கான்பெராவில் நடைபெற்ற 33வது ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லீகல் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஸ்குவாஷ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனை தீபிகா படைத்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் கான்பெரா நகரில் 33வது ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெண்களுக்கான காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லீகல், உலக ஸ்குவாஷ் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அமன்டா சோபி உடன் மோதினார். போட்டியின் துவக்கம் முதலே சிறப்பாக ஆடிய தீபிகா, 11-5, 11-7, 12-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
|