|
|||||
குழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன் |
|||||
வேலைக்கு போகும் பெற்றோர்கள் கோடையில் குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் சிரமம் இருக்கின்றது, அதனால் சம்மர் கேம்பில் போடுகின்றோம், வேண்டுமானால் பள்ளி கூட மே மாதம் முழுக்க வைத்துவிடுங்கள் என்கின்றார்கள். வீட்டில் தாத்தா பாட்டி இல்லை, வெளியே விடுவதற்கு சம்மதம் இல்லை, வெயிலும் சும்மா இருப்பதில்லை. பெரியப்பா, சித்தப்பா, மாமா என வெளி உலக தொடர்புகள் இல்லை என்ன செய்வது என்று கார்னர் செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களுக்காக ஒரு யோசனை, நிச்சயம் Practically சாத்தியமான விஷயமே. கொஞ்சம் சன்னலை திறந்துவைத்தாலே போதும். மொத்தமாக ஆறு வாரங்கள் விடுமுறை என வைத்துக்கொள்வோம். வீட்டை சுற்றி உங்களைப்போன்ற நண்பர்களை கண்டுபிடியுங்கள். அதாவது கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள், வீட்டில் ஒரு குழந்தையோ இரண்டு குழந்தையோ இருக்கின்ற குடும்பத்தினர். அவர்களும் கோடைக்கு குழந்தையை என்ன செய்வது என தெரியாமல் தத்தளிப்பவர்கள். மொத்தம் 12 பெற்றோர்கள் கணக்கு வந்ததா? ஒவ்வொரு பெற்றோராக மாறி மாறி 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் போதும் மொத்த பிரச்சனையும் தீர்ந்தது. 1. ஆறு வீட்டு குழந்தைகளுக்கு அன்று விடுமுறை எடுத்த பெற்றோரின் வீட்டில் குழுமி காலை முதல் மாலை வரையில் ஒன்றாக நேரம் செலவிடலாம். காலை முதல் மாலைவரையில் ஏதேனும் செய்துகொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. Idleஆக இருக்கட்டும். அதுவே நிறைய சிந்தனைக்கு தீனி போடும். மாலை ஒவ்வொரு பெற்றோரும் வீடு திரும்பும் சமயம் அவரவர் இல்லங்களுக்கு திரும்பலாம். இது சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியம். தங்கள் குழந்தைகளின் விடுமுறையை சிறப்பாக செலவிட மொத்தம் ஒரு பெற்றோர் எடுக்க வேண்டியது மூன்று நாள் விடுமுறை மட்டுமே. திட்டமிட்டால் இன்னும் கச்சிதமாக செயல்படுத்தலாம். - விழியன் |
|||||
by Swathi on 11 Apr 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|