LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஆட்டோ கட்டணத்தை முறைபடுத்தாத தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 10,000 ருபாய் அபராதம் ! 4 வாரங்களுக்குள் கட்டணங்களை முறைபடுத்தவும் உத்தரவு !

தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை இன்னும் நான்கு வாரங்களில் முறைப்படுத்தி நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் 10,000 ருபாய் அபராதமும் விதித்துள்ளது. கடந்த 2007–ம் ஆண்டு முதல் ஆட்டடோ,ரிக்சா கட்டணங்களை தமிழக அரசு முறைப்படுத்தி நிர்ணயிக்காததால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறி, ராமமூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்ததை அடுத்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.கடந்த மே மாதம் 6–ந் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை 2 மாதங்களுக்குள் முறைப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.இந்த வழக்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, ஆனால் ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யாமல் மேலும் இரண்டு மாத கால அவகாசம் கோரியது. இதனை கண்டித்த நீதிபதிகள், அடுத்த 4 வாரங்களுக்குள் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தி நிர்ணயம் செய்யும் படியும், இந்த வழக்கை தொடர்ந்த 

மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் வழங்குமாறு உத்தரவிட்டனர்.

by Swathi   on 22 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.