராறே 
உறையு ளென்பது நா டூராம் உறுதியே நன்மை கல்வி 
பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி.
286 (12) 
இறும்பு தாமரையின்பூவே மலை குறுங்காடு மேற்கும் 
இறும்பூது தகைமை வெற்போ டதிசயங் குழை தூ றென்றாம் 
கறங்கலே சுழல லோசை கதிரென்ப திரவி சோதி 
பறம் புயர்மலை முலைப் பேர் பாய்மாவே குதிரை வேங்கை.
287 (13) 
கூற்றென்பதி யமன் சொல்லாங் கோமானே மூத்தோன் பன்றி 
நாற்ற நாறுதல் தோன்றற்பேர் நனவென்ப தகலந் தேற்றம் 
ஊற்றென்ப தூன்று கோலும் உறவியு மிருபேரோதும் 
நோற்றலே பொறை தவப்பேர் நுணங்கென்ப நுண்மை தேமல்.
288 (14) 
கற்பமே பிரமன் வாழ்நாள் கற்பக தரு சுவர்க்கம் 
பொற்பென்ப தழகினோடு பொலிவு யொப்பனையு மாகும் 
பற்பமே பதூமந் தூளாம் பழங்கணே துன்பம் ஓசை 
உற்கை தாரகை தீக்கொள்ளி யுண்டிதான் புசித்தல் சோறே.
289 (15) 
முற்றல் காழ்கோடன் மூப்பு முடிவுடன் வளைத்தல் நாற்பேர் 
நெற்றியே நுதலின்பேரும் நெடும் படை யுறுப்பு மாகும் 
கொற்றமே வன்மை வெற்றி கோவரசியன் முப்பேரே 
ஏற்றுதல் புடைத்தலோடேயெறிதலு மிருபேராமே.
290 (16) 
அறுகென்ப சிங்க மோர்புல் யாளியாகு முப்பேர் 
வறிதென்ப தருக லேசற் றறியாமை பயனில் வார்த்தை 
மறலியே மயக்கங் கூற்றா மறவி கண் மறதி யீனம் 
குறளென்ப குறளும் பேயுங் குறுமையும் கூறுமுப்பேர்.
291 (170) 
விறலென்ப வலி வென்றிப் பேர் விழைந்தோனே நண்பன் வேட்டோன் 
நொறிலென்ப விரைவினோடு நுடக்கமு மிருபேராமே 
நெறி வழி நீதி யென்ப நிருமித்தல் படைப் பாராய்தல் 
பறை பறை வசனத்தோடு பறக்கும்புள்ளிறகு முப்பேர்.
னகரயெதுகை
292 (1) 
மனவு நன்மணி சங் கக்காம் வரை மலை யிறை வேய் மட்டாம் 
தனி தமி யொப்பின்மைப் பேர் சாந்தமே கமையுஞ் சாந்தும் 
முனை பகை நுனி வெறுப்பாம் முளை வே யங்குரமே பிள்ளை 
யின மிருங்கிளை யமைச்சா மெழில் வண்ண மிளமைக்கும் பேர்.
293 (2) 
ஆனகம் படகத்தின் பேர்ஆகுந் துந்துபியு மப்பேர் 
மானமே யளவி லச்சை விமானமே பெருமை குற்றம் 
பானலே பழன நெய்தல் பாங்கரே யிடம் பக்கப் பேர் 
மானலே மயக்கம் ஒப்பாம் வருடமே மழையு மாண்டும்.
294 (3) 
தானமே மத நீராட்டுத் தருகொடை சுவர்க்க நாற்பேர் 
பீனமே பருமை பாசி பேடென்ப பேடி யூரே 
நானமே பூசும்பூச்சு நானமுங் குளிக்குநீரும் 
வான மாகாயமென்ப மழை யுலர்மரமுமாமே.
295 (4) 
வானி மேற்கட்டி சேனை வண்துகிற் கொடி முப்பேரே 
ஆனி யுத்தராட மூலஞ் சேத மோர் மாதமென்ப 
ஏனையே யொழிபு மற்றையெனு மிடைச்சொற்கு மப்பேர் 
ஆனியம் பொழுது நாளாம் அனந்தை யோர்சத்தி பூமி.
296 (5) 
முன்னலே நினைவு நெஞ்சா முன்னஞ் சீக்கிரியோ டெண்ணம் 
கன்னல் சர்க்கரை கரும்பு கரக நாழிகைவட்டிற் பேர் 
மன்ன னுத்தரட்டாதிப்பேர் மன்னவன் றானுமாகும் 
கின்னர நீர்புள் யாழாங் கிடக்கை பூதலம் பாயற் பேர்.
297 (6) 
பின்னையே பின்றை தங்கை பெரியமாற்குரியதேவி 
கொன் பயனிலாமைக் காலங் கூறிய பெருமை யச்சம் 
பொன்னென்ப வனப் பிரும்பு பூமகள் வியாழ நாற்பேர் 
மன் னிலை மிகுதி வேந்தே வாழி வாழ்கென லிடைச்சொல்.
298 (7) 
வன்னியே பிரமசாரி வளர்கிளி சமி செந்தீயாம் 
சென்னி கம் பாணன் சோழன் சீரு ளீயஞ் செம்பாகும் 
கன்னி பெண் ணழிவிலாமை கட்டிளமைக்கும் பேரே 
தென் னிசை வனப்புத் தாழை தெற்கொடு கற்பு மாமே.
299 (8) 
குன்று வேதண்டமாகங் குறைவொடு சதய முப்பேர் 
அன்றி லோர் புள்ளு மூலநாளென வாமிரண்டே 
மன்றமே வௌியின் நாமம் வாச மம்பலமு மப்பெர் 
மன்றலே பரிமளப்பேர் மருவு கல்யாணமும் பேர்.
300 (9) 
தன முலை பொன் ஆன்கன்று சந்த முத்தன மைம்பேராம் 
கனவு நித்திரை மையற்பேர் கலிங்கஞ் சாதப்புள் ளாடை 
கனை செறி வொலியா மென்ப கவரியே சவரி மேதி 
பனுவலே கிளவி நூலாம் படப்பை யூர்புறமே தோட்டம்.
301 (10) 
அனந்தனே சிவன் மால் சேடன் அலாயுதன் அருக னைந்தே 
அனந்தமே முடிவிலாமை யாடகம் விண் முப்பேரெ 
அனங்கமே யிருவாட்சிப் பேராகு மல்லிகைக்கு மப்பேர் 
தனஞ்சயன் பார்த்தனே செந்தழ லொரு காற்றுமாமே.
302 (11) 
சானகி சீதை மூங்கில் தனுவென்ப துடல் வில் லற்பம் 
சானுவே மலை முழந்தாண் மலைப்பக்கம் தானுமாகும் 
சோனையே யோண நாளும் விடாமழைசொரிதலும் பேர் 
கானலே மலைச்சார் சோலை கடற்கரைச்சோலை பேய்த்தேர்.
303 (12) 
வானென்ப விசும்பு மேகம் மழையொடு பெருமை நாற்பேர் 
தானையே சேனை யாடை படைக்கலந் தானுமாகும் 
கானந் தே ரிசையே பேதை காடுதற் பாடி யைம்பேர் 
ஏனலே செந்தினைப்பேர் தினைப்புன மென்று மாமே.
304 (13) 
முனியென்பது யானைக்கன்று முனிவன் வில் லகத்தி நாற்பேர் 
துனியென்ப புலவிநீட்டந் துன்ப நோ யாறு கோபம் 
பனியென்ப நடுக்கந் துன்பம் பயங் குளி ரிமமைம் பேரே 
சினை யென்ப முட்டை பீளா மரக்கொம்புஞ் செப்பு மப்பேர்.
305 (14) 
மானே சாரங்க மாவின்பொதுவொடு மகர ராசி 
கானே நன்மணங் காடென்ப கல்லி யூர்குருவி யாமை 
ஏனாதி மஞ்சிகன் மந்திரியுந் தந்திரியு மென்ப 
மீனே சித்திரை நாள் வான்மீன் மயிலையு மேவுமப்பேர்.
306 (15) 
ஞானமே யறிவு கல்வி நல்ல தத்துவ நூன் முப்பேர் 
யானமே மரக்கலத்தோ டெழிலுர்திவிகற்ப மிரண்டாம் 
ஏன மோலைக்குடைப் பேர் எறுழியு மறமு மப்பேர் 
மேனியே வடிவமென்ப நிறத்தையும் விளம்பலாமே.
307 (16) 
அன்னையே முன்பிறந்தாள் தோழி தாயாகு மென்ப 
அன்ன மோதிமமே சோ றாமாகார முட னெய்யுண்டி 
தன்மை யே ரியல்பினோடு தன்மையினிடமுஞ் சாற்றும் 
பன்னலே நெருக்கம் வார்த்தை பருத்தியின் பேருமாமே.
308 (17) 
வனமே நீர் மிகுதி காடு வளர்சோலை துளசி யீமம் 
மனுவே மந்திர மோர்நூலாம் மண்ணை பேய் இளமை மூடன் 
புனையென்ப தழகினோடு பொலிவு மொப்பனையுமாகும் 
மனையென்ப மனைவி வீடாம் வதுவையே மணங் கல்யாணம்.
309 (18) 
அன் வினையொடு பெயர்க்கும் விகுதி சாரியையு மாகும் 
மன்னிடுங் கனைத்தலென்ப திரு ளோசை யிருபேர் வைக்கும் 
இன்னென வொரு சொற் பல்பேர்க் கியற்கவி முந்நூற்றொன்பான் 
சொன்னவன் குணபத்திரன் றாள்சூடு மண்டலவன் றானே.

 

காப்பு

 

காப்பு

 

முடிவி லின்பத்து முவா முதல்வனைப் போற்றி செய்தே 

அடிதொறு மிரண்டு மொன்று மாதியிற் பொருளடக்கி 

நடைபெறு ககரமாதி னகரவீ றெதுகை யாகப் 

படியிலோர் சொற்பொருட் பல்விதத் தொகை பகரலுற்றாம்

 

ககரவெதுகை

 

 

பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் 

பகலே நாளொரு முகூர்த்தம் பகலவ னடுவே தேசு 

மகரமே சுறாப் பூந்தாதாம் வசி கூர்மை வசியம் வாளே 

அக மன மனையே பாவம் அகலிடம் உள்ளுமாமே.

சிகரி கோபுரமே வெற்புச் சீறெலி கருநாரைப்பேர் 

சிகழிகை மயிர்முடிப்பேர் சிறந்த வாசிகை தேமாலை 

சிகரமே மலையினுச்சி திரை சென்னி திவலை வெற்பாம் 

மகம் யாகம் ஓர்நாளென்ப மாய்வென்ப மறைவுஞ் சாவும்.

 

இகல் பகை வலி போர் முப்பேர் இகுளையே தோழி நட்பாம் 

புகரென்ப மழைக்கோள் குற்றம் புற்கெனு நிறமு முப்பேர் 

நகம் மலை யுகிர் மரப்பேர் நகை மகிழ் ஒளி சிரிப்பாம் 

ககனம் விண் படை காடென்ப கடவுள் தேமுனி நன்மைப்பேர்.

 

சாகஞ் சாகினி வெள்ளாடு தேக்கெனுந் தருவுமாமே 

பாகலே காரவல்லி பலா வென்றும் பகரலாமே 

யூகமே கருங்குரங்கோடு உட்பொருளுணர்தல் தர்க்கம் 

நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பி யானை.

 

திகிரியே மூங்கில் வட்டந் தேருருள் ஆழி வெற்பாம் 

சிகியென்ப மஞ்ஞை தீயாந் தீதுறு கேதுவும் பேர் 

ஞெகிழியே சிலம்பின் நாமம் நெருப்புரு கொள்ளிக்கும் பேர் 

எகினமே புளி மா ஞாளி கவரிமாநீர்நா யன்னம்.

 

ஆகுவே யெலியி னாமம் ஆம்பெருச்சாளிக்கும் பேர் 

யோகமே தியானங் கூட்டம் உபாயமாம் உயர்ச்சிக்கும் பேர் 

போகி யிந்திரன் பாம்பென்ப போகில் புட்பொது பூமொட்டாம் 

கோகிலங் குயில் பல்லிப் பேர் குடங்கரே குடிசை கும்பம்.

 

பொகுட்டுத் தாமரைப் பூங்கெட்டை பொருப்புச் சேற்றெழுந்த கொப்புள் 

இகுத்தலே செகுத்தல் வீழ்த்தல் இரித்தலோ டழைத்தல் ஈதல் 

புகைக்கிடு நாமந் தூமம் பேற்றும் யோசனைக்கும் பேரே 

அகைத்தல் வேதனை யொடித்தல் அறுத்திட லுயர்த்தலாமே.

 

சிக்கமே குடுமி நாமஞ் சீப்புட னுறியு மேற்கும் 

கொக்கு மாமரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம் 

வக்கிரங் கொடுமை மீளல் மடங்குத லுடனே வட்டம் 

சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு.

 

தூக்கென்ப பாட்டுங் கூத்தும்ந் துலாமும் ஆராய்தலும் பேர் 

பாக்கென்ப தெதிர்காலத்தை பகரிடைச்சொற் றுவர்க்காய் 

மேக்கு மேற்றிசை மேலும் பேர் மெய் யுண்மை யுடலுமாமே 

ஊக்கமே வலி யுற்சாகம் உள்ளத்தின் மிகுதிக்கும்பேர்.

 

10 

பக டிபம் பெருமை யேறு பஃறி யாண்மேதி யைம்பேர் 

தகடிலை யைம்மை யென்ப தபனனே யிரவி தீயாம் 

அகடெண்ப நடுவே குக்கி யருளென்ப கருணை சத்தி 

மகரந்தங் கள்ளுந் தேனு மலர்த்தாதும் வழங்குமுப்பேர்.

 

11 

சகுந்தம் புட்பொதுவே கங்கஞ் சடை யென்ப வேணிவேராம் 

சிகண்டியே பாலையாழின் றிறத்திசை மயில் அலிப்பேர் 

சகுனி புள் நிமித்தம் பார்ப்போன் சமமென்ப தம ரொப்பாகும் 

சகுனமே கிழங்கு புள்ளின்சாதியும் நிமித்தமும் பேர்.

 

12 

சக்கரம் பெருமை யோர்புள் தரணியே பிறப்பு வட்டம் 

மிக்க தேருருளே யாழி வரையென விளம்பு மெண்பேர் 

பக்கம் புட்சிறகு நட்புப் பகர் திதி யருகு மாகும் 

நக்கனே அருகன் சம்பு நிருவாணி நாட்டுமுப்பேர்.

 

13 

பூகமே திரளை பூகம் புன்கணென்பது நோய் துன்பம் 

வாகுவே யழகு தோளாம் மாசியே மக மோர்மாதம் 

பாகமே பிச்சை பங்காம் பயோதரம் புயலே கொங்கை 

வாகை பண் பொழுக்கம் வெற்றி தவந் தொழில் வழங்கண் மிக்காம்.

 

14 

நோக்கேன்பத யழகு பார்வை நுதலென்ப புருவ நெற்றி 

சேக்கையே மிருகந்துஞ்சுமிடம் முலை சிறந்த பாயல் 

பூக்கமே கமு கூரென்ப புலிங்கந் தீப்பொறி யூர் புள்ளாம் 

ஆக்கம் பூமகள் செல்வப்பேர் அறல் கருமணல் நீராமே.

 

15 

சீகரங் கரகம் வீசுங்கவரி யுந்தி வலையும் பேர் 

சாகரந் துயிலொழித்தல் சமுத்திர மிருபேர் சாற்றும் 

காகுளி தவிசு கண்டெத்தெழு மொலி இசையுங் காட்டும் 

ஈகை பொன் ஈங்கைப் பேரி ரவியே மலை யாதித்தன்.

 

16 

தகை யென்பதழகு பண்பு தயையொடு பெருமை நாற்பேர் 

அகியென்ப தரவி ரும்பாம் அரிட்டமே கள்ளுக் காக்கை 

ககமென்ப தம்பு புள்ளாங் கடுத்த லொப் பையம் வேகம் 

அகவல் பா மயிற்குரல் கூத் தந்தமே யழ கீறென்ப.

 

17 

அக் கென்பு விடை முரிப்பு மணி சங்கு மணியுமாகும் 

நக்கலே நகை யுண்டற்பேர் ஞாட் பமர் பாரங் கூட்டம் 

இக்கென்ப கரும்பு கள்ளாம் ஈரமே குளிர்ச்சி அன்பு 

மக்கள் மானுடர் சிறார்பேர் வரைதலே கொள்ளல் நீக்கல்.

