இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க இரண்டு முறை ஆட்சியை இழந்துள்ளது. இறுதிக்கட்டப் போரில் இலங்கைத் தமிழர்களுக்காக நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது இலங்கை அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் எனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தேன். அந்த உத்தரவாதத்தை இந்திய அரசும், அமெரிக்காவும், நம்பி வரவேற்பு தெரிவித்தது. ஆனால், இறுதியில்தான் இலங்கை அரசு பொய் சொல்லியது தெரிய வந்தது. இதுவும் ஒருவகையில் போர்க்குற்றம்தான், என 2009ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது, தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு கருணாநிதி இவ்வாறு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
|