இங்கிலாந்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் பற்றி அந்நாட்டு உள்ளாட்சித் துறை அமைச்சர் எரிக் பிக்கிள்ஸ் டேகூறியதாவது, பொது இடங்களில் எச்சில் துப்புவதனால், அந்த இடம் சுகாதார கேடு நிறைந்த இடமாக மாறிவிடுகிறது, இதனை தடுக்கும் பொருட்டே, இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும். இந்தச் சட்டத்திற்கு பொது மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்கும் படி அவர் கூறியுள்ளார். எச்சில் துப்புவோருக்கு அபராதம் விதிக்கும் இந்த புதிய நடைமுறை சிங்கப்பூர் போன்ற சில நாடுகளில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
|