LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- ஸ்ரீமத் பகவத்கீதை

இரண்டாவது அத்தியாயம்-ஸாங்க்யயோகம்

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத த்விதீயோ அத்யாய:।

ஸாங்க்யயோகம்

 

ஸம்ஜய உவாச।
தம் ததா க்ருபயாவிஷ்டமஷ்ருபூர்ணாகுலேக்ஷணம்।
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந:॥ 2.1 ॥


ஸஞ்ஜயன் கூறினான்: பரிவும், கவலையும் நிறைந்து கண்ணீர் ததும்ப அமர்ந்துவிட்ட அர்ஜுனனைப் பார்த்து மதுஸ தனரான ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு கூறினார்.

ஸ்ரீபகவாநுவாச।
குதஸ்த்வா கஷ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்।
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந॥ 2.2 ॥


முழுமுதற் கடவுள் (பகவான்) கூறினார்: எனதருமை அர்ஜுனனே! உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் முன்னேற்ற நோக்கங்களை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்கு ஒருவனைக் கொண்டு செல்வதில்லை. அவமானத்தையே கொடுக்கின்றன.

க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத்த்வய்யுபபத்யதே।
க்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரம்தப॥ 2.3 ॥


ப்ருதாவின் புத்திரனே, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல. இதுபோல் சிறுமையான இதயபலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளை தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.

அர்ஜுந உவாச।
கதம் பீஷ்மமஹம் ஸாங்க்யே த்ரோணம் ச மதுஸூதந।
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந॥ 2.4 ॥


அர்ஜுனன் கூறினான்: மதுவை அழித்தவரே (கிருஷ்ணரே), எனது வந்தனைக்குரிய பீஷ்மர், துரோணர் முதலியோர்களை போரில் எதிர்த்து எவ்வாறு அம்புகளுடன் தாக்குவேன்?

குரூநஹத்வா ஹி மஹாநுபாவாந்
ஷ்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே।
ஹத்வார்தகாமாம்ஸ்து குருநிஹைவ
புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்॥ 2.5 ॥


எனது ஆசிரியர்களான பெரு மக்களின் வாழ்வை அழித்து நான் வாழ்வதை விட பிச்சையெடுப்பது மேல். அவர்கள் பேராசை கொண்டவர்களாயினும் பெரியோர்களே. அவர்கள் கொல்லப்பட்டால் நாம் குருதிக்கறை படிந்த இன்பங்களை அனுபவிப்வராவோம்.

ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ
யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:।
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம:
தே அவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:॥ 2.6 ॥


எது சிறந்ததென்றும் நாம் அறியோம். அவர்களை நாம் வெல்லுதலா அல்லது அவர்கள் நம்மை வெல்வதா. யாரைக் கொன்றால் நாம் வாழ விரும்பமாட்டோமோ அந்த திருதராஷ்டிரர் மக்களே நம் முன்பு போர் செய்யத் தயராக நிற்கின்றனரே.

கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:।
யச்ச்ரேய: ஸ்யாந்நிஷ்சிதம் ப்ரூஹி தந்மே
ஷிஷ்யஸ்தே அஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்॥ 2.7 ॥


இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்தவனாயிருக்கிறேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று தெளிவாக்கும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். உம்மிடம் புகலிடம் கொண்ட சீடன் யான். அருள் கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுவீராக.

ந ஹி ப்ரபஷ்யாமி மமாபநுத்யாத்
யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம்।
அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்॥ 2.8 ॥


என் புலன்களை வறட்டுகின்ற இந்தத் துன்பத்தைப் போக்கடிக்க ஒரு வழியையும் என்னால் காண முடியவில்லை. மேலுலகத்துத் தேவர்களைப் போல இவ்வுலகை எதிரொருவரின்றி ஆளும் அரசைப் பெறினும் இதை என்னால் அழிக்க முடியாது.

ஸம்ஜய உவாச।
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஷம் குடாகேஷ: பரம்தப:।
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ॥ 2.9 ॥


ஸஞ்ஜயன் கூறினான்: எதிரிகளைத் தவிக்கச் செய்பவனான அர்ஜுனன் இவ்வாறு கூறி, ~~கோவிந்தா! நான் போரிடேன்|| என்று கூறிப் பேச்சற்று அமர்ந்தான்.