 

18 

கேகயம் மஞ்ஞை யோர் பண் அசுணமாக் கிளத்து முப்பேர் 

தோகையே மயிற்வால் மஞ்ஞை விலங்கின் வால் சொல்லு முப்பேர் 

போகமே பாம்பின் மெய்யும் போகத்தின் விகற்ப மாகும் 

போகுதல் நெடுமை நேர்மை போகுதலெனு முப்பேரே.

 

19 

கைக்கிளை இசை விகற்ப மொருதலைக் காம முப்பேர் 

சுக்கை தாரகை மாலைப் பேர் சூத்திரம் பொறி நூ னூற்பா 

எக்கரே சொரிதலோடு குவிதலும் இருபே ரென்ப 

மொக்குளே குமிழி பூவின்முகிழேன மொழியலாமே.

 

ஙகரயெதுகை

 

20 (1) 

புங்கமே யுயர்ச்சி யம்பு பொரும் அம்பின் குதை முப்பேரே 

திங்க ளம்புலி மாதப்பேர் சித்திரன் ஓவன் தச்சன் 

கங்கென்ப வரம்பின் பக்கங் கருந்தினை பருந்து மாமே 

தொங்கலே பீலிக்குஞ்சந் தூக்கொடு தொடுத்த மாலை.

 

21 (2) 

சங்கமே கணைக்கா லோரெண் சபை சங்கு புலவர் நெற்றி 

பங்கென்ப முடமேயாகும் பாதியுஞ் சனியு மேற்கும் 

வங்கமே வெள்ளி நாவாய் வழுதலை ஈயமாமே 

அங்கணஞ் சேறு முற்றம் ஆஞ் சலதாரேக்கும் பேர்.

 

22 (3) 

ஞாங்கர் வேல் பக்க முன்பு மேலென நான்குமாகும் 

தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல் 

வாங்கலே வளைத்தல் கொள்ளல் வையென்ப கூர்மை வைக்கோல் 

வேங்கைபொன் புலி மரப்பேர் வீ நீக்கம் பூப்புள் சாவாம்.

 

23 (4) 

மங்குல் காரிருள் விண் முப்பேர் மருந் தமுதொடு மருந்தாம் 

பங்கியே பிறமயிற்கும் பகருமாண் மயிற்கும் பேராம் 

அங்கதம் பன்னகந் தோள் அணியுடன் வசைச் சொல்லாகும் 

பங்கமே சேறு தூசு பழுதொடு பின்ன மாமே.

 

24 (5) 

அங்கமே யுடலுறுப் பென் பாறங்கங் கட்டி லைம்பேர் 

பிங்கலம் பொன்னும் பொன்னின் நிறத்தையும் பேசலாகும் 

பொங்கரே மரத்தின் கோடு பொருப் புய ரிலவு முப்பேர் 

பொங்கலே கொதித்தல் மிக்காம் பொச்சாப்பு மறவி தீதாம்.

 

சகரயெதுகை

 

25 (1) 

பாசனம் மென்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் 

வாசமே யிருப்பிடம் பூமணம் புள்ளின் சிறகு தூசாம் 

கோசமே மதிலுருப் பாண்குறி முட்டை முறை பண்டாரம் 

தேசிகன் வணிகன் றேசாந்திரியொடு குருவுமாமே.

 

26 (2) 

மூசல் மொய்த்திடல் சாவென்ப முடலையே திரட்சி யுண்டை 

கீசகங் குரங்கு வேயாங் கேழ் நிறமொளி யொப்பாகும் 

வீசலேயெறிதலீவாம் வெம்மை யுட்டணம் விருப்பம் 

கேசர மகிழ்பூந்தாதாங் கிருட்டியொ ரீற்றாப் பன்றி.

 

27 (3) 

அசி படைக்கலமே வாளே அவமதிச் சிரிப்பு முப்பேர் 

நிசி யிரா மஞ்சள் பொன்னாம் நீர் புனல் குணம் பூராடம் 

பிசியென்ப பொய்யும் சோறும் பேசரும் பொருளு முப்பேர் 

சுசி கோடைசுத்தந் தீயாஞ் சுடர் விளக் கிரவி யங்கி.

 

28 (4) 

ஆசென்ப விரைவு குற்றம் அற்ப மெய்க்கவச நாற்பேர் 

காசென்ப கோழை குற்றங் கதிர்விடு மணி முப்பேரே 

ஆசினி பலாவிசேடம் மரவுரி மரக்காழ் விண்ணாம் 

தேசிக மழகு காந்தி திசைச்சொல் லோர்கூத்துச் செம்பொன்.

 

29 (5) 

பச்சையே மரகதம் தோல் பரிமளப் புதல் மால் புந்தி 

கச்சை யென்பது தழும்பு கயிறொடு கவச முப்பேர் 

செச்சைமை வெட்சி தேய் வைதிகையென்ப திசை சுணங்காம் 

மிச்சையே பொய்த்தாலாகு மிடித்தலஞ் ஞானமுப்பேர்.

 

30 (6) 

பிச்ச மாண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையுமாகும் 

கச்சம் யானைக்கழுத்திற் கய றளவொடு மரக்கால் 

எச்சமே குறை சேயாக மிகமென்ப மரக்கோடி யானை 

அச்சமே யகத்தியைம் மை யஞ்சலிம்முப் பேராமே.

 

31 (7) 

ஆசையே திசை பொன் அன்பாம் ஆகுலம் வருத்த மோசை 

காசையே காயா நாணல் காமர் தா னழகு காதல் 

பாசமே கயிறு கூளி பக ரூசித்துளை அன்பாகும் 

தூசென்ப தாடை யானைப் புரசை தூசிப்படைப் பேர்.

 

32 (8) 

தாசியே பரணி சூளை தளியென்பது துளியே கோயில் 

வேசரி கழுதையே கோவேறு வேசரி யுமாகும் 

ஆசுகம் பகழி காற்றாம் அந்தரி யுமையே துர்க்கை 

கோசிகஞ் சாம வேதங் கூறு பட்டாடைக்கும் பேர்.

 

33 (9) 

பசுவேறு சீவனாவாம் பாரதி வாணி தோணி 

வசுவே ஆன்கன்றும் பொன்னும் வசுக்களுந் தீயு நாற்பேர் 

அச மூவாண்டுறு நெல் லாடாம் அணை யென்ப கரையே மெத்தை 

சசி யென்ப கர்ப்பூரஞ் சந்திர னயிராணி முப்பேர்.

 

34 (10) 

விசும்பு பொன் னுலகு மேகம் விண்ணொடு திசையு நாற்பேர் 

தசும்பு நற்குட மிடாவாஞ் சாத்தனே அருகன் ஐயன் 

இசை புகழ் கிளவி பாட்டாம் ஏங்கலே யொலி யிரங்கல் 

பிசுனனே கோளன் பொய்யன் உலோபனும் பேசு முப்பேர்.

 

35 (11) 

வச்சிரங் சதுரக்கள்ளி வைரமே குலிச முப்பேர் 

நொச்சியே சிந்து வார மதில் சிற்றூர் நுவலலாமே 

தச்சனே சித்திரைப்பேர் தபதி யென்றானுமாகும் 

உச்சி நண்பகலுச் சிப்பேர் உறுப் பவயவ முடம்பாம்.

 

36 (12) 

பாசென்ப பசுமை மூங்கில் பப்பென்ப பரப்போ டொப்பாம் 

மாசென்ப சிறுமை குற்றம் மழை அழுக்கொடு நாற்பேரே 

கேசம் பெண்மயிற்கும் ஆண்பாற் மயிற்குங் கிளத்தலாகும் 

வாசியே குழன் முன்னா ண்மா வாசி யென் னேவ னாற்பேர்.

 

37 (13) 

மிசையென்ப துணவு மேடு மீமிசைச் சொல்லு முப்பேர் 

விசயமே வென்றி வெல்லம் வெங்கதிர் மண்டலப்பேர் 

முசலியே யுடும்பு தாழை முந்திய ராம னோந்தி 

வசதி நல்லிட மூர் வீடாம் வர னயன் பரமன் காந்தன்.

 

ஞகரயெதுகை

 

38 (1) 

துஞ்சலே நிலை பேறாகுந் துயில் சோம்பு சாவுமாகும் 

பஞ்சரஞ் செருந்தி கூடாம் பரதரே கழியர் நாய்கர் 

கஞ்சமே தாளங் குல்லை கமல வெண்கலம் வட்டப்பம் 

குஞ்சம் ஈயோட்டி நாழி குறள் குன்றி குறளைச் சொல்லே.

 

39 (2) 

நெஞ்சென்ப மன மார்பின்பேர் நிழல் செல்வங் குளிர்ச்சி சாயை 

மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முது கிவ்வைந்தே 

வஞ்சி மேற்செல வோரூர் பா வல்லி மென்மருங்குற் பெண்ணாம் 

தஞ்சமே எளிமை யென்ப தரு பற்றுக்கோடுமாமே.

 

40 (3) 

அஞ்சனங் கறுப்பு மை திக்கானையி லொன்று முப்பேர் 

மஞ்சரியே பூங்கெத்து மாலை செந்தளிருமாகும் 

அஞ்சலி வணங்கல் வாவற்பறவையு மாகுமென்ப 

இஞ்சியே புரிசை யிஞ்சி யெறுழென்ப வலி தண்டாமே.

 

41 (4) 

கிஞ்சுக முருக்குச் செம்மை கிருட்டினன்தான் மால் பார்த்தன் 

கஞ்சமே கண்ணாடி கரிக்குருவிக்கும் பேரே 

பஞ்சமே சிறுமை யைந்தாம் பகழி யம்பிதன் குதைப்பேர் 

வஞ்சனை மாயை பொய்யா மாயன் மால் கருநிறத்தோன்.

 

42 (5) 

குஞ்சியாண் மயிர் புட் பார்ப்புக் குன்றியின் கொடிமுப்பேரே 

வஞ்சமே கபடம் வாளா மாயம் வஞ்சனை பொய் யென்ப 

கஞ்சனே குறளன் வேதன் களங்கந்தான் அழுக்குக் குற்றம் 

கஞ்சிகை சிவிகை யாடை கட்டிடு திரையுமாமே.

 

டகரயெதுகை

 

43 (1) 

நடலை வஞ்சனை பொய் யென்ப நடுங்கிய நுடக்க முப்பேர் 

மடல் பனையேடு போல்வ மலரித ழோர் நூற்கும் பேர் 

படர் நடை நினைப்பு நோவாம் பகர்ந்திடில் வீரர்கும் பேர் 

குட நகர் பசு வோர் கூத்துக் கும்பமே கரும்பின் கட்டி.

 

44 (2) 

மாடமே உழுந்தோ டில்லாம் மழையென்ப குளிர்ச்சி மேகம் 

கூடமின் மறைவு கொல்லன் சம்மட்டி குவட்டி னுச்சி 

சேட னோர்சாதி பாங்கன் செகந்தாங்கு மனந்தனென்ப 

கேடகம் பரிசை வேறோர் கேடிலுர் பலகை முப்பேர்.

 

45 (3) 

இடங்கரே முதலை தூர்த்தர் குடங்கரின் முப்பேரென்ப 

முடங்கலே மடங்கல் கைதை முங்கில் நோய் ஓலை யைம்பேர் 

படங்கு மேற்கட்டியென்ப பகர் பெருங்கொடி யுமாகும் 

விடங்க மேர் கொடி கொடுங்கை மிதவையே தெப்பஞ் சோறாம்.

 

46 (4) 

குடிஞை புட்பொதுவும் யாறும் கூகையு யாகுமென்ப 

தடி வய லுலக்கை வில்லு தண்டுமின் தசை யுடும்பாம் 

தொடி வளை யொருபலப்பேர் சூழ்ந்த கங்கணமு மாகும் 

மடி யடங்குதலே சோம்பு வயிறு நோய் புடைவை தாழை.

 

47 (5) 

படிவமே வடிவ நோன்பாம் பந்தமே கிளையுங் கட்டும் 

வெடியச்சம் பரிமளிக்கு மென்புகை வௌியிம் முப்பேர் 

துடியெலம்பறை காலப்பேர் தூத் தூய்தூன் பற்றுக்கோடாம் 

கொடிறு பூசங் கதுப்பாங் குரவையே கட லோர்கூத்து

 

48 (6) 

கடிகை நாழிகையே துண்டங் கதவிடு தாழே முப்பேர் 

படிறு பொய் கிள விரண்டாம் பகர்தலே விற்றல் பேசல் 

சுடிகையே மடகு முச்ச சுட்டியு மிட்டபேரே 

இடி யிடிப்பேரே நென்மா வேற்றிடு முறுதிச் சொல்லே.

 

49 (7) 

நாடி நாழிகை நரம்பாம் நந்தல் கேடுடனே யாக்கம் 

பாடியே நகர நாடு பாசறை யாயரூர்ப் பேர் 

கோடிகந் துகில் பூந்தட்டாங் குடம்பையே முட்டை கூடு 

கோடி யெண் புதுமை தூசாங் குடிமியே வெற்றி யுச்சி.

 

50 (8) 

உடு விண்மீன் கிடங்கு நாவாயோட்டுங்கோ லம்பி லீர்க்காம் 

கடு விட முள்ளுத்தானே யரிதகி கசப்பு நாற்பேர் 

படு மரக்குலையே கள்ளுப் பரவு நீர்நிலை நன்மைப் பேர் 

படுதலே யொலி யின்றாதல் பகரி லுண்டாதல் பூத்தல்.

 

51 (9) 

மாடுபொன் பக்கஞ் செல்வம் வைகல் வைகறை நாடங்கல் 

சேடென்ப பெருமை நன்மை திரட்சியே யழகு நாற்பேர் 

பா டிடம் பெருமை யோசை பட்டே பட்டாடை சிற்றூர் 

ஈடென்ப குழைவே யொப்பே வலியொடு பெருமையும் பேர்.

 

52 (10) 

மடையென்ப மதகு சோறு மணிப்பணிக் கடைப்பூட்டும் பேர் 

படைபடைக்கலம் கலப்பை படுக்கை பல்லணமே தானை 

இடை நடு வென்ப மற்று மிடப்பெயர் நுசுப்புமாமே 

மட மறியாமை சத்திர மன்னிய முனிவாசப் பேர்.

 

53 (11) 

வாடை யென்பதுதான் வீதி வடக்காற்றுந் தானுமாமே 

ஆடு மேழகம் வெற்றிப்பேர் அல்கல்நாள் சுருங்கல் வைகல் 

கோடை மேல்காற்றினொடு குதிரை வெண்காந்த ளேன்ப 

ஓடை நீர்நிலை கிடங்கே யொரு மரம்வல்லி பட்டம்.

 

54 (12) 

அடுப் பென்ப பரணி நாளே யச்சமே சுல்லி முப்பேர் 

வடுச்செம்பு தழும்பு வண்டாம் மத்தக நெச்சி சென்னி 

இடக்கடரே மறைத்த வார்த்தை கும்பமு மென்ப நூலோர் 

கடைப்பிடி மறப்பிலாமை கருதிய தேற்றமாமே.

 

55 (13) 

பட்டமே ஓடை தூசு பதவி வாள் கவரிமா வாம் 

புட்டமே காகமாகும் புடைவையு நிறைவு முப்பேர் 

குட்டமே தொழுநோய் ஆழங் குளமெனப் பெயர் முப்பாற்றே 

வட்டமே பரிசை நீர்ச்சால் வலயங் கைம் மணி தூ சூர் கோள்.

 

56 (14) 

திட்டையே யுரலு மேடுந் திண்ணையு நண்ணு முப்பேர் 

தட்டை வேய்த் தினைத்தாள் கிள்ளைதனைக் கடிகோலே முண்டம் 

கிட்டியே தலையீற்றாவாங் கிருட்டியாந் தாள முப்பேர் 

கட்டளை நிறைகல் லொப்பே யிட்டிகை யியற்ற லாணி.

 

57 (15) 

நாட்டங் கண்ணோர்பண் வாளாம் நாகு சங் கிளமை நத்தை 

ஓட்ட மேலுதடே தோல்வி யுயிரென்ப காற்றறே சீவன் 

கோட்டங் கோண் படப்பை நாடு கோயி லவ்விய மான் கொட்டில் 

தோட்டியங்கு சங்க பாடந் துணையென்பதளவும் ஒப்பும்.

 

58 (16) 

தடமலை பெருமை கோணஞ் சரிகரை அகலம் வாவி 

அடல் கொலை வலிபோராகும் அருத்தமே பொருள் பொன் பாதி 

உடல் பொரு ளாகமென்ப வோங்கல் வெற் புயர மூங்கில் 

விடமே யிடபராசி விடை மரக்கொம்பு முப்பேர்.

 

59 (17) 

கடகமே சேனை வட்டங் கைவளை மதி னாற்பேரே 

வடகந் தோல் அத்தவாளம் வலமென்ப திடமே வெற்றி 

படுவி கள் விற்பாள் குண்டம் பரமென்ப கவச மெய்யாம் 

நொடி பிதிர் கிளவியாகு நூ னநிச்சயமே குன்றல்.

