அரண்மணை, அரண்மனை-2 போன்ற கமர்சியல் ஹிட் படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் சுந்தர்.சி ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படம் எந்திரன், பாகுபலி, 2.0 போன்று மெகா பட்ஜெட் படமாம். இந்த படத்தை தேனாண்டாள் ஃப்லிம்ஸ் தயாரிக்க போவதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஏழு மாதங்களாக இந்த படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார் சுந்தர்.சி. இது வரலாற்றுக் கதை எனவும், ஏற்கனவே அமெரிக்கா, டென்மார்க் என்று பல நாட்டில் இந்தப் படத்திற்கான அனிமேஷன் வேலைகள் ஆரம்பித்தாகிவிட்டதாகவும் கூறுகிறார். படத்தின் பெயர் சங்கமித்ரா, தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கலாம் என்று கோலிவுட் வட்டாரம் சொல்கிறது. ஆனால் படத்தயாரிப்புக் குழுவிடமிருந்து, நடிகர்கள், படத்தின் பெயர் போன்றவை குறித்த உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. சாபு சிரில் இந்தப் படத்திற்கான ஆர்ட் டைரக்ஷன் பணியைச் செய்கிறார். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணியை பாகுபலி-2, நான் ஈ ஆகிய படங்களில் பணியாற்றிய கமலக்கண்ணன் மேற்கொள்கிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் பத்ரி நாராயணன் என பிரபலமானவர்கள் படத்தின் திரைக்கதையில் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கான அறிவிப்பை அடுத்த மாதத்தில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ள சுந்தர்.சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
|