தமுவாச ஹ்ருஷீகேஷ: ப்ரஹஸந்நிவ பாரத।
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச:॥ 2.10 ॥


பரத குலத் தோன்றலே, அவ்வமயம், இரு தரப்புச் சேனைகளுக்கிடையே, துயரத்தால் பீடிக்கப்பட்டமர்ந்திருந்த அர்ஜுனனனைப் பார்த்து, புன்சிரிப்புடன் பின்வருமாறு கூறினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

ஸ்ரீபகவாநுவாச।
அஷோச்யாநந்வஷோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஷ்ச பாஷஸே।
கதாஸூநகதாஸூம்ஷ்ச நாநுஷோசந்தி பண்டிதா:॥ 2.11 ॥


முழு முதற் கடவுள் கூறினார்: அறிவாளியைப் போலப் பேசும் அதே சமயத்தில் கவலைப்பட வேண்டாதவற்றிற்காக நீ கவலைப்படுகிறாய். அறிஞர் வாழ்பவர்க்காகவோ, மாண்டவர்க்காகவோ வருந்துவதில்லை.

நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:।
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்॥ 2.12 ॥


நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த ஒரு காலமென்றுமிருக்கவில்லை. எதிர்காலத்திலும் நம்மிலெவரும் இல்லாமலிருக்கவும் போவதில்லை.

தேஹிநோ அஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா।
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி॥ 2.13 ॥


உடல்பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதுபோலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா, இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.

மாத்ராஸ்பர்ஷாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ணஸுகது:கதா:।
ஆகமாபாயிநோ அநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத॥ 2.14 ॥


குந்தி மகனே! இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும், காலப் போக்கிலான அவற்றின் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவது போலவே, புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றனவாதலால், பரத குலத்தோன்றலே, இவைகளால் பாதிக்கப்படாமல் பொறுத்துக்கொள்ளக் கற்றுக் கொள்வாயாக.

யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப।
ஸமது:கஸுகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே॥ 2.15 ॥


மனிதரில் சிறந்தோனோ (அர்ஜுனா), இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதவனும் இருநிலையிலும் தந்நிலை மாறாதவனுமே விடுதலைக்கு நிச்சயமாய்த் தகுதி பெற்றவனாயிருக்கிறேன்.

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:।
உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஷிபி:॥ 2.16 ॥


உண்மை அறிந்தவர்கள், நிலையற்றவற்றிற்கு நீடிப்பும், நிலைத்தவைக்கு முடிவுமில்லையென்று முடிவு செய்துள்ளனர். இவை இரண்டின் இயற்கைகளையும் ஆய்ந்தே இதை இவ்வாறு தீர்மானித்துள்ளனர்.

அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்।
விநாஷமவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித்கர்துமர்ஹதி॥ 2.17 ॥


உடல் முழுவதும் பரவியிருப்பது அழிவற்றதென்று அறிவாய்@ அழிவற்றதான ஆத்மாவைக் கொல்லக் கூடியவர் எவருமில்லை.

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண:।
அநாஷிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத॥ 2.18 ॥


ஜட உடல் மட்டுமே அழிவுறுவது. உடலில் வாழும் ஜீவாத்மாவோ நித்தியமானது, அளவிட இயலாதது, அழிவற்றது. எனவே பரதகுலத் தோன்றலே, போரிடுவாய்!

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஷ்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே॥ 2.19 ॥


ஜீவாத்மா கொலை புரிகின்றதென்றோ, கொல்லுகின்றதென்றோ கருதுபவன் புரிந்து கொள்ளாதவனே. அறிவுள்ளோர் ஆத்மா அழிவதோ, அழிப்பதோ இல்லை என்பதை அறிகின்றார்கள்.

ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:।
அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20 ॥


ஆத்மாவுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஒரு முறை இருந்து பிறகு அவன் இல்லாமல் போவதுமில்லை. அவன் பிறப்பற்ற, நித்தியமான, என்றும் நிலைத்திருக்கும், மரணமற்ற, மிகப்பழையவனாவான். உடல் அழிக்கப்படுவதால் அவன் அழிக்கப்படுவதில்லை.

வேதாவிநாஷிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்।
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்॥ 2.21 ॥


பார்த்தனே! ஆத்மா அழிவற்றது, பிறப்பற்றது, மாற்றமில்லாததென்றறிந்த ஒருவன் யாரையாகிலும் கொல்வதோ, கொலை செய்யப்படக் காரணமாவதோ எப்படி?

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோ அபராணி।
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி
அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ॥ 2.22 ॥


பழையவற்றைக் களைந்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவது போன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.

நைநம் சிந்தந்தி ஷஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:।
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஷோஷயதி மாருத:॥ 2.23 ॥


ஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாததும், நெருப்பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும், காற்றால் உலர்த்தப்பட முடியாததுமாகும்.

அச்சேத்யோ அயமதாஹ்யோ அயமக்லேத்யோ அஷோஷ்ய ஏவ ச।
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோ அயம் ஸநாதந:॥ 2.24 ॥


தனி ஆத்மா பிளக்க முடியாதது. கரைக்க முடியாதது. எரிக்கவோ, உலர்க்கவோ முடியாதது. என்றுமிருப்பது, எங்கும் நிறைந்தது, அசையாதது, என்றும் மாறாமலிருப்பது.

அவ்யக்தோ அயமசிந்த்யோ அயமவிகார்யோ அயமுச்யதே।
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஷோசிதுமர்ஹஸி॥ 2.25 ॥


ஆத்மா கண்ணுக்கெட்டாததும், சிந்தனைக்கப்பாற்பட்டதும், மாற்ற முடியாததுமாகும். இதை நன்கறிந்த, உடலுக்காக வருந்தாமலிருப்பாயாக.

அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்।
ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.26 ॥


மேலும், ஆத்மா எப்போதுமே பிறந்து, இறந்து கொண்டிருப்பதாகவே நீ எண்ணினாலும், பலம் பொருந்திய புயங்களை உடையோனோ! அதில் கவலைப்படுதற்கு என்ன உள்ளது?

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச।
தஸ்மாதபரிஹார்யே அர்தே ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.27 ॥


பிறந்தவன் எவனுக்கும் மரணமும், மரணப்பட்டவனுக்குப் பிறப்பும் நிச்சயமே. தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில் இதற்காகக் கவலைப்படாதே.

அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத।
அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா॥ 2.28 ॥


படைக்கப்பட்டவை எல்லாமே முதலில் தோன்றாதிருந்து, இடைநிலயில் தோன்றி, இறுதியில் மீண்டும் மறைகி;ன்றன. எனவே, கவலைப்பட என்ன இருக்கிறது?

ஆஷ்சர்யவத்பஷ்யதி கஷ்சிதேநம்
ஆஷ்சர்யவத்வததி ததைவ சாந்ய:।
ஆஷ்சர்யவச்சைநமந்ய: ஷ்ருணோதி
ஷ்ருத்வா அப்யேநம் வேத ந சைவ கஷ்சித்॥ 2.29 ॥


சிலர் ஆத்மாவை அதிசயமானது போலப் பார்க்கின்றனர், சிலர் ஆத்மாவை அதிசயமானதாக வர்ணிக்கின்றனர், சிலர் அதிசயமாகக் கேட்பவராகவும், மற்றும் சிலர் கேட்ட பின்னும் ஆத்மாவைச் சற்றும் அறியாதவராகவும் இருக்கின்றனர்.

தேஹீ நித்யமவத்யோ அயம் தேஹே ஸர்வஸ்ய பாரத।
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.30 ॥


பாரத! உடலில் உறைபவன் நித்தியனாதலால் என்றும் அழிக்கப்பட முடியாதவனாக இருக்கிறான். எனவே பிறப்புடைய எந்த ஆத்மாவுக்காகவும் நீ வருந்தவேண்டாம்.

ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி।
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ அந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே॥ 2.31 ॥


ஒரு சத்திரியன் என்ற முறையில் உனது முக்கிய கடமையைப் பற்றிக் கருதுவாயேயாயினும், நீதிக்காகப் போர் புரிவதைக் காட்டிலும் வேறு சிறந்த கடமைகள் உனக்கில்லை. எனவே தயங்கத் தேவையில்லை.

யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்।
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஷம்॥ 2.32 ॥


பார்த்தனே! வலியவரும் போர்வாய்ப்புகள் சுவர்க்கலோகத்தின் கதவுகளைத் திறந்து விடுவதால், அவற்றைப் பெறும் அரசகுலத்தோர் மகிழ்கின்றனர்.

அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸம்க்ராமம் ந கரிஷ்யஸி।
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி॥ 2.33 ॥


ஆனால், இந்த அறப்போரினின்று பின்வாங்கினாலோ கடமையினின்றும் தவறியதாலான தீயவிளைவுகளை நிச்சயமாய்ப் பெறுவதோடு, போர்வீரனெனும் பெயரையும் இழப்பாய்.

அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே அவ்யயாம்।
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே॥ 2.34 ॥


மக்கள் உன்னை என்றும் அவதூறு செய்வர். மதிக்கப்பட்ட ஒருவனுக்கு அவமானம் மரணத்தைவிட மோசமானதே.

பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:।
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்॥ 2.35 ॥


உன் பெயரையும், புகழையும் பற்றிப் பெருமதிப்புக் கொண்டுள்ள பெரும் போர்த்தலைவர்கள், பயத்தால் நீ களம் விட்டதாக எண்ணி, உன்னைக் கோழையாய்க் கருதுவர்.

அவாச்யவாதாம்ஷ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:।
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்॥ 2.36 ॥


உனது எதிரிகள் அன்பிலாதவற்றைக் கூறி உன்னைத் தூற்றுவர். இதைக் காட்டிலும் உனக்குத் துன்பம் தருவது வேறு என்ன இருக்க முடியும்?

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்।
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஷ்சய:॥ 2.37 ॥


குந்திமகனே! போரில் மாய்ந்து நீ மேலுலகை அடையலாம் அல்லது வெற்றிபெற்று இவ்வுலகை அரசாளலாம். எனவே எழுந்து, உறுதியுடன் போர்புரிவாயாக.

ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ।
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி॥ 2.38 ॥


இன்ப, துன்ப, லாப நஷ்டம், வெற்றி, தோல்வி இவைகளைக் கருதாது போருக்காகப் போர் புரிவாயாக. இவ்வாறு செயலாற்றினால், என்றும் நீ தீய விளைவுகளை அடையமாட்டாய்.

ஏஷா தே அபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஷ்ருணு।
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி॥ 2.39 ॥


ஸாங்க்ய தத்துவத்தின் ஆய்வறிவை உனக்கு இதுகாறும் விளக்கினேன். பலன் விளைவுகளுக்காயன்றி ஒருவன் செயல்படும் யோகத்தைப் பற்றிய அறிவை இப்போது கேள். ப்ருதாவின் மகனே, இவ்வாறான அறிவோடு செயல்பட்டால், செயல்களின் விளைவெனும் விலங்கினின்றும் நீ விடுதலை பெறுவாய்.

நேஹாபிக்ரமநாஷோ அஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே।
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்॥ 2.40 ॥


இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகப் பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.

வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந।
பஹுஷாகா ஹ்யநந்தாஷ்ச புத்தயோ அவ்யவஸாயிநாம்॥ 2.41 ॥


இவ்வழியிலுள்ளோர் உறுதியான நோக்கமுடையோர். அவர்களது இலட்சியம் ஒன்றே. குருக்களின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளை உடையதாக ஆகின்றது.

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஷ்சித:।
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:॥ 2.42 ॥

காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்।
க்ரியாவிஷேஷபஹுலாம் போகைஷ்வர்யகதிம் ப்ரதி॥ 2.43 ॥


சிற்றறிவுடைய மாந்தர் வேதங்களின் மலர்ச் சொற்களால் கவரப்படுகிறார்கள். இவ்வாக்கியங்கள் உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுதல், நற் பிறவி அடைதல், அதிகாரமடைதல் முதலான பலன் கருதிச் செய்யும் செயல்களைச் சிபாரிசு செய்கின்றன. புலன் நுகர்ச்சியையும், செல்வமிகு வாழ்வையும் விரும்புபவர் இதைவழட உயர்ந்ததேதுமில்லை என்று கூறுகின்றனர்.