 

60 (18) 

கடங் கயிறு வாக் கதுப்புக் கான் சுர முடம்பு நீதி 

குடங் கடா மீமம் யானைக் குழாங் கடன் முழவைந் தேழாம் 

மடங்கலே சனி சீய மறலி நோ யுக மூழித்தீ 

படங் கரிமுகபடா நற்றுகில் பாம்பின்பட முப்பேரே.

 

61 (19) 

ஆடலே பெண்ணான் கூடல் வார்த்தைக் கூத்தாடல் வென்றி 

பாடலஞ் சிவப்பினோடு பாதிரி குதிரை முப்பேர் 

கோடரங் குரங்கு சோலை கொம்பொடு குதிரையாகும் 

ஆடவர் புருடர் நாமம் ஆ மிளையவர்க்கும் பேரே.

 

62 (20) 

கடிமணம் விரைவு கூர்மை காலம் பேய் விளக்கங் காப்பு 

வடி வச்சம் வாச மையம் வரைவு விம்மித மேழாறாம் 

வடுகே யிந்தளராகப்பேர் மருதயாழ் திறனுமாமே 

வடவையே குதிரைப் பெட்டை யுவாப்பிடி வடவைத் தீயாம்.

 

63 (21) 

கோடு சங்கூது கொம்பு மரக்கொம்பு விலங்கின் கொம்பு 

நீடு செய் வரம்பு குன்றின் முகடு நீர்க்கரை யேழ்பேராம் 

மோடு மேடு தரமாகும் முறுவலே நகைத்தல் பல்லாம் 

ஆடி யே யோர்மாதங் கண்ணாடி யுத்தராடமாமே.

 

64 ( 22) 

தட்டுத்தேர் நடுவு குற்றந் தட்டொடு பரிசை முட்டாம் 

செட்டி வாணிகன் செவ்வேளாஞ் செப்புரை கரண்டகப் பேர் 

மட்டென்ப தெல்லை கள்ளாம் மார்கமே சமயம் வீதி 

பட்டிகை யென்ப கச்சுப் பகட்டுட னிரதமாமே.

 

65 ( 23) 

கடைமுடி விடம் வாயிற்பேர் களே வரம்பிண முடம்பாம் 

உடை துகில் செல்வமென்ப வுடுக்கை தண்ணுமை துகிற்பேர் 

அடை யிலை கனமே யப்ப மடுத்தல் செல்வழி ஐம்பேராம் 

நடைவழி ஒழுக்கஞ் செல்வம் நாரென்ப கயி றன்பாமே.

 

66 (24) 

விடையெதிர்மொழியு மேறும் விடுத்தலும் விளம்பு முப்பேர் 

கிடை சடை யுவமை நெட்டி கீதமே யிசையும் வண்டும் 

படியங்கவடி சோபனம் பகை குண முவமை பாராம் 

குடி குலம் புருவ மூராங் கொடி வல்லி துவசங் காக்கை.

 

67 (25) 

நட்டமே நடனங் கேடா நகரென்ப மனையு மூரும் 

தொட்டலென்பதுவே யுண்டல் தோண்டல் கைதீண்டல் முப்பேர் 

தட்டலே தடை கிட்டற்பேர் தையெரு மாதம் பூசம் 

கட்டலென்பது தடுத்தல் களைதல் பந்தித்தல் கள்ளல்.

 

68 (26) 

புட்கர நிறைவு பாண்டமுகந் தீர்த்தம் புனல் வான் சேனம் 

கட்கம் பங்கயமே யானைக்கைநுனி குரு கீ ரைந்தாம் 

வெட்சி யென்பதுவே செச்சை மிகு நிரைகவர்த லென்ப 

பெட் பென்ப பெருமை யன்பாம் பிரசந் தேன் மது வண்டாமே.

 

69 (27) 

அடுதலே அட்ட லென்ப அடர்தலு கொலையு முப்பேர் 

சடிலமே நெருங்கலோடு சடை குதிரை முப்பேரே 

படலையே படர்தன் மாலை பதலையே வாசிக்கோவை 

கிடுகு தேர் மரச்சுற்றின் பேர் பரிசைக்குங் கிளத்தலாமே.

 

70 (28) 

படலிகை பீர்க்கு வட்டம் பரந்த கைம்மணி பூந்தட்டாம் 

கொடியனே கொடியன் கேதாங்குண்டாழந்தாழ்வாண்மாவே 

தொடுவென்ப மருதப்பூமி தோட்டங்கைதவ முப்பேரே 

முடிமயிர் முடியே சென்னி மகுடமுமொழியலாமே.

 

71 (29) 

ஆடகந்துவரை பொன்னாம்அஞரறிவிலரே துக்கம் 

கோடகமுடியருப்புங்குதிரையும்புதுமையும்பேர் 

பீடிகையாவணம் பூந்தட்டொடுபீடமுப்பேர் 

தோடு பூவிதழே பெண்ணை மடல் போல்வ தொகுதிக்கும்பேர்.

 

72 (30) 

அடரென்பநெருங்குதற்பேரைம்மையுவடிவுமாகும் 

விடர்முனியிருப்புத்தூர்த்தர்கமர் வெற்பின் முழைகாடைம்பேர் 

விடலையே தலைவன் பேரும் விறலொன்றன்பேருமாகும் 

அடிசெண்டு வௌி தாளாதி கவிதையின்பாதமாமே.

 

ணகரயெதுகை

 

73 (1) 

புணர்வு தோய்ந்திடலிசைப்பாம் பொழில் புவிபெருமை சோலை 

உணர்வென்ப தௌிவே யூடல் ஒழிதலே அறிவுமாகும் 

குணமென்ப கயிறு பண்பு கும்பம் வின்னானி நாற்பேர் 

கணமுடுநோய் திரட்சிகாலநுட்பம் பேய் வட்டம்.

 

74 (2) 

ஆணமே குழம்போடன்பாம் அலநாஞ்சில் அமையுமென்றல் 

ஓணமாயோனாளாறாம் ஊதிய மிலாபங் கல்வி 

காணமே பரியூண் செக்கோர் காணம் பொற்காசு நாற்பேர் 

கோணலே மாறுபாடுங் கூனுமாம் வளைவுமாமே.

 

75 (3) 

குணில் குறுந்தடி கடிப்பாங் குல்லையே துளவு வெட்சி 

மணி நவமணியே கண்டை வனப்பொடு கருமை நன்மை 

துணி சோதிநாளே துண்டந் துளி மழைத்துளி பெண் ணாமை 

பிணி முக மயில் புட்பேராம் பிசிதம் நீ ரிறைச்சி வேம்பு.

 

76 (4) 

நா ணிலச்சைப்பேர் தானே கயிறென்று நாட்டலாகும் 

தோணியே கடைநாள் வங்கந்தொடு கணை தெப்பஞ் சேறு 

வாணியே யோர்கூத்தின்பேர் வாக்கு நாமகளுமாமே 

ஏணியே யுலகோடெல்லை யிறைவை மானென்றுஞ் சொல்லும்.

 

77 (5) 

திணை நிலங் குல மொழுக்கஞ் செவி யென்ப காது கேள்வி 

பிணை யாசை விலங்கின்பெண்பேர் பிலவங்கங் குரங்கு தேரை 

கணை யம்பு திரட்சியும் பேர்கட்சியே காடுங் கூடும் 

பணை வயல் பரியின் பந்தி பருத்தல் வே யரசு பீடாம்.

 

78 (6) 

யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை 

பாணந்தான் மேகவண்ணக் குறிஞ்சி யெய்கணை பூம்பட்டாம் 

சேணென் பதகலநீளஞ் செப்பிடி லுயர முப்பேர் 

ஆணை மெய்யுடனே வென்றி சூ ளேவலாக நாற்பேர்.

 

79 (7) 

அண்டமாகாய முட்டை அயிலென்ப வேலே கூர்மை 

துண்டமே சாரைப்பாம்பு துணியொடு வதன மூக்காம் 

கண்டமே கவசம் வெல்லங் கழுத் திடுதிரை வாள் துண்டம் 

முண்டகந் தாழை கள்ளு முளரி மத்தக முள் மூலம்.

 

80 (8) 

அண்டரே பகைவர் வானோர் ஆய ரென்ராகு முப்பேர் 

சுண்டனே சதய நாளுஞ் சூரனும் வேறுகாட்டும் 

கண்டல் கேதகை முள்ளிப்பேர் கரைதலே விளித்த லோசை 

பண்டம் பொன் பணிகாரப்பேர் பாகு பால் குழம்பு பாக்காம்.

 

81 (9) 

விண்டென்ப மாயோன் வெற்பு மேகமே மூங்கில் காற்றாம் 

தொண்டென்ப பழமை யொன்பான் றொழும் பொடு வழிபாடாமே 

தண்டென்ப குழாயே வீணை தடி படை மிதுனம் ஓந்தி 

வண்டென்ப சங்கு குற்றம் வளை யளி வாளி யைம்பேர்.

 

82 (10) 

உண்டையே திரளை யாகம் உறுபடை வகுப்பு மென்ப 

தொண்டை யாதொண்டை கொவ்வை தூங்கும் யானைத் துதிக்கை 

கொண்டையெ மயிர் முடிக்கு மிலந்தையின் கனிக்குங் கூற்றாம் 

கண்டிகை பதக்கம் வாகுவலயமே கலன் பெய்செப்பு.

 

83 (11) 

தண்ண மோர்கட் பறைப்பேர் தறித்திடு மழுவுமாகும் 

வண்ண மேர் சந்தம் பண்பாம் மறை யிராசியமே வேதம் 

பண்ணென்ப பாட்டும் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர் 

மண் ணணு வொப்பனைப்பேர் முழவின் மார்ச்சனை யுமாமே.

 

84 (12) 

அணங்கு நோய் அழகு தெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம் 

துணங்கையே விழாப் பேய் கூத்தாம் ஆதிரைநாளுஞ் சொல்லும் 

குணுங்கர் தோற்கருவி மாக்கள் குயிலுவர் இழிஞர் முப்பேர் 

துணங்கற லிருள் விழாவாந் தோன்றலே சுத னாதன் பேர்.

 

85 (13) 

புணரியே வாரி நீரிற்பொருதிரை கரை முப்பேராம் 

பணிலமே சலஞ்சலஞ் சங்கிருபெயர் பகரலாமே 

கணி வேங்கை மரமதாகுங் கழனிசூழ் மருதமும் பேர் 

பணியே தோற்கருவி வார்த்தை பாம்பு செய்தொழிலு மாமே.

 

86 (14) 

பாணி யூர் நீர் கையோசை பற்றுக்கான் போது நாடு 

சேணுறு சோலை பண்டஞ் சிறந்த பல்லியம் பன்னொன்றாம் 

தாணுவே சைலங் குற்றி சங்கர நிலை தூ ணைம்பேர் 

வேணியே சடை விசும்பாம் வியாளமே புலியும் பாம்பும்.

 

87 (15) 

குண்டலங் குழை விசும்பாங் குபேரனே தனதன் சோமன் 

மண்டலம் பரி யூர் வட்டம் மந்தியே யூகம் வண்டு 

கொண்டலே முகில் கீழ்காற்றாங் கோட்டியே வாயில் கூட்டம் 

மண்டலி பூனை பாம்பு மண்ணொடு நாயுமாமே.

 

88 (16) 

புண்டரீகந் திக்கானை புலி வண்டு கழுகு கஞ்சம் 

தண்டமே யானைசெல்லும்வழி தண்டாயுதங் குடைக்கால் 

பிண்டி நென்மா வசோகாம் பிதாச் சிவன் பிரம னாரை 

கண்டகஞ் சுரிகை முள் வாள் களவென்ப களாச் சோரப் பேர்.

 

89 (17) 

பண்ணவன் முனிவன் தேவன் பகர்குரு யருக னார்ப்பேர் 

தண்ணடை மருதஞ்சாரூர் நாடேன யிருபேர் சாற்றும் 

வண்மையே வழங்கல் வாய்மை வளம்புகழ் வலியாமென்ப 

ஓண்மையே மிகுதி நன்மை யொழுங் கறி வழ கைம்பேரே.

 

90 (18) 

எண் வலி யெள் ளிலக்கம் எளிமை சோதிடம் விசாரம் 

கண் ணிடங் கணுவே கண்ணாங் காஞ்சி மேகலை யோர்பண்ணாம் 

விண் முகில் சுவர்க்கம் வானாம் விபுலம் பார் விரிவு பீடு 

பண்ணையே வய னீர்த் தாழ்வு மருத மாத்துயிலும் பாழி.

 

91 (19) 

காண்டமே திரை கா டம்பு கமண்டலங் கலன் பெய்செப்பு 

நீண்டகோன் முடிவு தூசு நீர் படைக்கல மீரைந்தாம் 

பாண்டி லே றூர்தி வட்டம் பணை கட்டில் விளக்குத் தாளம் 

ஈண்டென்ப இவ்விடத்தோ டிப்படி சடிதியும்பேர்.

 

92 (20) 

அண்டச முதலை யோந்தி அரணை புள் ளுடும்பு பல்லி 

நண்டு மீன் தவளை யாமை நாக மிப்பியு மீராறாம் 

சண்டன் கூற்ற வலி வெய்யோனாந் தாள் கதவுறுதாள் பாதம் 

சுண்டையே சுண்டைக் கள்ளாஞ் சுவர்கமே சுவர்கங் கொங்கை.

 

93 (21) 

பணமென்ப தரவின்பையும் பாம்பும் பொற்காசும் முப்பேர் 

மணமென்ப வாசங் கூட்டம் வதுவையு மாகுமென்ப 

பணவையே பரணும் பேயும் பையுளே சிறுமை நோயாம் 

நுணவை யெண்ணோலை பிண்டி நுனியென்ப நுதி நுண்மைப்பேர்.

 

தகரயெதுகை

 

94 (1) 

மதலையே கொன்றை பிள்ளை மரக்கலங் கொடுங்கை தூணாம் 

சிதலை நோய் துணிசொல்லென்ப சீதநீர்குளிரே மேகம் 

பதலை யோர்கட்பறைப்பேர் பருவரை தாழிக்கும் பேர் 

கதலியே வாழை தேற்றுக் காற்றாடி துவச நாற்பேர்.

 

95 (2) 

இதழ் பனையேடு பூவின் இத ழுதடென விம்முப்பேர் 

கதழ்வு வேகங் சிறப்பாங் களி செருக்கொடு குழம்பு 

மதுகமே யிருப்பை யொட்டி மதுரமாந் தராவுமாமே 

சிதட னந்தகன் மூடன்பேர் திதி பக்க நிலை பேறும்பேர் .

 

96 (3) 

ஆத னாருயி ரோர் வில்லான் அங்கி யென்பது தீச் சட்டை 

போதகம் யானைக்கன்று போற்றிய இளமைக்கும் பேர் 

ஏதந் துன்பங் குற்றப் பேர் இமமே மயானங் காட்டம் 

சூதன் தேர்ப்பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை.

 

97 (4) 

சூத மாமரமே வண்டு சூதுட னிரதந் தோன்றல் 

சூதகமே யாசௌசந் தோகைமார் தோயாப்பூப்பாம் 

பூத மா லிறந்தகாலம் புனித மைம்பூதஞ் சீவன் 

மாதவந் தவம் வசந்தம் வாதமே தருக்கங் காற்றாம்.

 

98 (5) 

மதன் வலி வேள் வனப்பாம் வலித்தலே வளைத்தல் பேசல் 

பதங்கம் புட்பொது விட்டிற் பேர் பலி பூசை பிச்சை நீராம் 

சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப் பட்டதாமே 

நிதம்பமே அல்கு லென்ப நெடுமலைப் பக்கமும்பேர்.

 

99 (6) 

சதி யுரோகணி கற்பாட்டி வஞ்சனை தாளவொத்து 

விதியென்ப வினை யயன்பேர் வேட்டுவன் மகநாள் வேடன் 

பதி யிறை கேள்வ னூராம் பதுக்கையே பாறை தூறு 

பிதிர் கதை நொடி தூவற்பேர் பிண்டமே திரளை பிச்சை

 

100 (7) 

ஆதியே முத னேரோடல் அருகன் மா லீசன் வேதன் 

பூதியம் புவி யுடற்பேர் பொம்மலே பொலிவுஞ் சோறும் 

பாதிரிப் பாடலப் பேர் பணைத்தெழு மூங்கிற்கும் பேர் 

ஏதி யாயுதம் வாளென்ப இழை நூ லாபரண மாமே.

