சுவிட்சர்லாந் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை நிறுத்த முடியாததால், மன இறுக்கம் ஏற்பட்டு, தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வு உலக அளவில், ஸ்மார்ட் போனை அதிகமாக பயன்படுத்துபவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து, சுவிட்சர்லாந் போலீசாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சுவிட்சர்லாந்தின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான சுவிஸ் டெலிகாம் என்ற நிறுவனத்தின் உரிமையாளர், கார்சன் ஸ்லோடர். 49 வயதான இவர், தனது தொழில் பல வெற்றிகளை கண்டவர். கடந்த சில வருடங்களாக குடும்ப வாழ்க்கையில் நிம்மதியின்றி தவித்த ஸ்லோடர். 2009ல் தன் மனைவியை விவாகரத்து செய்தார். மேலும் குழந்தைகளையும் பிரிந்து வாழ்ந்தார். இதனால் இவர் ஸ்மார்ட் போனிலேயே தன் முழு கவனத்தையும் மூழ்கடித்தார். இதில் இருந்து மீள பல முறை முயன்றும் அவரால் முடியவில்லை. இதனை அடுத்து ஏற்பட்ட மன இறுக்கத்தால், ஸ்லோடர், தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|