|
|||||
ராமகிருஷ்ணமடம் நடத்தும் ஆன்மிக சிறுகதைப் போட்டி முதல் பரிசு 10 ஆயிரம் |
|||||
சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும் ராமகிருஷ்ண விஜயமும் இணைந்து ஆன்மிக சிறப்பு சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இது குறித்து ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தா கூறியதாவது: சுவாமி விவேகானந்தர் 150 ஜெயந்தி விழா சிறப்பாக நிறைவு பெற்றதன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும் இந்த சிறப்பு சிறுகதைப் போட்டியை நடத்த இருக்கிறோம்.
சேவை, தியாகம், பக்தி, மனிதநேயம், சமயநல்லிணக்கம், தேசபக்தி, சகோதரத்துவம் ஆகியவற்றை பிரதிபளிக்கும் வகையிலான கதைகள் வரவேற்கப்படுகிறது.
கதைகள், 700 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மகான்களின் வாழ்க்கை சம்பவங்களை எடுத்தாளும் போது ஆதாரத்துடம் குறிப்பிட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் கதைகளுக்கு முதல் பரிசாக 10 ஆயிரமும் இரண்டாம் பரிசாக 8 ஆயிரமும் மூன்றாம் பரிசாக 6 ஆயிரமும் வழங்கப்படும். ஊக்கப்பரிசாக 5 கதைகளுக்கு தலா 2 ஆயிரம் வழங்கப்படும். எல்லா வயதினரும் கலந்து கொள்ளலாம். கதைகள் அனுப்ப கடைசி தேதி: 25.7.2014.
அனுப்ப வேண்டிய முகவரி: ஆன்மிக சிறுகதைப் போட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம், 31, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை- 600004.
|
|||||
by Swathi on 23 May 2014 1 Comments | |||||
Tags: சிறுகதை போட்டி ஆன்மீக சிறுகதை ராமகிருஷ்ணா மடம் Spiritual Short Stories Ramakrishna Madam | |||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|