 

101 (8) 

சாதியே பிரம்பு கள் ளோர்தரு சிறுசண்பகப் பேர் 

போத ஞானம் தோணிப்பேர் புகல் குதி ருடல் சொல் வெற்றி 

ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பாம் 

ஓதிமம் அன்னம் வெற்பா முருத்தலே தோற்றல் கோபம் .

 

102 (9) 

சுதை மகள் கறவாத்தேனு சுண்ணச்சாந் தமுது நாற்பேர் 

புதையென்ப கணையின் கட்டும் புதுமையும் மறைவு முப்பேர் 

மதுவென்ப நறவுந் தேனும் வசந்தகாலமுமா மென்ப 

கதை தண்டாயுதமே வார்த்தை காரணமிம் முப்பேரே

 

103 (10) 

சீதையே பொன்னாங்காணி படைச்சால் சீராமன்றேவி 

மேதை தோல் புத னிறைச்சி மிக்க பேரறிவு கள்ளாம் 

கோதை முன்கைத் தோற் கட்டி குழறார் காற் றொழுங்கு சேரன் 

ஓதை பேரொலி மதிற்பேர் உக்கந் தீ யிடை யா னேறு.

 

104 (11) 

அத்தர் பொன் பாதிகை கண்ணாடி சொற்பொருள் கா டோர்நாள் 

புத்தகங் கோசமென்ப சித்திரப்படாமு மாமே 

நத்தமே யிருளுமூரு நந்துட னிரவு நாற்பேர் 

துத்த மோரிசை நாய் பாலே வயிறு கண் மருந்துஞ் சொல்லும்.

 

105 (12) 

அத்தென்ப அரைஞாண் செம்மை யசைச்சொலோ டிசைப்பு நாற்பேர் 

கொத்துப் பூங்கொத்துத் தொண்டாந் தூம்பு வேய் துளை மரக்கால் 

தத்தை மூத்தாள் கிளிக் காந்தழல் கிளிகடிகோல் செந்தீ 

உத்தர மூழித்தீ மேலொடு மறுமொழி வடக்காம்.

 

106 (13) 

கூத்தனே யுயிர் நடன்பேர் குலங் குடி கோயில் கூட்டம் 

ஊழ்த்தலே நினைத்தல் செவ்வியுறு பதனழிவு முப்பேர் 

பாத்தென்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்த முப்பேர் 

தீர்த்தமே விழாவு நீருந் தீர்த்தனே யருக னாசான்.

 

107 (14) 

குத்தி மண் ணடக்க மென்ப கோணம் வாள் குதிரை மூக்காம் 

பத்தியே முறை யொழுக்கம் பகர் வழிபாடு முப்பேர் 

அத்தி யார்கலியே யானை யத வெலும் பாகநாற்பேர் 

சத்தியஞ் சபத மெய்யாந் தபுதலே சாவுங் கேடும்.

 

108 (15) 

பித்திகை கருமுகைக்குப் பெயர் சுவர் தலமுமாகும் 

கத்திகை தொடை விகற்பந் துவசமே கமழ் வாசந்தி 

உத்தி செந்திரு வுருப்புச் சுணங்கு ரையாடன் முப்பேர் 

துத்தியே சுணங்கு பாம்பின் சுடர்பொறி புத லொன்றாமே.

 

109 (16) 

சித்தரபானு செந்தீ திவாகர னாண்டொன்றின் பேர் 

பத்திர மிலை வனப்புப் படைநன்மை சிறகே பாணம் 

சித்திர மழ கோர்பாடல் சிறந்த விம்மித மேரண்டம் 

சத்திரங் குடையே யன்னசாலை கைவிடா வேல் வேள்வி.

 

110 (17) 

காத்திரங் கன மெய் சீற்றங் களிற்றின் முன்காலே கீரி 

நேத்திரங்கண் பட்டாடை நீலியே கருமை துர்கை 

கோத்திரம் புடவி தானே குலமொடு மலையுமாமே 

பாத்தியே சிறுசெய் யில்லம் பகுத்தலும் வகுத்த நாமம்.

 

111 (18) 

சதமிலை யிறகு நூறு சத்தமே யோசை யோழம் 

கதவமே கதவு காப்பாங் கழங்கு போய் நடங் கழற்சி 

பதமூர லின்பஞ் செவ்வி பதவி தாள் வரிசை வார்த்தை 

மதியோர் முன்னிலை யசைச் சொன் மாத மம்புலி புத்திப்பேர்.

 

112 (19) 

பீதகஞ் சாந்து பொன்மை பெருந்தனம் இருவேலிப்பேர் 

சாதகம் வானம் பாடி சனனம் பாரிட முப்பேரே 

சேதகஞ் சேறு செம்மை தேயந்தா னுடம்பு நாடாம் 

மாத ரோர்ரிடைச்சொல் காதல் வனப்பொடு மகளிராமே.

 

113 (20) 

சோதி மால ருகன் பானு சுடர்விளக் கீச னோர்நாள் 

பூதியே நரகஞ் செல்வந் துர்கந்தம் புழுதி நீறாம் 

வீதியே தெரு நேரோடல் மேலென்ப திடம் விண் மேற்காம் 

மாதிரந் திசை யாகாயம் மலை யானை நில மைம்பேரே.

 

114 (21) 

தாது பொன்முதலா மேழும் சடமுறு தாதோரேழும் 

பூதமோர் ரைந்துங் காவிக்கல்லுடன் புகலு நாற்பேர் 

வேதிகை பலகை திண்ணை வெதிரேன்ப செவிடு வேணு 

கேதுவே சிகி பதாகை கிள்ளைதான் குதிரை தத்தை.

 

115 (22) 

கதுப்பே யாண்மயிரும் பெண்பால்மயிரொடு கவுளு முப்பேர் 

விதப்பே கம்பித மிக்காகும் வித்தம் பொன் பழிப்பு ஞானம் 

அதிர் பொலி நடுக்கமென்ப அகப்பாவே புரிசை மேடை 

ஒதுக்கமே நடை மறைப்பாம் ஒருத்த லாண்விலங்கு வேழம்.

 

116 (23) 

பத்திரி பறவை காளி பரி யிலை பாணமைம் பேர் 

அத்தரி கழுதை விண் ணெட்டகம் பரி அசலம் அம்பாம் 

சத்தியே யுமை வேல் கான்றல் குடை வலி துவசந் தானாம் 

சுத்தியே யகல் வெண்சங்கஞ் சுத்த மோர் கருவிக்கும்பேர்.

 

117 (24) 

புத்தன்மாலருகன் சாத்தன் பூழில்தானகில் பூமிப்பேர் 

புத்தேளே புதுமை தேவாம் பூட்கை தோல் மேற்கோள் யாளி 

கைத்தல்துன்னங்கைத்தற்பேர் சாறு கள் விழவு தாறாம் 

முத்தமே பிரியமோட்டம் மருதநன்னிலமுத்தாமே.

 

118 (25) 

அத்தனே மூத்தோன் தந்தை அரனொடு குருவுந்நாற்பேர் 

சித்தமே திட முள்ளப் பேர் சேகரந் தலை மா வேராம் 

கைத்தலே சினங் கைப்பாகுங் கஞறலே பொலிவு கன்றல் 

சித்தென்ப செயமே ஞானஞ் செய் யென்ப நில மேவற்பேர்.

 

119 (26) 

உத்திரஞ் சித்தரஞ்சேர்ந்தொளிருமில்லுறுப்போ டோர்நாள் 

பைத்தலே முனிவினோடு பசுத்தலும் பகரலாகும் 

மத்திகையே சம்மட்டி சுடர்நிலைதண்டு மாலை 

மத்தென்ப தயிர்மத்தோடு மத்தமு மிருபேராமே.

 

120 (27) 

மதர்வு மேவுதல் வனப்பு வலி யிட மிகுதி யைம்பேர் 

புதவென்ப கதவோர் புல்லாம் புணர்சியே கலவி கூடல் 

சித ருறி திவலை வண்டு சீலையின்துணி நாற்பேரே 

அதர் வழி புழுதி யாடடின்அதரு நுண்மணலு மாமே.

 

121 (28) 

முதலை செங்கிடை யிடங்கர் முருந்தென மெழியலாகும் 

அத மிறங்குதல் பாதாங் கீழு மென்றைறுயு முப்பேர் 

கதி நடை விரைவே நான்கு கதியொடு கதியுங் காட்டும் 

மத மிபமதஞ் செருக்காம் மாயையே மாயஞ் சத்தி.

 

122 (29) 

பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மைப் பேர் 

பேதையோர் பருவம் மூடன் பெண் தரித்திரனே நாற்பேர் 

வாதுவர் யானைப்பாகர் வயப்பரிமாவடிப் பேர் 

மூதிரை யாதிரைப்பேர் முக்கணன் பேருமாமே.

 

123 (30) 

தாதியே பரணி நாளும் அடிமையும் யிருபேர்சாற்றும் 

போதுதான் காலம் பூவாம் போர்வை தோல் கவச மீக்கோள் 

சாதமே திடம் பதப்பேர் தகைமை ஏர் இரியியல்பு பீடாம் 

வீதலே கெடுதல் சாவே யிலம்பாடும் விளம்பு முப்பேர்.

 

நகரயெதுகை

 

124(1) 

இந்தன மிசையே காட்டம் எரி யிடு கனலுமாகும் 

சந்தமே நிறம் வனப்புச் சாற்றிய கவிதை சாந்தம் 

கந்த மிந்திரியம் பகுத்தல் கழுத்தடி கிழங்கு நாற்றம் 

மந்திரம் விசாரம் கோயில் வாசியின் குழாம் வீடே கள்.

 

125(2) 

அந்திலாங் கசையிடப் பேர் அணவலே அணுகல் புல்லல் 

சந்தியே அந்தி மூங்கில் சதுக்கமும் யிசைப்புமப்பேர் 

நந்தியே சிவனு ேமுறும் நந்தி யீச்சுரனு முப்பேர் 

உந்தி தேருருளே யாறே உவரி நீர் சுழியே கொப்பூழ்.

 

126 (3) 

கந்து பண்டியுளிரும்புங் கம்பமும் யாக்கைமூட்டும் 

கந்துகங் குதிரை பந்தாங் கன மென்ப புயல் பாரப் பேர் 

பந்து கந்துகமு மட்டுப்படர்நீர்தூந்துருத்தியும் பேர் 

குந்தள மாதரோதி குழற்கொத்து குருளை முப்பேர்.

 

127 (4) 

வேந்தனே அரசன் திங்கள் வியாழ னிந்திர னாதித்தன் 

காந்தார மிசை காடென்ப காழகங் கருமை தூசாம் 

ஏந்தலே பெருமை மேடா மெஃ குருக்கொடு வேல் கூர்மை 

கூந்தல் பெண் மயிர் பீலிப்பேர் குவலயங் குவளை பூமி.

 

128 (5) 

அந்தரம் முடிவு பேதம் அண்டமோடிடை நாற்பேரே 

கந்தரமென்ப மேகங் கழுத்தொடு மலை முழைப்பேர் 

மந்தாரந் தரு மரஞ் செவ்வரத்தமு மாகுமென்ப 

சிந்துரம் புளியே யானை செங்குடை திலகம் செம்மை.

 

129 (6) 

கந்தருவம் பண்வாசி கவந்த மென்பது நீர் மட்டை 

குந்தமே ஒரு வியாதி குருந்தொடு குதிரை கைவேல் 

செந்துவோர் நரக மோரி சீவனோ டணுவு நாற்பேர் 

சிந்து நீர் முச்சீ ராறு கடல் குற ளொறுதேசப்பேர்.

 

130 (7) 

அந்தி முச்சந்தி பாலையாழிசை இரவு மாலை 

நந்தென்ப நத்தை சங்கா நாறுதல் மணமுண்டாதல் 

மைந்தனே திறலோன் சேயாம் வசந்தமே வேனில் வாசம் 

வந்தியர் புகழ்வோர் பேரு மலடிகள் பேருமாமே.

 

131 (8) 

விந்தமோ ரெண்ணும் வெற்பும் விருத்தமே வட்டம் மூப்பாம் 

அந்தணர் அறவோர் பார்ப்பர் அணி படை வகுப் பணிப்பேர் 

அந்தகன் குருடன் கூற்றாம் அங்காரகன் றீச்செவ்வாய் 

மந்தகன் சனி கூர்ப்பில்லாமனுடனு மிருபேராமே.

 

பகரயெதுகை

 

132 (1) 

உப்பு மெல்லியலா ராடல் உவர் கடல் இனிமை நாற்பேர் 

செப்பமே நடுநிலைப்பேர் தெருவொடு நெஞ்சுமாகும் 

துப் பரக் கூற்றந் தூய்மை துகிர் பகை யனுபவப் பேர் 

கப்பண மிரும்பிற்செய்த நெருஞ்சின்முட் கைவேலாமே.

 

133 (2) 

தாபரம் மலைபோல் நிற்றல் சடமொடு தருவு முப்பேர் 

நீப முத்தரட்டாதிப் பேர் நிமித்த நீர்க் கடம்பு மாகும் 

யூபமே கவந்தம் வேள்விகுறு தம்பம் படைவகுப்பாம் 

சாபமே சபித்தல் வில்லாந் தளிமமே யழகு மெத்தை .

 

134 (3) 

சீப்பென்ப கதவிற் றாழும் சீவு கங்கமுமா மென்ப 

நாப்ப ணென்பது தேர்த்தட்டு நடுவும் யாழ்வுறுப்பு முப்பேர் 

காப்பென்ப காவலோடு கதவும் வெண்ணீருமாகும் 

யாபென்ப கவிதை காட்டாம் இறால் தேன்கூ டெருது மீனே.

 

மகரயெதுகை

 

135 (1) 

சமன்யமன் நடுவுமாகுஞ் சலமென்ப வயிர நீர் பொய் 

கமல நீர் வனசமும்பேர் கலாஞ் சினங் கொடுமையாகும் 

குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர் 

ஞமலி நாய் மயில் கள்ளென்ப நனை கள்ளு மலர்மொட்டும் பேர்.

 

136 (2) 

சாம மோர்வேதம் பச்சை சாமமே கருமை நாற்பேர் 

வாமமே குற ளிடப்பால் வனப்பொடு தொடையுமாமே 

பூ மலர் வனப்புக் கூர்மை பொலிவொடு பிறப்புப் பூமி 

ஏமமே சேமங் காவல் இன்பம் பொன் னிரவே மையல்.

 

137 (3) 

உம்பரே தேவராகும் உயர்நிலமுடன் மேலும் பேர் 

வம்மென்ப புதுமை கச்சு மண நிலையின்மை நாற்பேர் 

கும்பமே குட மிராசி கும்பி மத்தகமுமாகும் 

கும்பென்ப சிம்பு தோடாஞ் சுகமென்ப கிளியே யின்பம்.

 

138 (4) 

ஆம்பல் வேய் கள்ளுக் கவ்வை யல்லி வங்கியமே யானை 

சாம்பல் கூம்புதல் பழம்பூத் தமிழென்ப தினிமை நீர்மை 

தாம்பென்ப கயிறுதானே தாமணி தனக்கும் பேராம் 

காம்பு வேய் மலர்த்தாள் பட்டே கடிமலர்க் கொம்பு நாற்பேர்.

 

139 (5) 

அம்மையே வரு பிறப்பும் அழகுமாந் தாயுமாகும் 

சும்மையென்பதுவே நெற்போர் நா டொலி சுமையுஞ் சொல்லும் 

செம்மை செவ்வையுஞ் சிவப்புந் திரிதலே யுலாவல் கேடாம் 

கொம்மையே யிளமை வட்டங் கொங்கை கைகுவித்துக்கொட்டல்.

 

140 (6) 

அம் அழகு அசைச்சொல் நீராம் அழனந் தீ பிணமு மாகும் 

கம்மென்ப தலை ஆகாயங் கனங் கானீர் விதி வெளுப்புச் 

செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன் 

கம்மியர் கைவினைப்பேர் கண்ணாளர் தாமுமாமே.

 

141 (7) 

வாமனங் குறள் புராண மாதிரக்கயத்தி லொன்றாம் 

காமரம் அத்தநாளோ டடுப் பிசைப்பொதுவுங் காட்டும் 

நேமி சக்கரம் பார் வட்டம் நேமி புட் கட லையைம்பேரே 

தேமென்ப திடந் தித்திப்புத் தேன் நாற்றந் திசை தேசப்பேர்.

 

142 (8) 

தாமம் வெற் பொழுங்கு கொன்றைச் சாந் தொளி நகரந் தாம்பு 

பூ மணிக்கோவை மாலை பொருகளங் கரி யீராறாம் 

சோம னோர்வள்ளல் லிந்து சுரும்பென்ப மலையும் வண்டும் 

சாமியே முதல்வன் செவ்வேள் தலைவி ஆசான் வெறுக்கை.

