|
|||||
பிரமாண்டத்திலும், காட்சியமைப்பிலும் ஷங்கரை யாரும் நெருங்க முடியாது : நான் ஈ பட இயக்குனர் !! |
|||||
நேற்று முன் தினம் வெளியான ஐ படத்தின் பாடல்களும், டீசரும் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஒரு நிமிடத்திற்கு குறைவாக டீசர் ஓடினாலும், அதில், உள்ள பிரம்மாண்டத்தையும், விஷூவல் எஃபெக்ட்ஸ், மேக்கப் இன்னும் பிற விஷயங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. இதுவரை வந்த ஷங்கர் படங்களை விட இந்தப் படத்தின் பிரம்மாண்டமும், தொழில்நுட்ப விஷயங்களும் நமது தமிழ் சினிமாவின் தரத்தை பன்மடங்கு உயர்த்தியிருப்பதாக எண்ணற்ற ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் இந்திய திரையுலகத்தைச் சேர்ந்த பல இயக்குனர்களும் டீஸரைப் பற்றிப் பாராட்டி வருகிறார்கள். அவர்களில் முக்கியமாக குறிப்பிட வேண்டியவர் தென்னிந்தியாவில் ஷங்கருக்கு அடுத்து பிரம்மாண்டத்தில் அசத்தும் 'நான் ஈ' படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தான். 'நான் ஈ' படத்தில் அவருடைய கிராபிக்ஸ், பிரம்மாண்டம் தமிழ் ரசிகர்களையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. தற்போது அனுஷ்கா நடிப்பில் உருவாக்கி வரும் 'பாகுபலி' என்ற பிரம்மாண்ட சரித்திரப் படத்தை இயக்கி வருகிறார். 'ஐ' டீசரைப் பார்த்து விட்டு அவர் கூறியிருப்பதாவது, “ஷங்கர் ஸாரின்......ஐ டீசர்...பிரமிக்க வைக்கிறது, அவரின் பிரம்மாண்டத்திற்கும், காட்சியமைப்பிற்கும், ஒருவரும் பக்கத்தில் கூட நெருங்க முடியாது,” என மனம் திறந்து பாராட்டியுள்ளாராம் ராஜமௌலி. |
|||||
by Swathi on 17 Sep 2014 0 Comments | |||||
Tags: ராஜமௌலி ஷங்கர் ஐ திரைப்படம் Director Rajamouli Shankar Director Shankar | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|