இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை திருத்தம் செய்யக்கோரி சட்ட மாணவி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.கடந்த 18–ந் தேதி சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேயின் இறுதிச்சடங்கின்போது மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டதற்கு பேஸ்புக் வளைதளத்தில் கருத்து தெரிவித்த மும்பை மாணவிகள் இரண்டு பேரை பால்கர் போலீசார் கைதுசெய்தனர்,இந்த நிகழ்ச்சி நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பு அலையை அடுத்து இரண்டு பெண்களும் விடுதலை செய்யப்பட்டனர்.மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மற்றும் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதனை அடுத்து சட்ட மாணவி ஒருவர் சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66 (ஏ) வை திருத்தம் செய்யும் படி கூறியுள்ளார்.இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
|