 

143 (9) 

குமுதமே யடுப் போர்திக்கின்குஞ்சர மொலி வெண்ணெய்தல் 

சிமயமே மலை வெற்புச்சி தீத் தீயே நரகு தீங்காம் 

அமறலே பொலிவு துன்னல் அரிறூறு பிணக்கம் மாசு 

சிமிலியே குடுமி சிக்கஞ் சிள்வீடு தானுமாமே.

 

144 (10) 

சம்புவே இரவி நாவல் சங்கரன் அயன் மா லோரி 

தும்பியே களிறு வண்டாந் துன்னலே செறிதல் சேர்தல் 

கம்புளே சங்கு சம்பங்கோழி யென்றிருபேர் காட்டும் 

அம்பரங் கடல் விண்தூசாம் அண்ணலே தலைவன் பீடு.

 

145 (11) 

கிம்புரி முடி தந்தப்பூண் கேட்டைதான் முகடி யோர்நாள் 

கும்பி சே றானை பூதி குலைதான் செய்கரை காய்க்கொத்தாம் 

உம்ப லாண்விலங்கு வேழம் உயர்குல மெழுச்சிக்கும் பேர் 

அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்தலர் தூற்றலாமே.

 

146 (12) 

கம்பலை அச்சம் ஓசை கம்பிதந் துன்பம் நாற்பேர் 

செம்புலம் பாலைசேருந்திணை செருக்கள மிரண்டாம் 

தம்பபே கவசந் தூணாஞ் சமழ்தலே வருத்த நாணம் 

கம்பமே நடுக்கந் தம்பங் கந்தனே அருகன் செவ்வேள்.

 

147 (13) 

அமரரே விபுதர் தெவ்வர் அவந்தி தாம் கிள யோரூராம் 

அமுது பால் தேவருண்டியாகு மின்சுவையு முப்பேர் 

அமலையே ஆரவாரம் அயினியோ டுமையுமுப்பேர் 

தம மிருள் ராகுவின்பேர் சாரங்கம் விற்பொது மால் வில்லாம்.

 

148 (14) 

ஆம்பிரம் புளிமா தேமாவாம் புளிப்பினுக்கு மப்பேர் 

சாம்பு பொன் பறையாமென்ப தாண்டவங் கூத்தே தாவல் 

பாம்பென்ப கரை மராளம் பை யராப்படமே பச்சை 

ஆம்பியே யொலி காளானாம் அயிராணி யுமை யிந்திராணி.

 

149 (15) 

காமனே வாசவன் வேள் கழுதுந் திப்பிலியு மாகும் 

காமமே விரகம் ஆசை கணிச்சிதான் மழுவே தோட்டி 

பூமனே பிரமன் செவ்வாய் புரையோரே கீழோர் மேலோர் 

சேமமே காவ லின்ப தெக்கிணம் வலந் தெற்காகும்.

 

150 (16) 

காமுகன் விடன் வேண் மாலாங் காதென்ப கொலையுங் காதும் 

கோமளம் பசுவனப்புக் கூறிய இளமைக்கும் பேர் 

நாமமாங் கலித்தல் மிக்கு நற்பொலி வெழுச்சி யோசை 

மாமையே நிறம்வனப்பாம் மலயசஞ் சந்தந் தென்றல்.

 

யகரயெதுகை

 

151 (1) 

காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயங் கறி கரித்தல் 

நேயம் நெய் எண்ணெய் யன்பாம் நிறமென்ப மருமங் காந்தி 

ஆயமே கவற்றிற்றாயம் ஆதாயம் மாதர்கூட்டம் 

சாயலென்பது மேம்பாடு தருமழகுடனே மென்மை.

 

152 (2) 

வய நீர் புட்பொது வலிப்பேர் வயல் வௌி பழனமும் பேர் 

சயம் வெற்றி சருக்கரைப் பேர் சட முடல் வஞ்சம் பொய்யாம் 

நியமமே நியதி வீதி நிச்சயம் நகரங் கோயில் 

இயமென்ப வொலியே வார்த்தை வாச்சிய மிம்முப்பேரே.

 

153 (3) 

அயமென்ப நீர் தடாகம் ஆடு வெம்பரி யிரும்பாம் 

கய மென்மை குளமே யாழங் களிறு கீழ் பெருமை தேய்வாம் 

பயமென்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேரைந்தே 

அயனமே வழியினாமம் ஆண்டினற் பாதியின்பேர்.

 

154 (4) 

பயி ரோலி பயிலே பைங்கூழ் பறக்கும் புட்குரலின்நாற்பேர் 

கயினியே அத்தநாளுங் கைம்மையும் யிருபேர் காட்டும் 

வயிரமே செற்றங் கூர்மை வச்சிரம் ஓர்மணியே சேகு 

கயில் பிடர்த்தலையே பூணின் கடைப்புணர் இருபேர்தானே.

 

155 (5) 

ஐயமே பிச்சையேற்குமோ டனுமானம் பிச்சை 

ஐயனே மூத்தோன் சாத்தன் அப்ப னீச்சுர னார்பேரே 

தொய்யலே யுழவுஞ் சேறும் துயருமும் மகிழ்சியும்பேர் 

மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரட்பேர்.

 

156 (6) 

வயவனே வீரனோடு வலியான் காதலனு மாகும் 

குயிறலே செறிதல் கூவல் குடைதல் பண்ணுத னார்பேரே 

வய னிட முதரம் வீடாம் வயாக் கரு வருத்தங் காதல் 

மயல் செத்தை மயக்கம் பேயாம் மறவரே வயவர் வேடர்.

 

157 (7) 

குயிலே கோகிலமுஞ் சொல்லும் கொண்டலுந் துளையு நாற்பேர் 

வயமாவே குதிரை சிங்கம் மதகரி புலியு மாகும் 

வியலென்ப விசாலம் பீடாம் வேய்துளை வெற்று மூங்கில் 

மயிலையே மீனராசி மீ னிருவாட்சி முப்பேர்.

 

158 (8) 

சயிந்தவங் குதிரையோடு தலையு மிந்துப்பு மாகும் 

குயந்தனம் இளமையோடு கூரரிவாளு முப்பேர் 

நயந்தோன் நண்பன் கொண்கன் நலம் விருச்சிகமே நன்மை 

பயம்பென்ப தானைவீழும்படுகுழி பள்ளமாமே.

 

159 (9) 

இயல்நடைதமிழ் சாயற்பேர் ஏல்வையே பொழுது வாவி 

குய்யென்ப கறிகரித்தல் குளிர்நறும்புகை யிரண்டாம் 

செயிரென்ப சினங் குற்றப்பேர் சேடி விஞ்சையரூர் பாங்கி 

உயவை காக்கணமே முல்லையுற்ற கான்யாறுமாமே.

 

160 (10) 

செய்யலே ஒழக்கங்காவல் சேறு செய்வினை நாற்பேரே 

நெய்தலே கடற்சார்பூமி நெய்தற்பூச் சாபறைபேர் 

வெய்யோன் ஆதவனே தீயோன் வருப்பினன் றனக்கு மப்பேர் 

ஐயையே யுமையாள் துர்கை மக ளருந்தவப் பெண் ணாசாள்.

 

161 (11) 

ஐ யழ கிடைச்சொல் கோழை யரசனோ டிருமல் சாமி 

மையென்ப தஞ்சனங் கார் மல டிருள் ஆடு மாசாம் 

கையிடம் படையுறுப் பொப்பனை செங்கை சிறுமை சீலம் 

வையந் தே ரே றுரோணி வசுந்தரை சிவிகை யூர்தி.

 

162 (12) 

சேய் குகன் இளமை தூரஞ் செம்மை றனசண் சிறுமை செவ்வாய் 

வாய் குழ லிடம் வாய்மைப்பேர் மாருதி யனுமன் வீமன் 

ஆய்தலே நுணுக்கந் தேர்தல் ஆறென்ப வழி நதிப் பேர் 

வேய்தல் சூடுதல் மூடற்பேர் விநாயகன் அருகன் முன்னோன்.

 

163 (13) 

அயிர் தேங்கட்டி யான்ற நுண்மணலே நுண்மை 

செயல் தொழி லொழுக்க மென்ப தெய்வமே கடவு ளூழாம் 

நயமென்ப மகிழ்ச்சி யின்பம் நன்மை நற்பயன் நாற்பேரே. 

பெயரென்ப பெருமை கீர்த்தி பேசு நாமப் பேராமே.

 

ரகரயெதுகை

 

164 (1) 

சிரகமே கரகமாகுஞ் சென்னியிற் சோடு மப்பேர் 

கரகமே யாலங்கட்டி கமண்டலந் துளி நீர் கங்கை 

மரபுதான் முறைமை தொன்மை மறலென்ப பிணக்குங் கூற்றும் 

சரபம் எண்காற்புள்ளென்ப வரையாடு தானுமாமே.

 

165 (2) 

இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை யரைஞாண் பொற்றேர் 

அரணமே கவசங் காடே அணிமதில் வேலி நாற்பேர் 

கரணம் எண் ம னாதிக் கூத்துக் கலவிக் காரண மைம்பேரே 

சரணந் தாள் மறைபுகற்பேர் தன்னம் ஆன்கன்றே யற்பம்.

 

166 (3) 

உரமென்ப வலியே ஞானம் ஊக்கமே மார்பு நாற்பேர் 

சரமென்ப நெடுங்காலப்பேர் சென்னியும் அன்னதேயாம் 

புரமென்ப புரி முன் மெய்ப் பேர் புரவலன் வள்ளல் வேந்தன் 

கரமென்ப கிரணங் செங்கை கழுதை நஞ் சிறுத்தலும் பேர்.

 

167 (4) 

அரவ நூபுர பாம் போசை ஆய்வென்ப வருத்தம் ஆய்தல் 

பரவை வாரிதிப் பரப்புப் பங்கயமாதின்கூத்தே 

இரலையே கலை யூதுங்கொம் பிரண்டுடன் முதனா ளென்ப 

அரசு மன் னராச்சியப் பேர் அம்பி நாவாயே தெப்பம்.

 

168 (5) 

அரம்பை தெய்வப்பெண் வாழை ஆணுவெ யிரத நன்மை 

சரந்தனி மணிவடம் போர் சாயக நாணற்புற்பேர் 

நரந்தமென்பது நாரத்தை நாறுங்கத்தூரிக்கும்பேர் 

சுருங்கையே கரந்துபண்ணும் கற்படை நுழைவியிற்பேர்.

 

169 (6) 

ஆரமே பதக்கம் முத்தம் ஆத்தி சந்தனமே மாலை 

வார நீக்கரையே யன்பு மலைச்சாரல் கிழமை பங்காம் 

தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யோரிசை கண்ணென்ப 

கோரஞ் சோழன்மா வட்டில் கொடுமை பூமொட்டு வாசி.

 

170 (7) 

இராசிய மறைவே யோனி யிறப்பென்ப மிகுதி போக்காம் 

பராகமே யிரேணுவாகும் பரிமள மலர்த்தூளும் பேர் 

துரேணமே சிம்புள் காக்கை தும்பை வில்லொடு பதக்காம் 

இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமு மேற்கும்.

 

171 (8) 

பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல்வருத்தம் 

புரி வளை விரும்பல் செய்தல் புரத்தொடு கயிறு கட்டாம் 

பரிதலே அறுத்தல் அன்பு பகர்ந்திடில் இரங்கலும்பேர் 

வரி சுணங் கெழுத்துப் பாட்டு வாரிதி இறையே நெல்லு.

 

172 (9) 

சரி கரவளை வழிப்பேர் சராவமே யகல் சலாகை 

கரியவன் சனியின்பேராங் கண்ண னிந்திரனு மாமே 

பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணைய நாற்பேர் 

கரில் குற்றங் காழ்தலும்பேர் காதை சொற் கதையுமாமே.

 

173 (10) 

மூறி யேறெருமை ஆற்றல் முறை பீடு நெறிவு மாமே 

வாரி நீர் கதவு வெள்ள மதில் கடல் வருவாய் வட்டை 

நாரி பன்னாடை பெண்ணே நறவு வின்னாணி நாற்பேர் 

பாரி யேர் வள்ளல் கட்டில் பாரி கள் தூசு முந்நீர்.

 

174 (11) 

அருகலே சுருங்கல் சார்தல் அமுதமே சுதை நீர் மோக்கம் 

பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொன் பண்பு பிள்ளை வாய்மை 

குரு நிற மோர் நோய் தேயங் குரவன் பாரம் வியாழன் 

அருணமென்பது மான் செம்மை ஆ டெலுமிச்சை நாற்பேர்.

 

175 (12) 

முருகு கள் ளிளமை நாற்றம் முருகவேள் விழா வனப்பாம் 

மருமானே மருமகன் பேர் வழித்தோன்றல் பேருமாமே 

இருசு பண்டியுளிரும்பு செவ்வை யென்றிருபேரென்ப 

கருமையே பெருமையாகுங் கருப்பொடு வலியுமாமே.

 

176 (13) 

கிருத்திமந் தோலே பண்ணல் கெட்டபொய் விட்டபூதம் 

விருத்தியே தொழில் இலாபம் விரிபொருள் வளர்ச்சிக்கும் பேர் 

துருத்தி யாற்றிடைக்குறைப்பேர் தோலுமாந் துட்டைக்கும் பேர் 

அரத்தமே யரத்தம் செம்மை அரக்கொ டுற்பலங் கடம்பு.

 

177 (14) 

சீர் செல்வந் தாளவொத்துச் சிர்த்தி காத் தண்டே பாரம் 

தார் கொடிப் படை பூத்தண்டு தாமங் கிங்கிணியின்கோவை 

சூரென்ப நோயே யச்சம் அஞ்சாமை யணங்குஞ் சொல்லும் 

கார் நீர் வெள்ளாடு மேகங் கறுப் பிருண் மாரிக்காலம்.

 

178 (15) 

ஆர் கூர்மை ஆத்தி தேரினகத்துறு கதிருமாகும் 

பீரென்ப முலையிற் பாலும் பீர்க்கொடு பசலைக்கும் பேர் 

வாரென்ப நெடுமை கச்சு மன்னு நீர் நேர்மை நாற்பேர் 

நேர் சம மீதல் பாதி நெடி லுடன்பாடு நுட்பம்.

 

179 (16) 

அருணன் சூரியன் தேர்பாகன் ஆதித்தன் புதன் முப்பேரே. 

வருணமே குல நீராகும் மகனென்ப சிறந்தோன் மைந்தன் 

தரணி பா ரிரவி வெற்பாந் தையல் பெண் ணழகுமாகு 

கரிணியே முழையும் வெற்புங் களிற்றொடு பிடியுங் காட்டும்.

 

180 (17) 

மாரியே விளிவு கள்ளு வடுகி நோய் மேக மைம்பேர் 

ஓரி யாண்மயி ரோர்வள்ளல் முது நரி முசுவென் றோதும் 

காரி யோர்வள்ள லையன் கடுச் சனி வடுகன் காக்கை 

தூரிய மிடப மாடை துந்துபி யெழுதுங்கோலே.

 

181 (18) 

பிரமமே வேதம் வேள்வி மந்திரம் பிரமன் மாலோ 

டிரவி தீ முனிவர் முத்தி ஈசன் அம்புலி பன்னொன்றே 

அரசனே வியாழன் மன்னாம் அம்பணந் தோணி யாமை 

குரல் கதிர் சிறுகு மாதர்கூந்தல் யாழ்நரம்பு நாற்பேர்.

 

182 (19) 

தோரை நெல் விகற்பம் முங்கிலரிசி கைவரை சொன் முப்பேர் 

ஆரையே மதில் புற்பாயாம் அகலுளே பரப் பூர் நாடே 

ஓரையே மாதர் கூடி விளையாடலுட னிராசி 

தாரை கண்மழை நேரோடல் தாரகை வழியே கூர்மை.

 

183 (20) 

ஊர்தி தேர் விமானம் பாண்டில் உம்பலே சிவிகை பாய்மா 

ஆர்வமமோர் நரகம் அன்பாம் அகலம் மார்பொடு விசாலம் 

ஆர்வலர் கொண்கர் அன்பர் அணுவென்பது உயிர் நுண்மைப் பேர் 

ஆர்தலே நிரைதல் உண்டல் அகளந்தான் மிடா நற்றாழி.

 

184 (21) 

பாரமே கவசந் தோணி பல்லணம் பொறை யினோடு 

நீருறுகரை வன்பார நிறை தரை நிகழ்த்தும் எண்பேர் 

சுரனே யிரவி தீ நாய் துகளென்ப குற்றம் தூளாம் 

சாரங்க மானும் வண்டுஞ் சாதகப்புள்ளு மாமே.

