தங்களது பேரக் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் தாத்தா - பாட்டிகளுக்கு, மன அழுத்தம் குறைவதாக பாஸ்டன் பல்கலைக்கழக அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, சமூகவியல் துறை பேராசிரியர், சாரா மூர்மன் கூறியதாவது, இன்றைய சூழ்நிலையில், தாத்தா - பாட்டி மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோருக்கிடையே, ஆரோக்கியமான உறவு முறைகள் இருந்தாலும், இரு தரப்பினருக்குமே மன அழுத்தம் என்பது சாதாரணமாக உள்ளது. இருவரும் மனதளவில், உணர்ச்சி பூர்வமாக ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றனர். அதே நேரத்தில் தாத்தா - பாட்டிகளுக்கு, பேரக் குழந்தைகள் ஆதரவு தருவதாலோ அல்லது அவர்களது ஆதரவைப் பெறுவதாலோ, அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், தாத்தா - பாட்டிகள்தான் அதிகமாக மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். பேரக் குழந்தைகளுடன் கடைக்கு போய் வருவது, கேட்பதை வாங்கிக் கொடுப்பது, வீட்டு வேலைகள் போன்றவற்றைச் செய்வது போன்றவை, இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. ஒருவரிடமிருந்து ஒருவர் பரஸ்பர உதவிகளைப் பெறுவதும், செய்வதுமாக இருந்தால், தாத்தா - பாட்டிகளின் மன அழுத்தமும் குறையும்; பேரக் குழந்தைகளுக்கும் மனதளவில் இது நன்மையை ஏற்படுத்தும்.
|