LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

20 ஆண்டுகளாக ஒரே ஒரு தியேட்டரில் ஓடும் ஷாருக்கான் படம் !!

ஷாரூக்கான், காஜோல் நடிப்பில், கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்க.. 


பாராட்டிலும், வசூலிலும் சாதனை படத்தை இந்த படம் 20 ஆண்டுகளாக ஒரு தியேட்டரில் இன்னமும் ஓடி, உலக சாதனைப் படைத்துள்ளது. 


உலக சினிமா சரித்திரத்தில் தொடந்து 20 ஆண்டுகள் எந்தப் படமும் ஓடியதில்லை. இந்தப் படம் மும்பை மாநிலத்தில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் பகல் காட்சியாக இன்னமும் ஓடிக் கொண்டுள்ளது. கூட்டம் வருகிறதா? என்று நீங்கள் கேட்டால்... வரத்தான் செய்கிறது என்று சொல்கிறார் திரையரங்கு உரிமையாளர். சில தினங்களில் அரங்கு நிறைந்துவிடுவதும் உண்டாம். வெளியூர்களில் இருந்து வரும் ரசிகர்கள் நேராக இந்தப் படத்துக்கு வந்துவிடுகிறார்களாம். 


கடந்த சில வாரங்களாக கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்ததால், படத்தைத் தூக்கிவிடலாமா என்று யோசித்துள்ளது திரையரங்க நிர்வாகம். விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்களும், தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ராவும், படத்தை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்களாம். எனவே தொடர்ந்து படத்தை ஓட்ட மராத்தா மந்திர் முடிவு செய்துள்ளது. 


இந்த செய்தி பரவ ஆரம்பித்ததுமே, படத்துக்கு மேலும் அதிகமாக கூட்டம் வரத் தொடங்கியுள்ளதாம்.  

by Swathi   on 11 Oct 2014  0 Comments
Tags: Dilwale Dulhania Le Jayenge   Srk\\\\\\\'s   Maratha Mandir   ஷாருக்கான்   தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்க..   மராத்தா மந்திர்     
 தொடர்புடையவை-Related Articles
20 ஆண்டுகளாக ஒரே ஒரு தியேட்டரில் ஓடும் ஷாருக்கான் படம் !! 20 ஆண்டுகளாக ஒரே ஒரு தியேட்டரில் ஓடும் ஷாருக்கான் படம் !!
சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவருக்கான விருது ஷாருக்கானுக்கு வழங்கியது பிரிட்டன் அரசு !! சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவருக்கான விருது ஷாருக்கானுக்கு வழங்கியது பிரிட்டன் அரசு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.