 

185 (22) 

ஆரல் கார்த்திகை நாள் செவ்வாய் அரணுருப் பொருமீன் நாற்பேர் 

சாரலே மருதயாழி னிசையொடு சைல பக்கம் 

மூரலே நகை பல் சோறாம் முரம்பென்ப மேடு பாறை 

கூரல் புட்சிறகு மாதர் ஓதியு மிரு பேர் கூறும்.

 

186 (23) 

சாரிகை பூவை சுங்கஞ் சுழல்காற்று தானுமாகும் 

காரிகை யழகு பெண்ணே கலித்துறை யோர்நூற்கும் பேர் 

வாரணங் கவசங் கோழி தடை சங்கு வாரி கைம்மா 

பூருவம் முதுமை முன்பு கிழக்கென்றும் புகலலாமே.

 

187 (24) 

ஏ ரழகு உழுபெற்றப்பேர் இராசிதா னோரை கூட்டம் 

பா ருலகந் தேர்ப் பாராம் பயல் பள்ளம் பாதி சிற்றாள் 

போ ரமர் சதயத்தோடு புகலு நென் முதலாஞ் சும்மை 

பீருவே யச்சமுள்ளோன் பெயரொடு புருவமாமே.

 

188 (25) 

அருப்ப மாரிட நோய் காடாம் அரணுட னூரு மப்பேர் 

மரக்கால் ஆயிலியஞ் சோதி மாயவனாடல் முப்பேர் 

நிரப்பென்ப மிடிநிரைப்பேர் நிறையழியாமை நீர்ச்சால் 

துருக்கமே யரண் கத்தூரி குங்கும மரமுஞ் சொல்லும்.

 

189 (26) 

குருதியே சிவப்பி ரத்தங் குசனெனக் கூறு முப்பேர் 

பரிதியே யூர் கோள் வட்டம் பாற்கரண் நேமி நாற்பேர் 

சுருதியே யொலி வேதப்பேர் சுரம் அருநெறி கான் மார்க்கம் 

இரதி பித்தளை பெண்யானை மதன்தேவி யிச்சை நாற்பேர்

 

190 (27) 

புரை குற்றம் உவமை யில்லம் புழை யுயர்சியு மைம்பேரே 

விரை மணஞ் சாந்து தூபம் வீரைதான் துயரம் வாரி 

நரை வெள்ளையிவுளி வெண்மை நந்தி நற்சவரி நாரை 

சுரை கள் ஆன்முலை துளைப்பேர் துளும்பலே திமிறல் துள்ளல்.

 

191 (28) 

மருளென்ப குறிஞ்சி யாழின்றிறத்தொடு மயக்க மும்பேர் 

இருளொரு நரகம் மையல் இருளொடு கருமை யென்ப 

பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் பாணர் வீரர் 

இருபிறப் பெயிறும் பார்ப்பும் இந்துவும் புள்ளுமாமே.

 

192 (29) 

மருதமே யொருமரஞ்செய் மருத மந்நிலப் பாடற்பேர் 

எருவையே கொறுக்கை கோரை கழுகு செம் பிரத்தமென்ப 

தருமராசன்றான் புத்தன் சண்டனே டருகன் றானாம் 

கரியென்ப திருந்தை சான்று கறையடி சேகு நாற்பேர்.

 

193 (30) 

கருவி பல்லியந் துணைக்காரணங்கள் யாழ் கவச மீட்டம் 

பொருபடைக்கலஞ் தொடர்ச்சி புயல் பலவினைப்பேர் கூட்டம் 

பரியின் பல்லணமே யாடை கசை பதின்முப்பேர் பன்னும் 

சுரிகையே கவசம் வாளாந் துவை பிண்ணாக் கிறைச்சி யோசை.

 

194 (31) 

குருகு புள் ளிளமை நாரை கொல்லுலைமூக்குங் கோழி 

சரி வெள்ளை மூலநாள் வாசந்தி யொன்பான் பேர்சாற்றும் 

முரசே யுட்டரத்தாதி பேரியமென்று மொழிய லாமே 

தரளமே உருட்சி முத்தாஞ் சார்வென்ப திடமும் பற்றும்.

 

195 ( 32) 

முரண் வலி பகை யாமென்ப மொய்ம்பு தோள் வலியுமாகும் 

உரை யென்ப கிளவி தேய்வாம் உவாத் தந்தி யிளையோன் பௌவம் 

ஞெரே லொலி விரைவுமாகும் நிதி யிருநிதி பொன்னென்ப 

உரு நிறம் வரிவட்டைப்பேர் ஓதனஞ் சோறே யுண்டி.

 

196 (33) 

அரி கிளி புணரி மால் தேர் ஐம்மை யிந்திரன் கால் காந்தி 

பரி புகர் பன்றி சிங்கம் பகை புகை பாயல் சோலை 

வரி மதி சேகு தேரை வானரம் இயமன் மூங்கில் 

எரி புரை நிறம் பொன் பாந்தள் இரவி கண்வரி தார் பச்சை.

 

197(34) 

அரிசி நெற்கதிர் கள் கூர்மை அளி படைக்கலமே யீர்வாள் 

அரிதலே சயன நேமி அடல் விசி பறை யரித்தல் 

பரிபுரமதனுட்பெய்த பரலோ டிவ்வா றேழைந்தாம் 

அரிதமேபசுமை திக்காம் ஆற்பொறி சிரித்தற் பேரே

 

198 (35) 

அருவியே மலைசார் வாறும் அரிதினைத்தாளு மாகும் 

அரலையே கனி வித் தாழி மரல் கழலையுமாமென்ப 

கரடமே மதம் பாய்கின்ற சுவட்டொடு காகமு மாகும் 

சுரியல்தான் பெண்மயிர்க்கே சொல்லும் மாண்மயிர்க்கும் பேராம்.

 

199 (36) 

திருவென்ப கமலை செல்வஞ் சிறப்பொடு முப்பேர் செப்பும் 

பரிவென்பதுன்ப மின்பம் பகரும் அன்பிற்கும் பேர் 

கரையே நீர்க்கரை சேர்வாகுங் கைத்து நீள்நிதி வெறுப்பாம் 

சுரகுரு மகவான் றேவமந்திரி யிருபேர் சொல்லும்.

 

200 (37) 

அரற்றலே அழுகை யோசை யைதென்ப விரைவு நொய்தாம் 

இரத்தஞ் சென்னீர் சிவப்பாம் இலாங்கலி யலந்தென் காந்தள் 

அரக்கென்ப மெழுகு கள்ளின் விகற்பமுஞ் சிவப்புமாகும் 

அருச்சுன மருது வெண்மை யறிக்கைதா னறிவு பற்றாம்.

 

201 (38) 

அரந்தை யென்பது குறிஞ்சியாழிசை துன்பமாகும் 

அருந்தலே யருமை யுண்டல் அளித்தல்தான் கொடுத்தல் காத்தல் 

அரங்க மாற்றிடைக்குறைப்பேர் ஆடிடஞ் சபையுமுப்பேர் 

அரங்கு பேரிடம் வட்டாடும் இடஞ் சபை மனைவி கற்பாம்.

 

202 (39) 

முருந்தென்ப மயிலின்றோகைமுதன்முள்ளுத் தவளமாகும் 

விருந்தமே கிளையின் கூட்டம் விலங்கின்கூட்டமு மென்றாகும் 

குரங்கு வானரம் விலங்கின்பொது மிகுகோணலாகும் 

எருந் துரல் கிளிஞ்சிெ லன்பர்இடஞ் செல்வம் விசாலம் வாமம்.

 

203 (40) 

ஆரியர் மிலோச்சர் நல்லோர் ஆனென்ப யடைச்சொலாவாம் 

ஆரியே கதவு சோழன் அழொடு மேன்மைக்கும் பேர் 

காருகர் தந்து வாயர் கடுங்கொலையாளர் வண்ணார் 

தாரகாரியென்ப காளி சண்முகந் தானுமாமே

 

204 (41) 

சார் கூட லொரு தாருப்பேர் சான்றோன் மான்றலைநாள் பானு 

வேரென்ப மரவேர் வேர்வாம் விழைச்சு நல்லிளமை போகம் 

பாரா வாரந்தான் வாரி கடற்கரை யிருபேர் பன்னும் 

சாரண ரொற்றரென்ப சமண்முனிவர்க்கும் பேராம்.

 

205 (42) 

அராகஞ் சென்னிறமே பாலையாழ் முடுகியற்பாட் டாசை 

கரேணுவே பிடி யானைக்குங் கடுங்கொலை யானைக்கும் பேர் 

கிராணமே கிராண மூக்காங் கிளர்சிறு வட்டிலும்பேர் 

கரீரமே மிடா வகத்தி கரியின்பல்லடி முளைப்பேர்.

 

லகரவெதுகை

 

206 (1) 

புலவர் பாடுநரே கூத்தர் புத னும்பர் கவிகள் ஓவர் 

வலவனே வெற்றியாளன் மருவுந் தேர்ப்பாகன் மாயோன் 

அலகு நெற்கதிரே யாதி பலகரை நுளம்பு எண் ஏதி 

அலரி கண்வரி யருக்கன் அழ கொருமரம் பூவாமே.

 

207 (2) 

ஆலமே வடவிருக்க மடுநஞ்சோ டலர்பூ நீராம் 

மூலம் வேர் முதலே யேது முதிர்வுறுகிழங் கோர்நாளாம் 

சீலமே குணந் தண்டித்தல் திகழ்சரித்திர முப்பேரே 

சாலமே வலை சாலே கமராமரஞ் சபை மதிற் பேர்.

 

208 (3) 

காலம் வைகறை காலப்பேர் கல மலம் யாழ் பூ ணாவாய் 

சாலகங் காலதர்ப்பேர் தானே பூமொட்டாகும் 

தால முண்கலமே நாவே தராதரமே பனையே நாற்பேர் 

ஆல லாடுதலொலிப்பேர் அறுவை சித்திரைநா ளாடை.

 

209 (4) 

இலம்பக மத்தியாய நுதற்சுட்டென் றிருபேராமே 

இலஞ்சி மா வாவி கொப்பூழ் எயில் குண மகிழே யேரி 

பலங் கனி பயன் காய் சேனை பலங் கிழங் கறுபேராகும் 

அலங்க லென்பது பூமாலை அசைவொடு தளி ரிலங்கல்.

 

210 (5) 

ஒலி யென்ப திடியே காற்றே யோசை யென்றாகு முப்பேர் 

ஒலியலே யாறுந் தோலும் உடுத்தவாடையும் பைந்தாரும் 

கலுழியே கான்யாறென்ப கலங்கிய நீருமாமே 

கலை மதிப்பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி.

 

211 (6) 

பீலயே யாலவட்டம் பெருவரை கலாபி தோகை 

பாலிகை யுதடு வட்டம் படைவாளின்முட்டியும்பேர் 

வேலி யூர் மதில் காவற்பேர் மெத்தை மெல்லணையே சட்டை 

தோ லிபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை யைம்பேர்.

 

212 (7) 

பாலை யொர் மர நிலம் மந்நிலத்தினிலோர பாடலும்பேர் 

வேலையே கடலதற்குமேவிய கரையே காலம் 

மாலையே யிரவோடந்தி மாலிகை யொழுங்கு நாற்பேர் 

சாலையே குதிரைப்பந்தி யறப்புறந் தானுமாமே.

 

213 (8) 

அல்லி வெள்ளாம்பல் காயா யகவித ழாகமுப்பேர் 

அல் லிரா யிருளே யென்ப ஆக மார்பு டலுமாமே 

சில்லியே வட்டங் கீரை தேருருள் சிள்வீடென்ப 

வல்லி யாய்ப்பாடி வல்லி வரைவொடு நிகளமாமே.

 

214 (9) 

இல் லிள்ளாள் இல்லையென்றல் இராசி சா விடம் வீ டாறே 

மல் வளம் வலியினோடு மாயவனாடல் முப்பேர் 

சில்லை யென்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தைக்கும் பேர் 

ஒல்லையே விரைவு தொல்லை கடுப்புடன் சிறுபோதாமே.

 

215 (10) 

வில்லென்ப மூலநாளாம் வெஞ்சிலை யொளியு மப்பேர் 

வல் வலி விரைவு சூதா மலர்தலே யெதிர்தல் தோன்றல் 

புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை யனுஷநாளாம் 

கொல்லென்ப தசைச்சொல் ஐயங் கொலையேவல் வருத்த நாற்பேர்.

 

216(11) 

மால் புதன் பெருமை மேக மாயவன் மயக்கங் காற்றே 

ஆலோ ட லிரண்டு சொல்லும் ஆமென்ப தல்லவும்பேர் 

வால் வெண்மை மிகுதி தூய்மை வசந்தனே தென்றல் காமன் 

சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே.

 

217(12) 

வலம்புரி சங்கு நந்தியாவர்த்தம் ஓர்மர முப்பேரே 

புலம் பொலி தனிமை யச்சம் பொய்யென்ப பொக்கம் பொந்தாம் 

சலம் பொலி ஞெகிழி குன்றாஞ் செருந்தி பஞ்சரம் வாட்கோரை 

விலங்கு காற்றளை குறுக்கு மிருகத்தின் பொதுவு மாமே.

 

218 (13) 

உலகமே திசை வெண் பூமி உயரிகுணஞ் சன முயர்ந்தோர் 

அலவனே ஞெண்டு பூஞை அம்புலி கடகராசி 

இலயமே கூத்துங் கூத்தின்விகற்பமு மிருபேரென்ப 

வலவை வஞ்சப்பெண் வல்லோன் வருடைதான் சிம்பு ளாடாம்.

 

219 (14) 

கலாபமே மணிவடம் மேகலை மயிலிறகு முப்பேர் 

சிலீமுகம் முலைக்கண் வண்டு சித்திரபுங்கந் தானாம் 

சலாகை நன்மணி நாராசஞ் சவளமு மாகுமென்ப 

விலோதம் பெண்மயிர் பதாகை விட மென்ப நஞ்சுந் தேளும்.

 

220 (15) 

செல் லிடி யேவல் மேகஞ் சிதலை யாகுமென்ப 

எல் லொளி பக லிகழ்ச்சி இரவுட னிரவி யைம்பேர் 

சொல் லுரை கீர்த்தி நெல்லாந் தொடுத்தலே வளைத்தல் கட்டல் 

கல் லொலி மலை கல்லென்ப கரண்ட நீர்காக்கை செப்பாம்.

 

221 (16) 

கலி வஞ்ச மொலியே வாரி கடையுகம் வல யைம்பேரே 

சிலை யொலி மலை கல் வில்லாஞ் செடியொளி செறிவு தீதாம் 

தலமென்ப திலை புவிப்பேர் தலை யிடந் தலை விண் ணாதி 

திலமே மஞ்சாடி யெள்ளாந் தலக மஞ்சாடி பொட்டாம்.

 

222 (17) 

வல்லை கான் விரைவு மைந் தாம் வட மணிவட மா றாம்பு 

பல்ல மோர் கணக்கு பாணம் பல்லங் கரடி நாற்பேர் 

மல்லலே வலி வளப் பேர் வாயி லைம்புலன் கடைப் பேர் 

முல்லை மல்லிகையே வென்றி முல்லைநன்னிலங் கற்பாமே.

 

223 (18) 

கோலென்ப தீட்டி வாட்கோல் துகிலிகை துலாஞ் சம்மட்டி 

சீலமன்னவன்றன்செங்கோல் திரட்சி யாழ்நரம்போ டம்பு 

நீலவஞ்சனக்கோலோடு நீளிலந்தையும் பன்னோர்பேர் 

காலிலி அருணன் பாம்பு காற்றொடு முப்பேராமே.

 

224 (19) 

கூலமே பண்ணிகாரம் புனற்கரை கோ விலங்கின் 

வாலோ டாவணமே பாகல் வரம்பொடு குரங் கெண்பேரே 

கா லிட மரக்கால் பிள்ளை குறுந்தறி வனங் காம் பூற்றம் 

காலங் குரங் கால் வாய்க்கால் காற்றுத் தேருருள் பன்மூன்றே.

 

225 (20) 

கோலமே யழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து பீர்க்காம் 

மாலியே யிரவி கள்ளாம் மாந்தலே மரித் துண்டல் 

வே லயில் படைக்கலப்பேர் வேதண்டங் கைலை வெற்பாம் 

சாலி நெற்பொதுவுங் கள்ளு மருந்ததி தானுமாமே.

 

226 (21) 

உலவை கான் மரத்தின்கொம்பொடுறு தழை விலங்கின்கோடாம் 

மலைதலே பொரல் சூடற்பேர் மந்திரி குபேரன் வெள்ளி 

அலர் பழி விரிபூ நீராம் அவிர்தலே யொளி பீறற்பேர் 

எலி பூரநா ளெலிப் பேர் இரணம் பொன் கடன் மாணிக்கம்.

