LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

தமிழ் - தாய்மொழியா? வாய்மொழியா?

பகுதி - 1 

     இன்றைய உலகமயமாக்கல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், தமிழ் சமுதாயத்தில் குறிப்பாக, இளைய சமுதாயத்திற்கும் , பெற்றோர்களுக்கும் பல்வேறு வாழ்வியல் சார்ந்த அடிப்படை கேள்விகள் மற்றும் குழப்பங்கள் எழுந்துள்ளதை அறியமுடிகிறது.  அதில் முக்கியமானது நம் மொழி சார்ந்ததாகும்.  உலகமயமாக்கலால் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள ஆங்கிலம் , நாம் வீட்டில் பேசும் தாய்மொழி என ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகள் கற்கும்பொழுது, அதில் எதை எவ்வாறு கையாள்வது என்ற குழப்பம் எழுகிறது.  நான் அறிந்தவரையில், பல்வேறு பெற்றோர்களுக்கு எழும் முக்கியமான கேள்வி என்பது, என் மகனோ, மகளோ தமிழ் பேசத்தெரிந்து, எழுதத்தெரிந்து என்ன செய்யப்போகிறார்கள்? தாய்மொழி கற்று என்ன பயன்?  கல்வி சூழலும் ,வேலைச் சுழலும் ஆங்கிலத்தில் இருக்கும்பொழுது தாய்மொழியின் அவசியம் என்ன?  என்பதாகும்.


     இந்த குழப்பம் ஒரு தெலுங்கு , கன்னடம், மலையாளம் பேசும் மக்களுக்கு கண்டிப்பாக வருவதில்லை என்றே சொல்லலாம்.  ஏன், ஹிந்தி பேசும் வட மாநிலத்தவர்க்கும், சீனர்களுக்கும், பாகிஸ்தானிக்கும் கூட இந்த கேள்வி எழவில்லை.   இன்று அமெரிக்கா முழுவதும் தெலுங்கு பேசுபவர்கள் எவ்வித தயக்கமுமின்றி, குழப்பமுமின்றி, அமெரிக்கரை தவிர்த்து அனைவரிடமும் தெலுங்கிலேயே பேசுவதை பார்க்கிறோம்.  இந்தியராக இருந்தால், தெலுங்கில் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள், பிறகு நமக்கு தெலுங்கு தெரியாது என்று சொல்லி ஆங்கிலத்தில் உரையாடலை தொடர வற்புறுத்த வேண்டியுள்ளது.  இரண்டு மலையாளிகள் சந்திக்கும்பொழுது மலையாளத்தில் பேசுகிறார்கள். இரண்டு கன்னடர்கள் சந்திக்கும்பொழுது கன்னடத்திலும், ஹிந்தி பேசுபவர்கள் ஹிந்தியிலும் பேசுகிறார்கள்.  ஆனால்,  இரண்டு தமிழர்கள் சந்திக்கும்பொழுது பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறோம்.   இதற்கு என்ன காரணம்?  இதை ஆராய்ந்து நம்மை சரிசெய்துகொள்வது அவசியம் என்றே கருதுகிறேன். இதற்கான காரணத்தை ஆராயும்பொழுது நம் கலாச்சார சூழல் காரணமாக இருக்குமா?  ஆங்கிலம் பேசுபவர்கள் படித்தவர்கள், உயர்ந்தவர்கள் என்ற மனநிலை காரணமாக இருக்குமா? அப்படியானால் இந்த எண்ண விதை எப்போது நம்மில் விழுந்தது? ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபொழுதா?  யோசிக்கவேண்டிய விஷயம்.   இதனால் நாம் ஆங்கிலத்தையோ, மற்ற மொழிகளையோ தெரிந்துகொள்ளவேண்டாம் என அர்த்தமில்லை.  எத்துனை மொழிகள்  கற்க முடியுமோ அவைகளை கற்று, தமிழர்கள் எட்டுத்திக்கும் செல்லும் அதே நேரத்தில், தாய்மொழியை வாய்மொழியாகக் கருதிவிடாமல், அதை பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்துகொள்ளவும் அதன் முக்கியத்துவத்தை உணரவும் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.  


தமிழ் மொழியை படிக்க ஆர்வம் காட்டாதவர்கள் பெரும்பாலும் சொல்லும் காரணம் கீழ்கண்ட எதாவது ஒன்றாக இருக்கும்:


  • நாங்கள் CBSC  அல்லது மெட்ரிக் -ல் படிக்க வைத்து IIT அல்லது IIM ல் மேல்படிப்பு படிக்கவைத்து பன்னாட்டுக் கம்பெனியில் வேலைக்கு அனுப்பிவிடுவோம்.  இதில் தமிழ் அறிவு எதற்கு?
  • பெற்றோர்களான எங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தி என பல மொழிகள் தெரியும். எதாவது ஒன்றில் பேசிவிட்டு போகிறோம்
  • நாங்கள் பெங்களுருவில் அல்லது அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கப்போகிறோம்.  இதில் அந்த வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப, கன்னடமோ, ஸ்பானிஷ் மொழியோ சொல்லிகொடுக்கலாமே.  தமிழ் கற்று ஏன் நேரத்தை வீண் செய்யவேண்டும்?
  • எங்கள் வீட்டில் தத்தா பாட்டியுடன் தமிழில் பேசினால் போதாதா, அதற்கு மேல் தமிழை கற்று என்ன செய்யப்போகிறார்கள்?
  • தமிழ் படித்து என்ன வேலை கிடைக்கவா போகிறது? எதற்கு நேரத்தை வீண் செய்யவேண்டும்?
  • என் குழந்தை என்ன தமிழ் படித்து கவிதையா எழுதப்போகிறது?  எதற்காக சிலபேர் தமிழ் படிக்கச்சொல்கிறார்கள்?
  • என் குழந்தை தொழிலில் சாதிப்பதற்கு, பெரிய ஆளாக வருவதற்கு ஆங்கிலமும், ஹிந்தியும் வெளி மாநிலத்தவர்களிடம், வெளி நாட்டினருடன் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.  அதை விட்டுவிட்டு எங்கள் வீட்டில் தமிழும் கற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள், தேவைதானா?
  • என் மகள் பரதநாட்டியம், ஹிந்தி, வயலின், கீபோர்ட், குமான், செஸ், ஸ்விம்மிங் என பல வகுப்புகளுக்கு போகிறாள்.  இதில் எதற்கு தேவை இல்லாமல் தமிழ் வேறு சொல்லிக்கொடுத்து அவளின் மற்ற திறமைகளுக்கு செலவிடும் நேரத்தை குறைக்கவேண்டும்?
  • இன்று எந்த வேலைக்கு செல்வதானாலும், தமிழ் தெரிகிறதா என்று பார்ப்பதில்லை, அது வேலை செய்யும் இடத்திலும் தேவைப்படுவதுமில்லை. ஏன்தான் சிலர் தமிழ் படிக்க தனியாக நேரம் செலவிடுகிறார்களோ  தெரியவில்லை.


இப்படி எதாவது ஒரு வினா உங்கள் மனதில் தோன்றினால், நீங்கள் கண்டிப்பாக இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்கவேண்டும். 


-தொடரும்



ச. பார்த்தசாரதி

by Swathi   on 22 Nov 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.