|
|||||
அகத்தியர் |
|||||
பிறப்பு:உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான். குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன்
என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின்
பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப்
பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய்
குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.
தலைச்சங்க அகத்தியர்: முச்சங்கம் பற்றிய வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கியவர். அகத்தியம் என்னும் நூலை எழுதியவர். காலத்தால்
தொல்காப்பியருக்கு முந்தியவர். வரலாறு:சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை
மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர்
கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம்
அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார்.அகத்தியரின் சிறப்புகள்:தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க
இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி
வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட
வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி,
கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர்
முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.சித்த வைத்தியம்:அகத்திய மாமுனி
சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக
விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள்
பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம்
பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.அகத்தியர் எழுதிய நூல்கள்:அகத்தியர் வெண்பா,அகத்தியர் வைத்தியக் கொம்மி,அகத்தியர் கர்ப்பசூத்திரம்,அகத்தியர்
ஆயுள் வேத பாஷ்யம்,அகத்தியர் வைத்தியம் 4600, அகத்தியர் வைத்திய ரத்னாகரம்,அகத்தியர் வைத்தியக் கண்ணாடி,அகத்தியர் வைத்தியம் 1500,அகத்தியர்
வைத்திய சிந்தாமணி,ஆறெழுத்தந்தாதி,காம வியாபகம்,விதி நூண் மூவகை காண்டம்,அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு,அகத்தியர் செந்தூரம்
300,அகத்தியர் மணி 4000,அகத்தியர் பூசாவிதி,அகத்தியர் சூத்திரம் 30,அகத்தியர் பஸ்மம் 200,அகத்தியர் நாடி சாஸ்திரம்,அகத்தியர் பக்ஷணி,அகத்தியர் கரிசில்
பஸ்யம் 200,சிவசாலம்,சக்தி சாலம்,சண்முக சாலம் முதலியன இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிறப்பு:
உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான். குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.
தலைச்சங்க அகத்தியர்:
முச்சங்கம் பற்றிய வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கியவர். அகத்தியம் என்னும் நூலை எழுதியவர். காலத்தால் தொல்காப்பியருக்கு முந்தியவர்.
வரலாறு:
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார்.
அகத்தியரின் சிறப்புகள்:
தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி
சித்த வைத்தியம்:
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.
அகத்தியர் எழுதிய நூல்கள்:
அகத்தியர் வெண்பா,அகத்தியர் வைத்தியக் கொம்மி,அகத்தியர் கர்ப்பசூத்திரம்,அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்,அகத்தியர் வைத்தியம் 4600, அகத்தியர் வைத்திய ரத்னாகரம்,அகத்தியர் வைத்தியக் கண்ணாடி,அகத்தியர் வைத்தியம் 1500,அகத்தியர் வைத்திய சிந்தாமணி,ஆறெழுத்தந்தாதி,காம வியாபகம்,விதி நூண் மூவகை காண்டம்,அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு,அகத்தியர் செந்தூரம் 300,அகத்தியர் மணி 4000,அகத்தியர் பூசாவிதி,அகத்தியர் சூத்திரம் 30,அகத்தியர் பஸ்மம் 200,அகத்தியர் நாடி சாஸ்திரம்,அகத்தியர் பக்ஷணி,அகத்தியர் கரிசில் பஸ்யம் 200,சிவசாலம்,சக்தி சாலம்,சண்முக சாலம் முதலியன இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. |
|||||
by Swathi on 22 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|