LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    குழந்தை வளர்ப்பு - Bring up a Child Print Friendly and PDF

குழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன்

 

வேலைக்கு போகும் பெற்றோர்கள் கோடையில் குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் சிரமம் இருக்கின்றது, அதனால் சம்மர் கேம்பில் போடுகின்றோம், வேண்டுமானால் பள்ளி கூட மே மாதம் முழுக்க வைத்துவிடுங்கள் என்கின்றார்கள். வீட்டில் தாத்தா பாட்டி இல்லை, வெளியே விடுவதற்கு சம்மதம் இல்லை, வெயிலும் சும்மா இருப்பதில்லை. பெரியப்பா, சித்தப்பா, மாமா என வெளி உலக தொடர்புகள் இல்லை என்ன செய்வது என்று கார்னர் செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களுக்காக ஒரு யோசனை, நிச்சயம் Practically சாத்தியமான விஷயமே. கொஞ்சம் சன்னலை திறந்துவைத்தாலே போதும்.

மொத்தமாக ஆறு வாரங்கள் விடுமுறை என வைத்துக்கொள்வோம். வீட்டை சுற்றி உங்களைப்போன்ற நண்பர்களை கண்டுபிடியுங்கள். அதாவது கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள், வீட்டில் ஒரு குழந்தையோ இரண்டு குழந்தையோ இருக்கின்ற குடும்பத்தினர். அவர்களும் கோடைக்கு குழந்தையை என்ன செய்வது என தெரியாமல் தத்தளிப்பவர்கள். மொத்தம் 12 பெற்றோர்கள் கணக்கு வந்ததா? ஒவ்வொரு பெற்றோராக மாறி மாறி 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் போதும் மொத்த பிரச்சனையும் தீர்ந்தது.

1. ஆறு வீட்டு குழந்தைகளுக்கு அன்று விடுமுறை எடுத்த பெற்றோரின் வீட்டில் குழுமி காலை முதல் மாலை வரையில் ஒன்றாக நேரம் செலவிடலாம். 
2. அந்த விடுமுறை எடுத்த பெற்றோர் ஒருங்கிணைக்கலாம். 
3. தத்தமது வீட்டில் இருந்தோ அல்லது பொதுவாக ஓர் இடத்தில் சமைப்பது குறித்து முடிவெடுக்கலாம்.
4. பொது இடங்களுக்கு அந்த பெற்றோர் அழைத்துச் செல்லலாம் - நூலகம், பூங்கா, கண்காட்சி, கோளரங்கம், வனக்காட்சி சாலை, இப்படி
5. வெயில் கொடுமை அதிமாக இருப்பதால் வீட்டிற்குள்ளேயே விளையாட்டுகள் விளையாடலாம்
6. புத்தகங்களை கூட்டாக வாசிக்கலாம்
7. சில மணி நேரம் நல்ல சினிமா / தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்கலாம்.
8. ஒரு குழந்தை மற்றொரு வீட்டில் ஒருநாள் தங்கி புதிய சூழலைக் கற்க உதவிடலாம்.
9. அதிகாலையிலேயே ஒன்று கூடுதலை துவக்கிடலாம். பூங்காவில் குழுமலாம். ஒன்றாக நடைபயிலலாம். ஒன்றாக உடற்பயிற்சி செய்யலாம்.
10. வீட்டருகே இருக்கும் ஆளுமையை ஒருநாள் வரவழைத்து அவரோடு பேசலாம் /உரையாடலாம்.
11. சிறார் பாராளுமன்ற விளையாட்டினை விளையாடலாம்.
12. ஒன்றாக பாடல்களை மெட்டமைத்து ஒன்றாக பாடலாம்.

காலை முதல் மாலைவரையில் ஏதேனும் செய்துகொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. Idleஆக இருக்கட்டும். அதுவே நிறைய சிந்தனைக்கு தீனி போடும்.

மாலை ஒவ்வொரு பெற்றோரும் வீடு திரும்பும் சமயம் அவரவர் இல்லங்களுக்கு திரும்பலாம். இது சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியம். தங்கள் குழந்தைகளின் விடுமுறையை சிறப்பாக செலவிட மொத்தம் ஒரு பெற்றோர் எடுக்க வேண்டியது மூன்று நாள் விடுமுறை மட்டுமே. திட்டமிட்டால் இன்னும் கச்சிதமாக செயல்படுத்தலாம்.

- விழியன்

by Swathi   on 11 Apr 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்! குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்!
எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால்  முடியும் - ஜான் ஹோல்ட் எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால் முடியும் - ஜான் ஹோல்ட்
பெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள் பெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள்
சமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி சமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி
மொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி? -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு.. மொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி? -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு..
குழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் - விழியன் குழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் - விழியன்
குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் கேட்டு தொந்தரவு செய்வதை எப்படி கையாள்வது? குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் கேட்டு தொந்தரவு செய்வதை எப்படி கையாள்வது?
தமிழை வளர்ப்பதைவிட இப்போது காப்பது அவசியமாகின்றது தமிழை வளர்ப்பதைவிட இப்போது காப்பது அவசியமாகின்றது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.