 

227 (22) 

ஆலயங் நகரங் கோயில் யானையின்கூட முப்பேர் 

பாலமே மழு நெற்றிப்பேர் பவித்தரஞ் சுசி தருப்பை 

நூலோர் மந்திரிகள் பார்ப்பார் நுவல்கவிப்புலவர்க்கும் பேர் 

வேலாவலயந்தான் பூமி விரிகட லிருபேராமே.

 

228 ( 23) 

சூலியே கருப்பப் பெண்ணுந் துர்க்கைஞ் சிவனு முப்பேர் 

வாலியே அலாயுதன் கிட்கிந்தையின் மன்னன் பேராம் 

பால் புடை யியல்பு திக்குப் பகுத்தல் பாலென்னு மைம்பேர் 

ஏலமே மயிர்சாந்தோ டேலத்தின் பேருமாமே.

 

வகரவெதுகை

 

229 (1) 

நவமென்ப புதுமை கேண்மை யொன்பது நற்கார்காலம் 

கவனமே கலக்கம் வெம்மை குதிரையின்கதி போர் காடாம் 

உவணமே கலுழனாகும் உயர்ச்சிக்கும் கழுகுக்கும்பேர் 

பவணமே யிராசி பூமி படர்காற்று மனையே கோயில்.

 

230 (2) 

புவன நீர் புவிய மாகும் புரத்தலே காத்தல் வன்மை 

நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமுந் தந்தும் 

தவவென்வ மிகுதி குன்றல் தந்தே நூல் சாத்திரப்பேர் 

சிவ நன்மை குறுணி முத்தே சீவனே யுயிர் வியாழன்.

 

231 (3) 

இவறலே மறவி யாசையென்ப பேரிச்சைக்கும் பேர் 

இவர்தலே யெழுச்சி யாசை யேறுதல் சேரல் மேவல் 

சுவவென்ப புள்ளின்மூக்குஞ் சுவர்க்கமுஞ் சுண்டனும் பேர் 

குவவென்ப திரட்சி மற்றும் குவிதலே பெருமைக்கும் பேர்.

 

232 (4) 

தவிசென்ப தடுக்கு மெத்தை யிலகட முப்பேர் தானே 

சவி மணிக்கோவை செவ்வை சாற்றிய வனப்பு காந்தி 

நவிரமே மஞ்ஞை புன்மை நன்மலையுடனே யுச்சி 

நவிலல் சொல்லுதல் பண்ணற்பேர் நவியமே மழு கோடாலி.

 

233 (5) 

கவுசிகம் விளக்குத்தண் டோர்பண் பட்டுக் கடியகோட்டான் 

சவுரியே திருமால் கள்வன் சனி யம னினைய நாற்பேர் 

மவுலியே முடி கோடீரம் வட்கலென்பது நாண் கேடாம் 

கவலை செந்தினையோர்வல்லி கவர்வழி துன்ப நாற்பேர்.

 

234 (6) 

சேவகம் வீரம் யானைதுயிலிடந் துயிலுஞ் செப்பும் 

சீவணியோர் மருந்து செவ்வழித்திறத்தோரோசை 

ஆவணம் புணர்தம் வீதி அங்காடி உரிமை நாற்பேர். 

நீவியே துடைத்த லாடை நெருங்கு கொய்சக முப்பேரே.

 

235 (7) 

உவளக மதி லோர்பக்கம் ஊருணி பள்ளம் உள்ளில் 

கவடென்ப கப்பி யானைக்கழுத்திடுபுரசைக்கும் பேர் 

சிவை யுமை மரவேர் கொல்லனுலைமுகந் திரியும்ஓரி 

கவையே ஆயிலியங் காடு கவர்வழி எள்ளிலங்காய்.

 

236 (8) 

சிவப்பென்ப சினமும் செம்மையுடன் சினக்குறிப்பு முப்பேர் 

உவப்பென்ப மகிழ்சி மேடாம் ஒழுக்கமே வழி யாசாரம் 

தெவிட்டலே அடைத்தல் கான்றல் நிறைதலு மொலியுஞ் செப்பும் 

துவக்கே தோல் பிணக்கிரண்டாஞ் சூழலே யிடம் விசாரம்.

 

237 (9) 

சேவலே காவலோடு சேறு புள்ளாண் முப்பேரே 

கேவலந் தனிமை முத்தி கீரமென்பது பால் கிள்ளை 

பூவை சாரிகை காயாவாம் புலி சிங்கம் உழுவை சாந்தே 

வாவலுஞ் சலிகைப்புள்ளுந் தாவலும் வகுக்கலாமே.

 

238 (10) 

சுவல் பிடர் தோண்மேன் மேடு துரகதக் குசை நாற்பேரே 

கவி மந்தி புலவன் சுங்கன் கழி யென்ப மிகுதி காயல் 

நவிர் உளை மருதயாழ் வாள் நாஞ்சில் எந்திரங் கலப்பை 

கவிகையே குடை கொடைப்பேர் கடிப்பங் காதணி பூண் செப்பாம்.

 

239 (11) 

மா வண்டு பெருமை பிண்டி வாசி கூப்பிடல் வெறுத்தல் 

காவுறுவிலங்கு செல்வங் கருநிறங் கமலை பத்தாம் 

கோ விழி பசு நீர் திக்குக் குலிசம் விண் கிரணம் பூமி 

ஏ வுரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற் பீரேழாமே.

 

240 (12) 

ஆவியே வாவி நாற்றம் ஆருயிர் புகை மூச்சைம்பேர் 

கூவிரந் தேர் தேர்மொட்டாந் குவடு நீண்மலை வெற்புச்சி 

காவியே குவளை காவிக்கல்லொடு கள்ளு முப்பேர் 

நாவிதன் மஞ்சிகன் கார்த்திகை பூரநாளுமாமே.

 

241 (13) 

ஆவென்ப திரக்கம் பெற்றம் ஆச்சாவோ டிசை வியப்பாம் 

காவென்ப துலாம் பூஞ்சோலை காத்தல் தோட்சுமை நாற்பேரே 

பாவென்ப பனுவல் நூற்பா பரவுதல் பரப்பு மாகும் 

தாவென்ப பகை வருத்தந் தாண்டுதல் வலி கே டைம்பேர்.

 

242 (14) 

கவ்வையே பழிச்சொல் துன்பங்கள் ளொல்ி யெள்ளிலங்காய் 

பவ்வமே குமிழி வாரி பருமரக்கணு உவாவாம் 

தவ்வை முன்பிறந்தாளொடு தாயு மூதேவியும் பேர் 

நவ்வியே தோணி மானா நன் றென்ப பெருமை நன்மை.

 

243 (15) 

அவலே சிற்றுண்டி பள்ளம் நீர்நிலை யாகு முப்பேர் 

செவிலியே வளர்த்தகைத்தாய் முன்பிறந்தவளுஞ் செப்பும் 

கவுட மோர்கொடி யோர்தேச மிருபெயர் கழறலாமே 

சுவடு வச்சிராங்கி யோரெண் சுபமென்ப தழகு வெண்மை.

 

244 (16) 

பவமென்ப சனனம் பாவம் பாவந்தான் வினை தியானம் 

சவுரியங் களவு வீரந் தண்மை தான் குளிச்சி தாழ்வு 

யவமொரு தானியப் பேரென்ப நெல்லிற்கு மப்பேர் 

யவனர் சோனகர் கண்ணாளர் சித்திர காரர் ரென்ப.

 

245 (17) 

ஆவரணந்தான் சட்டை தடை மறைப் பாரணம் ஆடை 

ஏவலே வியங்கோளென்ப எய்திய வருமைக்கும் பேர் 

ஓவியர் சிற்பநூலோரொடு சித்திரக்காரரும் பேர் 

ஓ விரக்கச்சொல் நீக்கமோடு நீர்தகை கபாடம்.

 

246 (18) 

அவ்வையே தாயின் பேருமௌவையோ டிருபேராமே 

செவ்வி யேர் பொழுதினோடு செப்பிய பருவ மாகும் 

தெவ் வமர் பகை யிரண்டாந் தீவினை கொடுமை பாவம் 

சைவமோர் புராண மீசன் சமயத்தின் விகற்பமாமே.

 

ழகரயெதுகை

 

247 (1) 

விழவென்ப மிதுன ராசி விளங்கு முற்சவமு மாகும் 

கழையென்ப புனர்தம் மூங்கில் கரும்பென விரும்பு முப்பேர் 

கழல் கழங்கொடு செருப்புக் காலணி காலந் நாற்பேர் 

கிழமை மூப் புரிமை பண்பாங் கிழி நிதிப்பொதி கீறாமே.

 

248 (2) 

சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும் 

பாழியே வலி விலங்கின் படுக்கை யூர் பற்றிலாரூர் 

நாழியே யளக்கு நாழி நாழிகை பூரட்டாதி 

ஆழி மோதிரமே நேமி அலை கடல் கரையே வட்டம்.

 

249 (3) 

இழு மெனலோசையென்ப இனிமை யுமியம்பு மப்பேர் 

விழுமமே சிறப்பு சீர்மை யிடும்பையும் விதித்த பேரே 

தொழுவென்ப துழலை தானே யிரேவதி நாளுஞ் சொல்லும் 

செழுமையே வளங் கொழுப்பாந் தேனென்ப நறவும் வண்டும்.

 

250 (4) 

கழுது பேய் பரண் வண்டென்ப கயவு கீழ் பெருமை மென்மை 

அழுவமே பரப்பும் நாடும் அழுங்கலே யிரங்கல் கேடாம் 

கழுமல் பற்றொடு மயக்கங் காதலே ஆசை கோறல் 

கழிலென்பதுவே சாதல் கடந்திடல் மிகுதி முப்பேர்.

 

251 (5) 

மாழை பொன்னு லோகக் கட்டி மடமை யோர் புளிமா வோலை 

கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம்படையுறுப்பாம் 

தாழை கேதகை தெங்காகுஞ் சாகினி சேம்பு கீரை 

ஊழ் முறை வெயில் பகைப்போ ஊசியே சூசி யாணி.

 

252 (6) 

உழையென்ப திடமான் யாழி னோர் நரம்பிற்கும் பேராம் 

குழை யென்ப தளிர் துவாரங் குண்டலஞ் சேறு நாற்பேர் 

விழைவென்ப புணர்ச்சி காதல் வெறுக்கை யென்பது பொன் செல்வம் 

வழி மர பிடம் பின் மார்க்கம் வழங்கலே கொடை யுலாவல்

 

253 (7) 

ஈழம் பொன் கள் ளோர்தேசம் எல்லையே அளவை வெய்யோன் 

மேழகங் கவசம்ஆடாம் வேளாண்மை கொடையே மெய்மை 

காழியர் வண்ணா ருப்புவாணிகர் இருபேர் காட்டும் 

வேழமே கரும்பி யானை கொறுக்கைச் சிவேணு நாற்பேர்.

 

254 (8) 

கூழென்ப துணவும்பொன்னும் பயிரென்று கூறுமுப்பேர் 

காழென்ப மணியின் கோவை கற்பரல் சேகு வித்தாம் 

யாழென்ப மிதுனம் வீணை யிரலைநா ளாதிரைப் பேர் 

கீழென்ப திடங் கீழ்சாதி கீழ் திசை கயமை நாற்பேர்.

 

255 (9) 

கோழியே குரு கோரூராங் குய்யமே மறைவு யோனி 

மூழியே வாவி சேறோ டகப்பையு மொழியு முப்பேர் 

மூழையே யகப்பை சோறா முறஞ் சுளகொடு விசாகம் 

நூழிலே கோறல் யானை நுண்கொடிக்கொத்தான் பேர்.

 

256 (10) 

தொழுதி புள்ளொலி கூட்டப்பேர் தொறு நிறை யடிமைக்கூட்டம் 

கெழுவுதல் மயக்கம் பற்றாங் கீலாலங் கறை நீர் காடி 

குழ றுளையுடைப்பொருட் பேர் மயி ரிசைக்குழன் முப்பேரே 

அழிவென்ப வீதல் கேடாம் அவி நெய் சோ றமரருண்டி.

 

ளகரயெதுகை

 

257 (1) 

குளம் நுதல் கரும்பின் கட்டி குட்டமுமிட்ட நாமம் 

களம மர்க்களமே கண்டங் களா விடங் கறுப்பே யில்லாள் 

வளமை மாட்சிமை கொழுப்பாம் வாருணங் கடலு மேற்கும் 

விளவென்ப கமர் விளாவாம் விம்ம லேங்குத லொலித்தல்.

 

258 (2) 

முளரியே விறகு செந்தீ முண்டகஞ் சிறுமை காடாம் 

விளரெண்ப திளமைதானே வெளுப்பொடு கொழுப்புமாகும் 

களபமே யானைக்கன்று கமழ்சாந்து கலவை முப்பேர் 

உளர்தலே சிதறலாகுந் தடவலு முரைக்கற் பாற்றே.

 

259 (3) 

குளிர் மழு நண் டிருத்தல் குளிர் கவண் முழா மீன்றாரை 

நளிர் குளிர் பெருமை ஞெண்டு நாட்டிய செறிவு நாற்பேர் 

ஒளி வட்டந்தான் கண்ணாடி சக்கர மிருபே ரோதும் 

இளி யிசை யிசித்த லெல்லே யிணங்குத லுரித்தற்கும் பேர்.

 

260 (4) 

பளிதமென்பது கர்ப்பூரம் பல்லமென்கணக்கு மாகும் 

வௌி லணில் வேழத்தம்பம் வெண்டயிர்கடைதறிப் பேர் 

களிறென்பது ளத்தநாளே கறையடி சுறவு பன்றி 

ஒளி யிருசுடரே தீயே யொளிப்பிடம் புகழுமாமே.

 

261 (5) 

பாளிதஞ் சோறு கண்டசருக்கரை குழம்பு பட்டாம் 

ஒளியே யானைக்கூட மொழுங்கென்றும் வழங்கும் நூலே 

கோளி தொன்மரமே யத்தி கொள்வோனுங் கொழிஞ்சியும் பேர் 

மீளி திண்ணியன் வலிப் பேர் மேன்மகன் பெருமைக்கும் பேர்.

 

262 (6) 

அளை தயிர் முழை புற்றாகும் அசனியே யுருமு வச்சிரம் 

உளை பரிமீதுகட்டுமயிர் பிறமயிறும் ஓதும் 

கிளை யென்ப தோர்பண் முங்கில் கேளொடு கிளைத்தலும் பேர் 

இளை புய லிளமை வேலி தலைக்காவ லிவை நாற்பேரே.

 

263 (7) 

உள்ளலே நினை வுள்ளான் பேர் உழப்பென்ப வலி யுற்சாகம் 

ஞெல்லலே பள்ளம் மேன்மை நீண்ட வீதியு முப்பேரே 

எள்ளலே நகை யிழிப்பாம் யாமந் தெற் கிரவு சாமம் 

ஞொள்கல் சோம் பிளைத்த லச்சக்குறிப்பென்று நுவலற்பாலாம்.

 

264 (8) 

வள்ளென்ப காது கூர்மை வலி வளம் வாளே வாராம் 

வெள்ளையே முசலி சங்கு வௌிறு வெள்ளாடு வெண்பா 

கள்வனே முசு ஞெண்டி யானை கருநிறத்தவனே சோரன் 

பள்ளி யூர் சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோரூர்.

 

265 (9) 

விளக் கொளி சோதிநாளாம் வேள்வியே மகநாள் ஈதல் 

அளக்கரே புடவி சே றுப்பளங் கடல் கார்த்திகைப் பேர் 

திளைத்தலே யனுபவித்தல் செறிதலே நிறை தன் முப்பேர் 

இளைத்தலே யிளைப் பிரங்க லென்றூழே யிரவி வெய்யில்.

 

266 (10) 

பிள்ளையே வடுகன் காக்கை பெட்டல் தான் விரும்பல் வேண்டல் 

மள்ளரே மள்ளர் வீரர் மறவர்க்குங் குறவர்க்கும் பேர் 

உள்ளமே முயற்சி நெஞ்சா முஞற் றிழுக்கொடு தாளாண்மை 

வள்ளியே வல்லி செங்கைவளை புனையிழை முப்பேரே.

 

267 (11) 

காளமே யூதுகொம்பு கழு நஞ்சு கருமை நாற்பேர் 

வே ளறுமுகன் காமன் பேர் விபூதி யூன் கொடுமை செல்வம் 

கோ ளிடையூ றொன்பான் கொலை குணம் வலி பொய் கொள்கை 

ஞாளியே சுணங்கன் கள்ளாம் நான்மு கனருகன் வேதா.