போகைஷ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்।
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே॥ 2.44 ॥


புலன்நுகர்வு, செல்வம் இவைகளை மிகவும் விரும்புவதால் மயங்கியவர்களின் மனங்களில், பரமப்பிரபுவின் பக்தித் தொண்டிற்கான நிலையான உறுதி உண்டாவதில்லை.

த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந।
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்॥ 2.45 ॥


வேதங்கள் பொதுவாக மூன்று பௌதிக இயற்கைக் குணங்களைப் பற்றியவை. அர்ஜுனா! இவை மூன்றிற்கும் மேற்பட்டவனாவாயாக. எல்லா இரட்டைகளிலிருந்தும், அடைதல் காத்தல் இவைகளுக்கான கவலைகளிலிருந்தும் விடுபட்டுத் தன்னில் நிலை பெற்றிருப்பாயாக.

யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே।
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:॥ 2.46 ॥


ஒரு சிறு கிணற்றால் ப+ர்த்தி செய்யப்படும் தேவைகளெல்லாமே, ஒரு பெரும் நீர்த்தேக்கத்தால் உடன் ப+ர்த்தி செய்யப்படும். அது போலவே, வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவைகளுக்குப் பின் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப்பெறும்.

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந।
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோ அஸ்த்வகர்மணி॥ 2.47 ॥


உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்குப் ப+ரண உரிமை உண்டு@ செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை. உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாகவும் எண்ணாதே@ செயலற்ற நிலையிலும் விருப்பங் கொள்ளாதே.

யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥ 2.48 ॥


யோகத்தில் உறுதி கொள் அர்ஜுனா@ வெற்றி தோல்வியின் பற்றைத் துறந்து கடமையைச் செய். இதுபோன்ற மன ஒருமையே யோகமென்றழைக்கப்படுகின்றது.

தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநம்ஜய।
புத்தௌ ஷரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:॥ 2.49 ॥


பக்தித் தொண்டால், பலன் நோக்குக் கருமங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு, பக்தி உணர்வுக்குப் ப+ரண சரணடையக் கடவையாக. தமது செயல்களின் பலனை அனுபவிக்க விரும்புபவர் கஞ்சர்களேயாவர்கள்.

புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே।
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஷலம்॥ 2.50 ॥


பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன், இந்த வாழ்விலேயே, நல்ல, தீய செயல்களின் விளைவுகளிலிருந்தும் தப்புகின்றான். எனவே எல்லாச் செயல்களின் செயற்கலையான யோகத்திற்காய்ப் பாடுபடுவாயாக, அர்ஜுனா.

கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:।
ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்॥ 2.51 ॥


சான்றோர், பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இறைவனிடம் அடைக்கலம் புகுந்து இகவுலகில் செயல்களின் பலன்களைத் துறப்பதால் ஜனன மரணச் சுழலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்றனர். இவ்விதமாக அவர்கள் துன்பங்களுக்கப்பாற்பட்ட நிலையை அடைய முடியும்.

யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி।
ததா கந்தாஸி நிர்வேதம் ஷ்ரோதவ்யஸ்ய ஷ்ருதஸ்ய ச॥ 2.52 ॥


மயக்கமெனும் இவ்வடர்ந்த காட்டை உன் அறிவு தாண்டிவிட்டால், இதுவரை கேட்டவை, இனிக் கேட்க வேண்டியவை இவற்றிற்கு, சமநிலையுடையவனாகி விடுவாய் நீ.

ஷ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா।
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி॥ 2.53 ॥


வேதங்களின் மலர் மொழிகளால் மேலும் மனங்கவரப்படாத நிலையை உன்னறிவு அடையும் போதுதான், தன்னுணர்வு ஆழ்வில் நீ திளைத்திருக்கும்போது தான், நீ தெய்வீக உணர்வை அடைந்து விட்டவனாக இருப்பாய்.

