|
|||||
இலங்கைப் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் நடந்த விவாதம்: |
|||||
பா.ஜ.க - யஷ்வந்த் சின்கா: இலங்கைத் தமிழர்களின் மீதான துயரமானது நமது காலக்கட்டத்திலே நடந்துள்ள மிகவும் மோசமான நிகழ்வு ஆகும். இலங்கையில் ராணுவப் பதுங்கு குழியினுள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் சிறுவன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக் கொண்டிருந்த காட்சியும், அதற்குப்பிறகு அவன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுக் கீழே விழுந்து கிடக்கும் காட்சியும் அனைவரையும் உறைய வைக்கின்றன. இலங்கையில் எப்படியான படுகொலைகள் நடந்திருக்கின்றன என்பதை அந்த ஒரே படம் மட்டுமே சொல்லிவிடுகிறது. வன்கொடுமை, மனிதஉரிமை மீறல்கள் மட்டுமல்ல, போர்க்குற்றங்களும் அரங்கேறின. இதை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவில் பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்ற வேளையில், 2009–ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்தகைய தாக்குதல் இலங்கை அரசின் கொள்கையாகி விட்டது. ‘தேவையான போது இந்தியா செயல்படத் தவறி விட்டது. எத்தனையோ உயிர்களை இந்தியாவால் காப்பாற்றி இருக்க முடியும்’ என்று ஐ.நா. மனித உரிமைகள் குழு கூறியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த நேரத்தில், மத்திய அரசு அமைதியாக வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தது. இந்திய அரசியல் கட்சிகளும்கூட கண்டுகொள்ளவில்லை. இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின்மீது இந்தியா வெறுமனே ஓட்டு போடுவதோடு மட்டும் நின்று விடக் கூடாது. அந்த தீர்மானத்தை வரைவதில், முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். இதை அரசு உறுதி செய்ய வேண்டும். சமாஜ்வாடி - முலாயம்சிங்: இலங்கை தமிழர் பிரச்சினையைப் பொறுத்த வரையில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியாக வேண்டும். தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான செயல்களுக்கு எதிராக நீங்கள் எதிர்ப்புத் தெரிவித்தீர்களா? ‘மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும்’ என்று ஜவகர்லால் நேரு கூறி இருக்கிறார். இந்த கொள்கையை மத்திய அரசு பின்பற்றாததன் விளைவுதான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்தக் கதி நேர்ந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் குழப்பம் இருக்கிறது. இதை தெளிவு படுத்துங்கள். (சோனியாகாந்தியை நோக்கி) சோனியாஜி, நீங்கள் ஏன் மவுனம் காக்கிறீர்கள்? உங்களிடம் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக எடுத்த நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்கிற பிரதமரையும், வெளியுறவுத்துறை மந்திரியும் கேளுங்கள். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவுதேவைதான். அதற்காக நமது சொந்த மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உரித்தான விஷயங்களை நாம் எடுத்துச்சொல்லக்கூடாது என்பதல்ல. திரிணாமுல் காங்கிரஸ் - சவுக்கத்தா ராய்: சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலை உயர்வு போன்றவற்றில் அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே நாங்கள் அரசில் இருந்து விலகினோம். நீங்கள் ஏன் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர் விவகாரத்தில் உண்மையிலேயே காங்கிரசுடன் தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும். ராஷ்டிரீய ஜனதாதளம் - லாலு பிரசாத்: இலங்கை தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சி - தாராசிங்: இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இந்த பிரச்சினையை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு, தலையிட வேண்டும்’’ |
|||||
by MAYIL on 08 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|