LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

சும்மா நச்சுன்னு இருக்கு - திரை விமர்சனம் !

நடிகர் : தமன் குமார், பவர் ஸ்டார் சீனிவாசன், தம்பி ராமையா, ஈரோடு மகேஷ்

 

நடிகை : விபா நடராஜன், அர்ச்சனா, 

 

இயக்குனர் : ஏ.வெங்கடேஷ்

 

இசை : அச்சு

 

ஓளிப்பதிவு : சி.ஜே.ராஜ்குமார்

 

தயாரிப்பு : பி.விமல்

 

 

படத்தின் ஆரம்பத்தில், குடும்ப சூழ்நிலை காரணமாக 25 லட்சம் ரூபாய் பணத்தை சம்பாரிப்பதற்காக நாயகன் தமன் சென்னைக்கு வேலை தேடி வருகிறார். அப்போது, சாலையில் எதிரே வந்த ஆட்டோ ஒன்றை வழி மறித்து, ஆட்டோவை ஓட்டிவந்த ஈரோடு மகேஷிடம் எடுபுடியாக வேலைக்கு சேருகிறார். வேலைக்கு சேர்ந்தவுடனே ஒரு ஆட்டோவுக்கும் ஓணராகிறார். இவர்கள் ஆட்டோ நிறுத்தும் ஸ்டாண்டின் தலைவராக வருகிறார், தம்பி ராமையா. 

 

ஒரு நாள் இரவில் கதாநாயகி விபாவை நான்கு பேர் கொண்ட கும்பல் துரத்திக்கொண்டு வருகிறது. அந்த கும்பலுடன் நாயகன் தமன் சண்டை போட்டு கொண்டிருக்கும் நிலையில், ஒருவன் நாயகி விபாவின் மீது கல்லை தூக்கி வீச, காயமடைந்த விபாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார் தமன். அப்போது, அவளுக்கு கணவன் என்றும் கையெழுத்து போட்டுவிடுகிறார். ஆனால், மண்டையில் பலத்த அடிப்பட்டதால் நாயகி விபா கோமா நிலைக்கு போய்விடுகிறார். நாயகியின் அப்பாவான டைரக்டர் ஏ.வெங்கடேஷ், மலேசியாவில் பெரிய பணக்காரராக இருக்கிறார். மலேசியாவில் இருந்து ஆஸ்பத்திரிக்கு பதறியடித்து வந்த அவர், தன் மகள் காதலிக்கும் ஆட்டோ டிரைவர் நீ தானா? ஹீரோவிடம் கேட்கிறார். அவர் பெரிய பணக்காரர், ஆள்மாறாட்டம் செய்தால் பணம் கிடைக்கும் என்று நினைத்து தமன், நான் தான் காதலன் என்று கூறுகிறார். அவர்களை மலேசியா வரும்படி வெங்கடேஷ் அழைக்க, தமன் தன்னுடன் ஈரோடு மகேஷ் மற்றும் தம்பி ராமையாவை அழைத்து செல்கிறார்.

 

படத்தின் திருப்பு முனை மலேசியாவில் ஆரம்பிக்கிறது. வெங்கடேஷின் பணத்தை அபகரிக்க நினைக்கும் வில்லனாக வருகிறார் பவர்ஸ்டார். இதற்கும் ஒரு காமெடியான பிளாஷ் பேக். இறுதியில் நாயகி கோமா நிலையில் இருந்து மீண்டாரா? வெங்கடேஷின் பணத்தை பவர் ஸ்டார் அடித்தாரா? அல்லது நாயகன் தமன் அடித்தார ? என்பதே படத்தின் மீதிக்கதை.  

 

படத்தில் புதுமுக நாயகன் தமனின் நடிப்பு அவ்வளவாக பிரதிபலிக்க வில்லை. நாயகியோ எப்போதும் கோமாவில் இருக்கிறார்.

 

பவர் ஸ்டார் மற்ற கதாநாயகர்களை இமிட்டேட் செய்வது ஏதோ சிரிக்க வைக்கிறது. மேலும் தம்பி ராமையா, ஈரோடு மகேஷ், அப்புக்குட்டி போன்ற காமெடி கலைஞர்கள் இருந்து படத்தில் சொல்லிகொள்ளும் படி ஒரு காமெடி கூட இல்லை. 

 

அச்சு இசையில் படத்தின் பாடல்கள் ஹிட் ஆகவில்லை என்றாலும், பரவாயில்லை.

 

மொத்தத்தில் 'சும்மா நச்சுன்னு இருக்கு' ஏதோ இருக்கு.

by Swathi   on 31 Aug 2013  0 Comments
Tags: Summa Nachunu Iruku                    
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.