 

268 (12) 

களரென்ப மிடறு கோட்டி களர் நிலங் கருமை நாற்பேர் 

தளமிலை படையே சாந்து தாழி பூவிதழே மேடை 

அளகமே மாதரோதி யறன் மயிற்குழற்சி முப்பேர் 

தளை விலங்கொடு தொடர்ச்சி தாட்சிலம் பாண்மயிர்ப் பேர்.

 

269 (13) 

புள்ளு வண் டவிட்டம் புட்பேர் புளகந் தர்ப்பணம் குமிழ்ப்பாம் 

கள்ளென்ப களவு கள்ளாங் கனலி தீ யிரவி பன்றி 

அள் ளுரஞ் செறிவு காதோ டயிலும் பற்றிரும்பு மாகும் 

வெள்ள மெண் மிகுதி முந்நீர் வேணுவே மூங்கில் வில் வாள்.

 

270 (14) 

வாளென்ப தொளி கட்கப் பேர் வல்லரி தளிர் பைங்காயம் 

கூளி பேய் தம ரேறு மாசு குறள் படைத்தலைவன் கூட்டம் 

தோளென்ப புயங் கை யாகுஞ் சுந்தரி யுமையே சுண்டன் 

தேளென்ப தனுடநாளே விருச்சிகந் தெறுக்காலும் பேர்.

 

271 (15) 

அளியென்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையு நாற்பேர் 

அளவையே எல்லை நாளாம் ஆசாரந் துகில் தூ மாரி 

விளரியே யிளமை யாழிலோர்நரம்பி யாழ் நீள்வேட்கை 

வளமென்ப பதவியும் பல்பண்டமும் வனப்பு மாகும்.

 

272 (16) 

வள்ளமே மரக்கால் வட்டில் கடிகைவட்டிற்கு மப்பேர் 

வள்ளுரம் பசுவிரைச்சி வரைந்த வூன்பொதுவு மாகும் 

அள்ளலே நரகஞ் சேறா மம்பு நீர் புயல் வே யேவாம் 

வெள்ளிலே விளாப் பாடைப் பேர் வேலன் வேள் வெறியாட்டாளன்.

 

273 (17) 

காளையே எருது பாலைக்கதிபன் இளமையோன் பேர் 

கூளியர் நண்பர் பூதகணவீரர் கொலைத்திறத்தோர் 

கோளகை வட்டமோடு மண்டலிப்பாம்புங் கூறும் 

கேள்வியே செவி கல்விப்பேர் கிடங் ககழ் வாவியாமே.

 

274 (18) 

இளமையே தண்மை காம மிளமையின்பருவ முப்பேர் 

அளறென்ப நரகஞ் சேறாம் அக்காரம் புடைவை வெல்லம் 

கிளரென்ப கிரணத்தோடு கிளர்கோட்டுமலர்பூந்தாதாம் 

களரி போர்க்களங் காடென்ப கருமஞ்செய்யிடமு மாமே.

 

றகரயெதுகை

 

275 (1) 

இறைவையே புட்டி லேணியென்ப கூர் மிகுதி கூர்மை 

குறடென்ப பலகை திண்ணை கொண்மூவென்பது விண் மேகம் 

புறவ மோர்புள்ளுங் காடும் முல்லை நன்னிலனும் போற்றும் 

புறணியெ குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமுந் தோலும்.

 

276 (2) 

மறஞ் சினம் பிணக்குக் கூற்றாம் மலைந்த சேவகமு மாகும் 

குறிஞ்சி யோரிசை யோர்பண்ணே குறிஞ்சி செம்முள்ளிக்கும் பேர் 

பிறங்கலே மிகுதி வெற்பு நிறை வொலி பெருமை யைம்பேர் 

குறம்பொறை குன்று காடு குறிஞ்சிநன்னிலத்தூர் முப்பெர்.

 

277 (3) 

தாறு விற்குதையே யெல்லை தாழ் மரக்குலை முட்கோலாம் 

சேறென்ப கும்பி சாரந் தித்திப்பு விழவு கள்ளே 

ஊறென்ப தீமை தீண்டல் உயிர்கொலை யிடையூரென்ப 

ஏறிடி முதல்நாளாகு மிடபமொடெருதுமப்பேர்.

 

278 (4) 

சிறையே வேறிடமாம் புள்ளின்சிறகொடு காவலும் பேர் 

கறை யிறுத்திட லிரத்தங் கறுப் புரல் விடம் பேரைந்தே 

முறையென்ப கோசமே யூழ் முறைமையு முப்பேரென்ப 

பிறழ்தலே நடுக்கம் வேறுபெயர்தலோ டொளி விடற்பேர்.

 

279 (5) 

ஏற்றலே கோடலென்ப வெதிர்ந்து போர் செய்தலும் பேர் 

ஆற்றலே பொறை முயற்சி அதிகமே வலியே ஞானம் 

தோற்றலே வலி பிறப்புத் தோன்றுதல் புகழே நாற்பேர் 

போற்றலே புகழ்த லோம்பல் புறமென்ப முதுகு வீரம்.

 

280 (6) 

அற்றமே மறைவுஞ் சோர்வும் அவகாசந் தானுமாகும் 

குற்றல் குற்றுதல் பறித்தல் குரை யென்பதிடைச் சொலோசை 

எற்றென்ப திரக்க மொத்தல் எறித லெத்தன்மைத்தென்றல் 

கொற்றியே துர்க்கைநாமங் கோவிளங்கன்றுங் கூறும்

 

281 (7) 

உறழ்வென்ப புணர்வு காலஞ் செறி விடை யீ டொப் பைம்பேர் 

உறவியே யெறும்பு நீரூற் றுலைக்கள முற வுயிர்ப் பேர் 

உறுக ணென்பதுவே துன்ப முறுபய மிடி நோய் நாற்பேர் 

உறுவனே முனி புத்தன் பேர் உலக்கையே யுரோங்க லோணம்.

 

282 (8) 

விறைப்பென்ப செறிவு வெற்றி வெருவுதல் பொருதல் நாற்பேர் 

பொறுத்தலே பொறை தாங்கற்பேர் புந்திதான் புதனே புத்தி 

இறுத்தலே ஒடித்தல் தங்க லியம்புதல் முப்பேரென்ப 

கறுப் பிருள் சினக்குறிப்பாங் கன்று கைவளை கன்றாமே.

 

283 (9) 

பொறி மரக்கலமே செல்வம் பூமக ளெந்திரங்கள் 

அறி விலாஞ்சனை யெழுத்தே டைம்பொறி வரி யொன்பான்பேர் 

வெறி வெருவுதல் கலக்கம் வெறியாட்டு வட்ட நாற்றம் 

குறியபேய் துருவை கள்ளுக் கூறு நோயொன்பதாமே.

 

284 (10) 

உறை பொருண் மருந்து வாழ்நாள் உணவு வெண்கலமே காரம் 

எறிபடைக்கலத்தின்கூடே யெண்குறித்திறுதிபெய்தல் 

நறிய பாற்பிரை யிடைச்சொல் நகர நீர்த்துளி யீராறாம் 

அறை முழை மோதல் பாறை திரை சிற்றின் மொழியாமே.

 

285 (11) 

இறை சிவன் கடன் வேந்தன் கையிறை யிறுப்பிறை சிறந்தோன் 

சிறுமை புள்ளிறகு தங்கல் சென்னி கூ னிறப் பீராறே 

உறையு ளென்பது நா டூராம் உறுதியே நன்மை கல்வி 

பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி.

 

286 (12) 

இறும்பு தாமரையின்பூவே மலை குறுங்காடு மேற்கும் 

இறும்பூது தகைமை வெற்போ டதிசயங் குழை தூ றென்றாம் 

கறங்கலே சுழல லோசை கதிரென்ப திரவி சோதி 

பறம் புயர்மலை முலைப் பேர் பாய்மாவே குதிரை வேங்கை.

 

287 (13) 

கூற்றென்பதி யமன் சொல்லாங் கோமானே மூத்தோன் பன்றி 

நாற்ற நாறுதல் தோன்றற்பேர் நனவென்ப தகலந் தேற்றம் 

ஊற்றென்ப தூன்று கோலும் உறவியு மிருபேரோதும் 

நோற்றலே பொறை தவப்பேர் நுணங்கென்ப நுண்மை தேமல்.

 

288 (14) 

கற்பமே பிரமன் வாழ்நாள் கற்பக தரு சுவர்க்கம் 

பொற்பென்ப தழகினோடு பொலிவு யொப்பனையு மாகும் 

பற்பமே பதூமந் தூளாம் பழங்கணே துன்பம் ஓசை 

உற்கை தாரகை தீக்கொள்ளி யுண்டிதான் புசித்தல் சோறே.

 

289 (15) 

முற்றல் காழ்கோடன் மூப்பு முடிவுடன் வளைத்தல் நாற்பேர் 

நெற்றியே நுதலின்பேரும் நெடும் படை யுறுப்பு மாகும் 

கொற்றமே வன்மை வெற்றி கோவரசியன் முப்பேரே 

ஏற்றுதல் புடைத்தலோடேயெறிதலு மிருபேராமே.

 

290 (16) 

அறுகென்ப சிங்க மோர்புல் யாளியாகு முப்பேர் 

வறிதென்ப தருக லேசற் றறியாமை பயனில் வார்த்தை 

மறலியே மயக்கங் கூற்றா மறவி கண் மறதி யீனம் 

குறளென்ப குறளும் பேயுங் குறுமையும் கூறுமுப்பேர்.

 

291 (170) 

விறலென்ப வலி வென்றிப் பேர் விழைந்தோனே நண்பன் வேட்டோன் 

நொறிலென்ப விரைவினோடு நுடக்கமு மிருபேராமே 

நெறி வழி நீதி யென்ப நிருமித்தல் படைப் பாராய்தல் 

பறை பறை வசனத்தோடு பறக்கும்புள்ளிறகு முப்பேர்.

 

னகரயெதுகை

 

292 (1) 

மனவு நன்மணி சங் கக்காம் வரை மலை யிறை வேய் மட்டாம் 

தனி தமி யொப்பின்மைப் பேர் சாந்தமே கமையுஞ் சாந்தும் 

முனை பகை நுனி வெறுப்பாம் முளை வே யங்குரமே பிள்ளை 

யின மிருங்கிளை யமைச்சா மெழில் வண்ண மிளமைக்கும் பேர்.

 

293 (2) 

ஆனகம் படகத்தின் பேர்ஆகுந் துந்துபியு மப்பேர் 

மானமே யளவி லச்சை விமானமே பெருமை குற்றம் 

பானலே பழன நெய்தல் பாங்கரே யிடம் பக்கப் பேர் 

மானலே மயக்கம் ஒப்பாம் வருடமே மழையு மாண்டும்.

 

294 (3) 

தானமே மத நீராட்டுத் தருகொடை சுவர்க்க நாற்பேர் 

பீனமே பருமை பாசி பேடென்ப பேடி யூரே 

நானமே பூசும்பூச்சு நானமுங் குளிக்குநீரும் 

வான மாகாயமென்ப மழை யுலர்மரமுமாமே.

 

295 (4) 

வானி மேற்கட்டி சேனை வண்துகிற் கொடி முப்பேரே 

ஆனி யுத்தராட மூலஞ் சேத மோர் மாதமென்ப 

ஏனையே யொழிபு மற்றையெனு மிடைச்சொற்கு மப்பேர் 

ஆனியம் பொழுது நாளாம் அனந்தை யோர்சத்தி பூமி.

 

296 (5) 

முன்னலே நினைவு நெஞ்சா முன்னஞ் சீக்கிரியோ டெண்ணம் 

கன்னல் சர்க்கரை கரும்பு கரக நாழிகைவட்டிற் பேர் 

மன்ன னுத்தரட்டாதிப்பேர் மன்னவன் றானுமாகும் 

கின்னர நீர்புள் யாழாங் கிடக்கை பூதலம் பாயற் பேர்.

 

297 (6) 

பின்னையே பின்றை தங்கை பெரியமாற்குரியதேவி 

கொன் பயனிலாமைக் காலங் கூறிய பெருமை யச்சம் 

பொன்னென்ப வனப் பிரும்பு பூமகள் வியாழ நாற்பேர் 

மன் னிலை மிகுதி வேந்தே வாழி வாழ்கென லிடைச்சொல்.

 

298 (7) 

வன்னியே பிரமசாரி வளர்கிளி சமி செந்தீயாம் 

சென்னி கம் பாணன் சோழன் சீரு ளீயஞ் செம்பாகும் 

கன்னி பெண் ணழிவிலாமை கட்டிளமைக்கும் பேரே 

தென் னிசை வனப்புத் தாழை தெற்கொடு கற்பு மாமே.

 

299 (8) 

குன்று வேதண்டமாகங் குறைவொடு சதய முப்பேர் 

அன்றி லோர் புள்ளு மூலநாளென வாமிரண்டே 

மன்றமே வௌியின் நாமம் வாச மம்பலமு மப்பெர் 

மன்றலே பரிமளப்பேர் மருவு கல்யாணமும் பேர்.

 

300 (9) 

தன முலை பொன் ஆன்கன்று சந்த முத்தன மைம்பேராம் 

கனவு நித்திரை மையற்பேர் கலிங்கஞ் சாதப்புள் ளாடை 

கனை செறி வொலியா மென்ப கவரியே சவரி மேதி 

பனுவலே கிளவி நூலாம் படப்பை யூர்புறமே தோட்டம்.

 

301 (10) 

அனந்தனே சிவன் மால் சேடன் அலாயுதன் அருக னைந்தே 

அனந்தமே முடிவிலாமை யாடகம் விண் முப்பேரெ 

அனங்கமே யிருவாட்சிப் பேராகு மல்லிகைக்கு மப்பேர் 

தனஞ்சயன் பார்த்தனே செந்தழ லொரு காற்றுமாமே.

 

302 (11) 

சானகி சீதை மூங்கில் தனுவென்ப துடல் வில் லற்பம் 

சானுவே மலை முழந்தாண் மலைப்பக்கம் தானுமாகும் 

சோனையே யோண நாளும் விடாமழைசொரிதலும் பேர் 

கானலே மலைச்சார் சோலை கடற்கரைச்சோலை பேய்த்தேர்.

 

303 (12) 

வானென்ப விசும்பு மேகம் மழையொடு பெருமை நாற்பேர் 

தானையே சேனை யாடை படைக்கலந் தானுமாகும் 

கானந் தே ரிசையே பேதை காடுதற் பாடி யைம்பேர் 

ஏனலே செந்தினைப்பேர் தினைப்புன மென்று மாமே.

 

304 (13) 

முனியென்பது யானைக்கன்று முனிவன் வில் லகத்தி நாற்பேர் 

துனியென்ப புலவிநீட்டந் துன்ப நோ யாறு கோபம் 

பனியென்ப நடுக்கந் துன்பம் பயங் குளி ரிமமைம் பேரே 

சினை யென்ப முட்டை பீளா மரக்கொம்புஞ் செப்பு மப்பேர்.

 

305 (14) 

மானே சாரங்க மாவின்பொதுவொடு மகர ராசி 

கானே நன்மணங் காடென்ப கல்லி யூர்குருவி யாமை 

ஏனாதி மஞ்சிகன் மந்திரியுந் தந்திரியு மென்ப 

மீனே சித்திரை நாள் வான்மீன் மயிலையு மேவுமப்பேர்.

 

306 (15) 

ஞானமே யறிவு கல்வி நல்ல தத்துவ நூன் முப்பேர் 

யானமே மரக்கலத்தோ டெழிலுர்திவிகற்ப மிரண்டாம் 

ஏன மோலைக்குடைப் பேர் எறுழியு மறமு மப்பேர் 

மேனியே வடிவமென்ப நிறத்தையும் விளம்பலாமே.

 

307 (16) 

அன்னையே முன்பிறந்தாள் தோழி தாயாகு மென்ப 

அன்ன மோதிமமே சோ றாமாகார முட னெய்யுண்டி 

தன்மை யே ரியல்பினோடு தன்மையினிடமுஞ் சாற்றும் 

பன்னலே நெருக்கம் வார்த்தை பருத்தியின் பேருமாமே.

 

308 (17) 

வனமே நீர் மிகுதி காடு வளர்சோலை துளசி யீமம் 

மனுவே மந்திர மோர்நூலாம் மண்ணை பேய் இளமை மூடன் 

புனையென்ப தழகினோடு பொலிவு மொப்பனையுமாகும் 

மனையென்ப மனைவி வீடாம் வதுவையே மணங் கல்யாணம்.

 

309 (18) 

அன் வினையொடு பெயர்க்கும் விகுதி சாரியையு மாகும் 

மன்னிடுங் கனைத்தலென்ப திரு ளோசை யிருபேர் வைக்கும் 

இன்னென வொரு சொற் பல்பேர்க் கியற்கவி முந்நூற்றொன்பான் 

சொன்னவன் குணபத்திரன் றாள்சூடு மண்டலவன் றானே.

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.