லண்டன் : ஒலிம்பிக் பாட்மின்டன் வரலாற்றில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனை படைத்தார் செய்னா நேவல். நேற்று நடந்த காலிறுதியில் மிக எளிதாக வென்று, பதக்க வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டார். லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த பாட்மின்டன் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் செய்னா நேவல், 22, டென்மார்க்கின் டினே பான், 33, மோதினர். இதன் முதல் செட்டை 21-15 எனக் கைப்பற்றிய செய்னா, இரண்டாவது செட்டில் சிறிது தடுமாற்றம் அடைந்தார். ஒரு கட்டத்தில் டினே பான் 20-18 என முன்னிலை வகித்தார். பின் எழுச்சி கண்ட செய்னா 22-20 என தன் வசப்படுத்தினார்.
|