LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

நடுவர்களின் பாரபட்சத்தால் தேவேந்திரோ சிங் தோல்வி

 

லண்டன் : ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை ஏமாற்றமே மிஞ்சியது. குத்துச் சண்டையில் தங்கம் வெல்வார் என்று எதிர் பார்க்கப்பட்ட தேவேந்திரோ சிங்கும் தோல்வி அடைந்தார். இப்போட்டியிலும் நடுவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. லண்டன் ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றனர். கண்டிப்பாக 3 பதக்கம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது, சரியாக புள்ளிகள் வழங்கப்படாமல் முதலில் சுமித் சங்வான் வெளியேற்றப்பட்டார். அடுத்து அமெரிக்க நெருக்கடி காரணமாக, முதலில் வெற்றி பெற்ற விகாஷ் கிருஷ்ணன், பின் தோற்றதாக அறிவிக்கப்பட்டார். மனோஜ் குமாருக்கும் புள்ளிகமள் சரியாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் "லைட் பிளை வெயிட்" 49 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங் அயர்லாந்தின் பார்னசை சந்தித்தார். இதன் முதல் சுற்றில் 7-5 என, பார்னஸ் முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றில் பார்னஸ் மீது, தலையால் மோதினார் தேவேந்திரோ சிங். இதனால் "பெனால்டியாக' 2 புள்ளிகள் பார்னசிற்கு வழங்கப்பட, வலுவான முன்னிலை (10-5) பெற்றார். 
மூன்றாவது மற்றும் கடைசி சுற்றில் ஆக்ரோஷமாக விளையாடினார் தேவேந்திரோ சிங். ஆனால், இவரை குத்த விடாமல், அவ்வப்போது கட்டிப்பிடித்ததால், இம்முறை பார்னசிற்கு 2 புள்ளி "பெனால்டி' தரப்பட்டது. இதில் தேவேந்திரோ சிங் 8-6 என, முன்னணி அடைந்த போதும், மொத்தம் 18-23 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். 

லண்டன் : ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை ஏமாற்றமே மிஞ்சியது. குத்துச் சண்டையில் தங்கம் வெல்வார் என்று எதிர் பார்க்கப்பட்ட தேவேந்திரோ சிங்கும் தோல்வி அடைந்தார். இப்போட்டியிலும் நடுவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. லண்டன் ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றனர். கண்டிப்பாக 3 பதக்கம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது, சரியாக புள்ளிகள் வழங்கப்படாமல் முதலில் சுமித் சங்வான் வெளியேற்றப்பட்டார். அடுத்து அமெரிக்க நெருக்கடி காரணமாக, முதலில் வெற்றி பெற்ற விகாஷ் கிருஷ்ணன், பின் தோற்றதாக அறிவிக்கப்பட்டார். மனோஜ் குமாருக்கும் புள்ளிகமள் சரியாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் "லைட் பிளை வெயிட்" 49 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங் அயர்லாந்தின் பார்னசை சந்தித்தார். இதன் முதல் சுற்றில் 7-5 என, பார்னஸ் முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றில் பார்னஸ் மீது, தலையால் மோதினார் தேவேந்திரோ சிங். இதனால் "பெனால்டியாக' 2 புள்ளிகள் பார்னசிற்கு வழங்கப்பட, வலுவான முன்னிலை (10-5) பெற்றார். மூன்றாவது மற்றும் கடைசி சுற்றில் ஆக்ரோஷமாக விளையாடினார் தேவேந்திரோ சிங். ஆனால், இவரை குத்த விடாமல், அவ்வப்போது கட்டிப்பிடித்ததால், இம்முறை பார்னசிற்கு 2 புள்ளி "பெனால்டி' தரப்பட்டது. இதில் தேவேந்திரோ சிங் 8-6 என, முன்னணி அடைந்த போதும், மொத்தம் 18-23 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். 

by Swathi   on 10 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத் காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.