இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என நியூயார்க் நகரிலிருந்து செயல்படும் சர்வதேச மனித உரிமை அமைப்பு காமன்வெல்த் அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இலங்கை நாட்டு ராணுவத்தினர் பல்வேறு போர்க்குற்றங்களை புரிந்தனர். இது குறித்து வெளிப்படையான விசாரணை வேண்டும் என்று சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே மனித உரிமை மீறல் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லையெனில், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டாம் என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
|