அர்ஜுந உவாச।
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஷவ।
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்॥ 2.54 ॥


அர்ஜுனன் வினவினான்: உன்னதத்தில் இவ்வாறே நிலைபெற்ற உணர்வுடையோனின் அறிகுறிகள் யாவை? அவனது மொழி எது? எவ்வாறு பேசுவான்? எப்படி இருப்பான்? எப்படி நடப்பான்?

ஸ்ரீபகவாநுவாச।
ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்।
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே॥ 2.55 ॥


பகவான் கூறினார்: பார்த்தனே! மனக் கற்பனையில் எழும் புலன் பற்றுக்களின் பலவிதங்களைத் துறந்து, எப்பொழுது ஒருவனது மனம் தன்னில் திருப்தி அடைகின்றதோ அப்போது அவன் உன்னத உணர்வில் நிலைபெறுகிறான்.

து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:।
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே॥ 2.56 ॥


மூவகைத் துயரங்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்படாதவனும், இன்பத்தில் மிக்க மகிழாதவனும், பற்று, பயம், கோபம் இவற்றினின்று விடுபட்டவனுமே மனம் நில பெற்ற முனிவன் என்றழைக்கப்படுகிறான்.

ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஷுபாஷுபம்।
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.57 ॥


நன்மை பெறுவதால் மிகக் களிப்பும், தீயவற்றால் கவலையும் கொள்ளாது, பற்றற்று இருப்பவனே ப+ரண அறிவில் நிலைபெறுகிறான்.

யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோ அங்காநீவ ஸர்வஷ:।
இந்த்ரியாணீந்த்ரியார்தே அப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.58 ॥


புலன்களை அவற்றின் நோக்கப் பொருள்களிலிருந்தும் ஆமை தன் உறுப்புக்களைக் கூட்டிற்குள் இழுத்துக் கொள்வதைப் போல், விலக்கிக் கொள்பவனே உண்மையாக அறிவில் நிலைபெற்றவனென்றறியப் படுகிறான்.

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:।
ரஸவர்ஜம் ரஸோ அப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே॥ 2.59 ॥


புலன் நுகர்வினின்றும் உடலை உடைய ஆத்மா கட்டுப்படுத்தப்பட்டாலும் கூட புலன் நுகர்வுப் பொருட்களுக்கான சுவை இருக்கலாம். ஆனால், உயர்ந்த சுவையொன்றை அனுபவிப்பதால், அத்தகு ஈடுபாடு முழுவதுமாய் முற்றுப்பெற, அவன் உணர்வில் நிலைபெறுகின்றான்.

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஷ்சித:।
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:॥ 2.60 ॥


பகுத்தறிவு நிறைந்து புலன்களைக் கட்டுப்படுத்த முயலும் ஒருவனது மனதைக் கூட, சக்திவாய்ந்த புலன்கள் இழுத்துச் சென்றுவிடுகின்றன.

தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:।
வஷே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.61 ॥


புலன்களை அடக்கி, உணர்வை என்னில் நிறுத்துபவனே நிலைபெற்ற அறிவுடையோனாகிறான்.

த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே।
ஸங்காத்ஸம்ஜாயதே காம: காமாத்க்ரோதோ அபிஜாயதே॥ 2.62 ॥


புலன் நோக்கப் பொருட்களை எண்ணுவதால் ஒருவன் பற்றை வளர்த்துக் கொள்கிறான். இந்தப் பற்றினின்றும் காமமும், காமத்திலிருந்து சினமும் வளர்கின்றன.

க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:।
ஸ்ம்ருதிப்ரம்ஷாத் புத்திநாஷோ புத்திநாஷாத்ப்ரணஷ்யதி॥ 2.63 ॥


சினத்திலிருந்து மயக்கமும், மயக்கத்தால் நினைவு நில இழப்பும் ஏற்படுகிறது. நினைவு குழம்புவதால் அறிவு இழக்கப்பட்டதும் ஒருவன் மீண்டும் ஜடச் சுழலில் இழிந்து வீழ்கிறான்.

