லண்டன், ஆகஸ்ட், 8 : ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான இரண்டு கிலோ எடை கொண்ட வட்டு எறிதல் இறுதி போட்டியில் இந்தியா தோல்வி கண்டது. இறுதிப்போட்டியில் 12 நாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜெர்மனி வீரர் அதிகபட்சமாக 68.27 மீட்டர் தூரம் வீசி முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். ஈரான் வீரர் எஷன் ஹடாடி 68.18 மீட்டர் தூரம் வீசி இரண்டாவதாக வந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். ஈரான் வீரருக்கு அடுத்தபடியாக வட்டு எறிந்த எஸ்டோனியா வீரர் ஜெர் கண்டர் 68.03 மீட்டர் தூரம் வீசி மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றார். இப்போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கௌடா வெறும் 64.79 மீட்டர் தூரம் வட்டு எரிந்து எட்டாவதாக வந்து பதக்கம் பெரும் வாய்ப்பை இழந்து ஏமாற்றத்தை அளித்தார்.
|