சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுவாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஓய்வு பெற்றால் புதிய தலைமை நீதிபதியை ஜனாதிபதி நியமனம் செய்வது வழக்கத்தில் உள்ளது.
தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி தீபக் மிஸ்ரா, அக்., 2ல் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை, தற்போதய நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமனம் செய்வதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். ரஞ்சன் கோகாய் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக வரும் அக்டோபர் 3 -ந் தேதி பதவியேற்க உள்ளார்.
|