பிரம்மம் ஒரு அற்புத சக்தி. இந்த அற்புத சக்தி எப்படி உருவாகியது?, பிரம்மத்தைப் படைத்தவர் யார்? போன்ற கேள்விகளுக்கு இதுவரை சரியான பதில்கள் கிடைக்கவில்லை. பிரம்மத்துக்கு சூரியன் ஒளி, வெப்பம் இரண்டையும் தருகிறார். சூரியக்கதிர்கள் புவியைத் தொடுவதால், புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் உயிர்ப்பிக்கின்றன. ஏழு நிறங்களைக் கொண்ட கதிரவன்கதிர்கள் பூமிக்கு ஒளி, ஒலி, வெப்பம், உஷ்ணம் ஆகிய உணர்வுகளைக் கொடுக்கிறது. புவியில் பிரதிபலிக்கிற கதிரவன் கதிர்களைப் பற்றி நாம் எப்போதாவது யோசித்திருப்பதுண்டா? ஒரு கணம் இந்த அபூர்வ சக்தியின் மீது கவனம் செலுத்தியிருந்தால், தற்சமயம் தலைதூக்கி நடமாடுகிற “புவி வெப்பமடைகிறது” என்ற பிரச்சனையை சமாளித்திருக்கலாம்.
|