லண்டன், ஆகஸ்ட் 13 : கோலாகலமாக துவங்கி கடந்த 17 நாட்களாக நடந்து வந்த லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது. லண்டன் ஒலிம்பிக்கில் 204 நாடுகள் பங்கு பெற்று விளையாடின. கலை நிகழ்ச்சியுடன் ஒலிம்பிக் 2012 நிறைவுற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக அனைத்து நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு கொடிகளை ஏந்தி அணி வகுத்து சென்றனர். இந்தியாவின் சார்பில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற மேரி கோம் இந்திய கொடியை ஏந்தி வந்தார். இறுதியில் ஒலிம்பிக் கொடி ரியோ டி ஜெனிரியோ மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்து 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரியோவில் நடைபெறுகிறது.
|