ராகத்வேஷவிமுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஷ்சரந்।
ஆத்மவஷ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி॥ 2.64 ॥


விடுதலையின் நியமங்களைப் பின்பற்றுவதன் மூலம் புலனடக்கம் செய்யக் கூடியவன் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாகி விருப்பு, வெறுப்புக்களிலிருந்து விடுபடுகிறான்.

ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே।
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஷு புத்தி: பர்யவதிஷ்டதே॥ 2.65 ॥


தெய்வீக உணர்வில் நிலைபெற்றுவிட்ட ஒருவனுக்கு, ஜட உலகின் மூவகைத் துன்பங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. அத்தகு ஆனந்த நிலையிலே, ஒருவனது அறிவு மிக விரைவாக நிலைபெறுகிறது.

நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா।
ந சாபாவயத: ஷாந்திரஷாந்தஸ்ய குத: ஸுகம்॥ 2.66 ॥


உன்னதமான உணர்வு பெறாதவனுக்கு கட்டுப்பாடான மனதோ, நிலையான அறிவோ கிடையாது. இவையின்றேல் அமைதிக்கு வழியில்லை. அமைதியின்றேல் ஆனந்தம் எவ்வாறு உண்டாகும்?

இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோ அநுவிதீயதே।
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி॥ 2.67 ॥


கடுங்காற்றால், படகு நீரில் அடித்துச் செல்லப்படுவது போலவே, மனம் ஈர்க்கப்படும் ஒரே ஒரு புலன் கூட, மனிதனின் அறிவை அழுத்துச் சென்று விடும்.

தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஷ:।
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.68 ॥


எனவே, பலம் பொருந்திய புய வலிமையுடையோனே! நுகர்ச்சிப் பொருட்களினின்றும் முற்றுமாய் விலக்கிக் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களை உடையோன் நிலைத்த அறிவுடையவனாகிறான்.

யா நிஷா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ।
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஷா பஷ்யதோ முநே:॥ 2.69 ॥


தற்கட்டுப்பாடுள்ளவனுக்கு எல்லா உயிர்களுக்கும் இரவாக இருப்பதே எழும் நேரமாம். அவர்கட்கு எழும் நேரமோ அவனுடைய (ஆய்ந்தறியும் முனிவனுடைய) இரவாக உள்ளது.

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம்
ஸமுத்ரமாப: ப்ரவிஷந்தி யத்வத்।
தத்வத்காமா யம் ப்ரவிஷந்தி ஸர்வே
ஸ ஷாந்திமாப்நோதி ந காமகாமீ॥ 2.70 ॥


ஆசைகளின் தொடர்ந்த பெருக்கால் பாதிக்கப்படாதவன் மட்டுமே, தொடர்ந்து நதிகளின் பெருக்கால் புகப்பட்டாலும், அமைதியாய் என்றுமிருக்கும் கடல் போல அமைதியை அடைய முடியும். இத்தகு ஆசைகளைப் ப+ர்த்தி செய்ய முயற்சி செய்பவனல்ல.

விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஷ்சரதி நி:ஸ்ப்ருஹ:।
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஷாந்திமதிகச்சதி॥ 2.71 ॥


புலன் நுகர்விற்கான ஆசைகள் எல்லாவற்றையும் துறந்துவிட்டவனும், விருப்பங்களற்றவனும், எல்லா உரிமையுணர்வுகளையும் துறந்திருப்பவனும், பொய்த்தன்னுணர்வற்றவனுமான ஒருவனே உண்மை அமைதியை அடைய முடியும்.

ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி।
ஸ்தித்வாஸ்யாமந்தகாலே அபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி॥ 2.72 ॥


எந்நிலையை அடைந்தால் மனிதன் மீண்டும் குழப்பமே அடையமாட்டானோ, அதுவே தெய்வீக ஆன்மீக வழியாகும். இவ்வாறு நிலைபெற்றவன், வாழ்வின் கடைசி நேரத்திலாயினும் கூட, இறைவனின் அரசினைச் சேர்கின்றான்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஸாங்க்யயோகோ நாம த்விதீயோ அத்யாய:॥ 2 ॥



ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஸாங்க்யயோகம்' எனப் பெயர் படைத்த இரண்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.

by uma   on 17 Jan 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.