|
|||||
குருப் பெயர்ச்சி: ஆலயங்களில் சிறப்பு வழிபாடு! |
|||||
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. நவக்கிரகங்களில் ஒன்றான குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் இருப்பார். அதன் பின் அடுத்த ராசிக்கு மாறுவார். இதனையே நாம் குருப்பெயர்ச்சி என்கின்றோம். தற்போது துலாம் ராசியில் உள்ள குரு பகவான், அடுத்த ராசியான விருச்சிகத்திற்குப் பெயர்கிறார். வாக்கிய முறைப் பஞ்சாங்கப்படி 4-10-2018 இரவு 10-05 மணிக்கு இது நடைபெறுகிறது. திருக்கணிதமுறைபஞ்சாங்கப்படி 11-10- 2018 இரவு 7-20 மணிக்கு இந்தப் பெயர்ச்சி நடக்கிறது. இதனையொட்டி குரு பரிகார ஸ்தலங்களில் சிறப்பு யாகங்கள், லட்சார்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. குரு பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் இந்த சிறப்பு யாகங்களில் பங்கேற்கலாம். குருப் பெயர்ச்சி அன்று குரு பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் சமர்ப்பித்து வணங்குதல் நல்லது. ஆலங்குடி ஆபத்சகாயர் ஆலயத்தில், குருப்பெயர்ச்சிக்கான லட்சார்ச்சனை விழா கடந்த வியாழக்கிழமை தொடங்கி முதற்கட்டமாக அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெற்றது.ஞ் (இதுபற்றி ஏற்கனவே வலைத்தமிழில் வெளியிட்டு இருந்தோம்). இரண்டாம் கட்டமாக அக்டோபர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் இது நடக்கிறது. இதேபோல அனைத்து குருபகவான் பரிகார ஸ்தலங்களிலும் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. உங்களுக்கு அருகில் உள்ள குரு பரிகார ஸ்தலங்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம். அருகில் உள்ள சிவாலயங்களில் நடைபெறும் குருப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகளிலும் பங்கேற்கலாம். |
|||||
by Mani Bharathi on 04 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|