லண்டன் : ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை ஏமாற்றமே மிஞ்சியது. குத்துச் சண்டையில் தங்கம் வெல்வார் என்று எதிர் பார்க்கப்பட்ட தேவேந்திரோ சிங்கும் தோல்வி அடைந்தார். இப்போட்டியிலும் நடுவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. லண்டன் ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றனர். கண்டிப்பாக 3 பதக்கம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது, சரியாக புள்ளிகள் வழங்கப்படாமல் முதலில் சுமித் சங்வான் வெளியேற்றப்பட்டார். அடுத்து அமெரிக்க நெருக்கடி காரணமாக, முதலில் வெற்றி பெற்ற விகாஷ் கிருஷ்ணன், பின் தோற்றதாக அறிவிக்கப்பட்டார். மனோஜ் குமாருக்கும் புள்ளிகமள் சரியாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் "லைட் பிளை வெயிட்" 49 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங் அயர்லாந்தின் பார்னசை சந்தித்தார். இதன் முதல் சுற்றில் 7-5 என, பார்னஸ் முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றில் பார்னஸ் மீது, தலையால் மோதினார் தேவேந்திரோ சிங். இதனால் "பெனால்டியாக' 2 புள்ளிகள் பார்னசிற்கு வழங்கப்பட, வலுவான முன்னிலை (10-5) பெற்றார்.
மூன்றாவது மற்றும் கடைசி சுற்றில் ஆக்ரோஷமாக விளையாடினார் தேவேந்திரோ சிங். ஆனால், இவரை குத்த விடாமல், அவ்வப்போது கட்டிப்பிடித்ததால், இம்முறை பார்னசிற்கு 2 புள்ளி "பெனால்டி' தரப்பட்டது. இதில் தேவேந்திரோ சிங் 8-6 என, முன்னணி அடைந்த போதும், மொத்தம் 18-23 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
லண்டன் : ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை ஏமாற்றமே மிஞ்சியது. குத்துச் சண்டையில் தங்கம் வெல்வார் என்று எதிர் பார்க்கப்பட்ட தேவேந்திரோ சிங்கும் தோல்வி அடைந்தார். இப்போட்டியிலும் நடுவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. லண்டன் ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றனர். கண்டிப்பாக 3 பதக்கம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது, சரியாக புள்ளிகள் வழங்கப்படாமல் முதலில் சுமித் சங்வான் வெளியேற்றப்பட்டார். அடுத்து அமெரிக்க நெருக்கடி காரணமாக, முதலில் வெற்றி பெற்ற விகாஷ் கிருஷ்ணன், பின் தோற்றதாக அறிவிக்கப்பட்டார். மனோஜ் குமாருக்கும் புள்ளிகமள் சரியாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் "லைட் பிளை வெயிட்" 49 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங் அயர்லாந்தின் பார்னசை சந்தித்தார். இதன் முதல் சுற்றில் 7-5 என, பார்னஸ் முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றில் பார்னஸ் மீது, தலையால் மோதினார் தேவேந்திரோ சிங். இதனால் "பெனால்டியாக' 2 புள்ளிகள் பார்னசிற்கு வழங்கப்பட, வலுவான முன்னிலை (10-5) பெற்றார். மூன்றாவது மற்றும் கடைசி சுற்றில் ஆக்ரோஷமாக விளையாடினார் தேவேந்திரோ சிங். ஆனால், இவரை குத்த விடாமல், அவ்வப்போது கட்டிப்பிடித்ததால், இம்முறை பார்னசிற்கு 2 புள்ளி "பெனால்டி' தரப்பட்டது. இதில் தேவேந்திரோ சிங் 8-6 என, முன்னணி அடைந்த போதும், மொத்தம் 18-23 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
|