LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அரபிக்கடலில் புயல்: தமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்

அரபிக்கடலில் புயல் உருவாக உள்ளதால், தமிழகத்தில், 7-ந் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அன்று மிக, மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்சமாக 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்யக்கூடும். இதனால் மீனவர்கள் 8-ந் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்திற்கு அதிக மழையைத் தரும்  வடக்கிழக்கு பருவமழை வருகிற 20ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட  நிலையில்,  கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது.  இந்த நிலையில், அரபிக்கடலில் புயல் உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒரு எச்சரிக்கையை மாநில அரசுகளுக்கு விடுத்துள்ளது. அதில்,

 “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில்  இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும். இதே போல கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்யும். இது அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும். 

தெற்கு அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்க செல்ல வேண்டாம். தமிழகம், கேரளாவில் மிக, மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால், 2 மாநிலங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் சென்னையில்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது;

 ‘‘மழை குறித்து அறிவிப்பை மாவட்ட அதிகாரிகளுக்கு 4 வகையான வண்ணத்தில் தெரிவிப்போம். பச்சை என்றால், சாதாரண மழை, மஞ்சள் என்றால் கூர்ந்து கண்காணிக்க வேண்டும், ஆரஞ்சு என்றால் தயாராக இருக்க வேண்டும், சிவப்பு கலர் என்றால் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பொருள்படும்.

அதனால் பயங்கரமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று கூறும்போது மட்டுமே ரெட் அலர்ட் கொடுக்கப்படும்.

இந்த கலர் மாவட்ட அதிகாரிகள் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தைதான். இந்த ரெட் அலர்ட் என்ற வார்த்தை தற்போது தமிழகத்துக்கு பொருந்தாது என்பதே எங்களது கருத்து. ரெட் அலர்ட் என்று கூறினால், பொதுமக்கள் பீதி அடையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது’’ 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

by Mani Bharathi   on 05 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.