ஷாரூக்கான், காஜோல் நடிப்பில், கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்க..
பாராட்டிலும், வசூலிலும் சாதனை படத்தை இந்த படம் 20 ஆண்டுகளாக ஒரு தியேட்டரில் இன்னமும் ஓடி, உலக சாதனைப் படைத்துள்ளது.
உலக சினிமா சரித்திரத்தில் தொடந்து 20 ஆண்டுகள் எந்தப் படமும் ஓடியதில்லை. இந்தப் படம் மும்பை மாநிலத்தில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் பகல் காட்சியாக இன்னமும் ஓடிக் கொண்டுள்ளது. கூட்டம் வருகிறதா? என்று நீங்கள் கேட்டால்... வரத்தான் செய்கிறது என்று சொல்கிறார் திரையரங்கு உரிமையாளர். சில தினங்களில் அரங்கு நிறைந்துவிடுவதும் உண்டாம். வெளியூர்களில் இருந்து வரும் ரசிகர்கள் நேராக இந்தப் படத்துக்கு வந்துவிடுகிறார்களாம்.
கடந்த சில வாரங்களாக கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்ததால், படத்தைத் தூக்கிவிடலாமா என்று யோசித்துள்ளது திரையரங்க நிர்வாகம். விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்களும், தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ராவும், படத்தை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்களாம். எனவே தொடர்ந்து படத்தை ஓட்ட மராத்தா மந்திர் முடிவு செய்துள்ளது.
இந்த செய்தி பரவ ஆரம்பித்ததுமே, படத்துக்கு மேலும் அதிகமாக கூட்டம் வரத் தொடங்கியுள்ளதாம்.
|