|
|||||
தமிழகத்தில் 10- ம் வகுப்பு பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்து கொள்ள 16- ந் தேதி வரை அவகாசம்! |
|||||
தமிழகத்தில் 10- ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், பெயர்த் திருத்தம் செய்து கொள்ள, 16 -ந் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், கூடுதலாக மாணவர்களின் பெயரை சேர்க்கவும், அவசியம் ஏற்பட்டால் நீக்கம் செய்யவும் ஜனவரி மாதம் 27-ந் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிப்ரவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் பெயர்ப் பட்டியலை இஎம்ஐஎஸ் இணையதளத்தில் இருந்து தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள அரசு தேர்வுகள் இணை இயக்குநர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட பெயர்ப் பட்டியலில் பள்ளியின் பெயர், மாணவர்களின் பெயர், முகப்பெழுத்து, பிறந்த தேதி மற்றும் பயிற்று மொழி ஆகியவற்றில் திருத்தம் ஏதுமிருப்பின் அவற்றையும், மாணவர்களின் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகிய விபரங்களையும் மேற்கொள்ள பிப்ரவரி 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கீகாரம் பெறப்படாத புதிய பள்ளிகளின் பெயரில் மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யக்கூடாது. அப்பள்ளிகள் மற்றொரு பள்ளியில் தங்கள் அறிவுரைப்படி மாணவர்களின் பெயரை கூடுதலாக பதிவு செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. |
|||||
by Mani Bharathi on 11 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|