LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மேடை நாடகங்களில் நடிக்க ஆசைபடும் சூப்பர் ஸ்டார் !!

நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர்களுள் ஒய்.ஜி.மகேந்திரன் குறிப்பிடத்தக்கவர். இவர், சிவாஜி, ரஜினி, கமல், என முன்னணி ஹீரோக்களுடன் காமெடியனாக நடித்து தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்கியவர். இவர் தற்போது, திரைப்படங்களின் முன்னோடியான மேடை நாடகங்களை இயக்கி, நடித்து வருக்கிறார். இவரது நாடகங்களுக்கு இன்று வரை நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.


தற்போது, அவர் சிவாஜியும், தானும் நடித்து, வெற்றி பெற்ற பரீட்சைக்கு நேரமாச்சு என்ற படத்தை நாடகமாக இயக்கி நடிக்க இருக்கிறார். 


இதுபற்றி அவர் கூறியதாவது: கடந்த 1978ம் ஆண்டு என் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி பரீட்சைக்கு நேரமாச்சு நாடகத்தை எழுதி இயக்கினார். அதில் நான் மகனாக நடித்தேன். 


அதன் பிறகு சிவாஜி தந்தையாகவும், நான் மகனாகவும் நடித்து சினிமாவாக வந்தது. இப்போது அந்த நாடகத்தை இந்த காலத்துக்கேற்ப சில மாறுதல்களுடன் நாடகமாக நடத்த இருக்கிறேன்.


வருகிற 14ந் தேதி முதல் 18ந் தேதி வரை வாணி மகாலிலும், 19ந் தேதி முதல் 21ந் தேதி வரை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பிலும் நடக்கிறது. 


இந்த நாடகத்தில், திரை பிரபலங்கள் பலர் நடிக்க இருக்கிறார்கள். அது அவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும். 


தமிழ்நாட்டிலும் ஹீரோக்கள் நாடகத்தில் நடிக்க வந்தால் அவர்கள் திறமையும் வளரும், நாடகமும் வளரும். 


பல மாதங்களுக்கு முன்பு ரஜினியை சந்தித்தபோது நாடகத்தில் நடிக்க ஆசை இருப்பதாக கூறினார். இப்போது அவருக்காக ஒரு நாடக கதை தயார் செய்திருக்கிறேன். 


லிங்கா படப்பிடிப்பு முடிந்ததும் அதை அவருக்கு சொல்வேன். அவருக்கு பிடித்திருந்தால் நடிப்பார் என்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். 

by Swathi   on 13 Sep 2014  0 Comments
Tags: ஒய்.ஜி.மகேந்திரன் நாடகம்   Super Star Rajinikanth   Rajinikanth YG Mahendran   Rajinikanth Dramas           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.