LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கத்தி இசை வெளியீட்டு விழா : சுவாரசிய தகவல்கள் !!

துப்பாக்கி படத்தை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் கத்தி.


இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். 


கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. 


இந்த விழாவில் ஆர்.பி.செளத்ரி, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.எல்.விஜய், தாணு, ஆர்யா, விக்ரமன், தனஞ்செயன், கத்தி படக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சரியாக 7.10க்கு தொடங்கி 9 மணிக்கெல்லாம் விழா நிறைவடைந்தது.


இந்த விழாவில், முக்கிய பிரபலங்கள் பேசிய சுவாரசிய தகவல்கள் பின்வருமாறு, 


எனக்கும் தமிழ் உணர்வு உள்ளது : முருகதாஸ் !!


ஏ.ஆர்.முருகதாஸ். பேசுகையில், கத்தி படத்தில் விஜய் ஜீவானந்தம், கதிரேசன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 


நான் விஜய்யிடத்தில், துப்பாக்கி ஜெகதீஷ், கத்தி ஜீவானந்தம், கதிரேசன் இவர்களில் யாரை உங்களுக்கு பிடிக்கும் என்றேன் அவர் கதிரேசன்தான் பிடிக்கும் என்றார். எனக்கும் அப்படித்தான். அதேபோல் ரசிகர்களுக்கும் கதிரேசனைத்தான் பிடிக்கும்.


அதோடு, துப்பாக்கி படத்தைவிட கத்தி படம் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும். அந்த அளவுக்கு விஜய்யின் கதாபாத்திரம் அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.


மேலும், நான் பணத்துக்காக பாலிவுட்டுக்கு சென்று படம் இயக்கவில்லை. சென்னைக்கு அப்பால் உள்ள ஊரில் இருந்து வந்த ஒருவனாலும் பாலிவுட்டில் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கத்தான் எடுக்கிறேன். 


நானும், விஜய்யும் பணத்திற்காக மட்டுமே படமெடுக்கவில்லை. அதோடு, நானும் பச்சை தமிழன்தான். எனக்கும் தமிழ் உணர்வு உள்ளது என்பதை இந்த தருணத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார்.  


நான் தியாகியும் அல்ல... துரோகியும் அல்ல... விஜய் !!


ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக்கணும்ங்கிறதுக்காக நாங்க படம் எடுக்கல. எல்லாரும் சந்தோஷமா ரசிக்கணும்னுதான் படம் எடுக்கிறோம். என்னைத் தியாகின்னு சொல்லமாட்டேன். ஆனா, நான் துரோகி கிடையாது. இது தமிழ்நாடு. நான் தமிழன்.


எந்த மக்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ படம் பண்ணவில்லை. உண்மைக்கு விளக்கம் சொன்னா தெளிவு கிடைக்கும். வதந்திக்கு விளக்கம் சொன்னா உண்மை ஆகிடும். என சூசகமாக பேசி முடித்தார் நடிகர் விஜய். 


இதில் சமந்தா பேசும்போது, ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் இவர்கள் கூட்டணியில் கத்தி படம் உருவாக இருப்பதாக தகவல் தெரிந்ததும் இதில் விஜய் ஜோடியாக யார் நடிக்கப் போறாங்க என்ற ஆர்வமும். அதில் நான் நடிக்க வேண்டும் என்றும் ஆசையும் இருந்தது. 


அந்த சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் எனக்கு போன் செய்து கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீ தான் நடிக்க வேண்டும் என்று கூறியது. எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று கூறினார் சமந்தா.


சமந்தா மாதிரியான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள ஆசை : சதீஸ் 


விழாவில் சதீஷ் பேசும் போது, நான் சமந்தா மாதிரியான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறினார். அதற்கு சமந்தா சதீஷிடம் நீ ஆசைப்படுவது போல் உன்னையே கல்யாணம் கட்டிக்கிறேன் என்று மேடையில் கூறினார். சமந்தா இவ்வாறு தமாஷாக கூறியதை கேட்டதும் சதீஷ் முகத்தில் பிரகாசம் தெரிந்தது. 


ஆக, கத்தி பட இசை வெளியீட்டு விழா பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் அமைதியான முறையில் நடந்தது முடிந்தது.  


 

by Swathi   on 19 Sep 2014  0 Comments
Tags: Kaththi Movie   Kaththi Audio Launch   Vijay Kaththi Movie   கத்தி பாடல்கள்   கத்தி இசை வெளியீட்டு விழா        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.