சூரியனில் இருந்து வெளிப்பட்ட சூரியப் புயல் பூமியை நோக்கி வருவதாகவும், இதனால் பூமிக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும்; தொலைத்தொடர்பு சாதனங்கள் பாதிக்கப் படலாம் என நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூரியனில் சூரியபுயல் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. சூரிய காந்தப் புயல் மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும்.
இந்திய நேரப்படி, நேற்று அதிகாலை சூரியனில் இருந்து வெளிப்பட்ட சூரிய புயல் பூமியை நோக்கி வினாடிக்கு 570 மைல் என்ற வேகத்தில் வருகிறது. சூரிய புயல் பூமியை வந்தடைவதற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவிட்டாலும். உலக நாடுகள் விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ள செயற்கைக்கோள் பாதிப்பிற்கு உள்ளாகும். இதற்கு முன்னரும் சிறிய அளவிலான சூரியப்புயல் பூமியை தாக்கியுள்ளது. இதனால், எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் 1989ம் ஆண்டு ஏற்பட்ட சூரியப்புயல் கனடாவை தாக்கியதில் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
|