வெங்கட்பிரபு சூர்யா இணையும் மாஸ் படத்தின் கதையை பற்றி பல செய்திகள் பிரபல சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து மாஸ் படம் ஒரு சாதாரண மனிதனுக்கும், விண்வெளி மனிதர்களுக்கும் இடையே நடைபெறும் சம்பவங்களை மைய்யமாக வைத்து எடுக்கப்படும் படம் என்றும் படத்தின் சாமான்யனாக வரும் கதாநயகன் சூர்யா வானத்திலிருந்து விழும் ஒரு வேற்று கிரக கல்லின் முன் நிற்க அது அவரைப்போல் காட்சியளித்து அவர் அதை பேய் என்று நினைத்து ஓடுகிறார். இவ்விரண்டு சூர்யாக்களும் அடிக்கும் கூத்தே திரையரங்கம் குலுங்கும் அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேய் படம் என்ற வதந்திகளுக்கு அவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததுக்கு கதையே இது தான் என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம் போலிருக்கிறது.
கதைப் படி மார்ஸ் கிரகத்திலிருந்து அந்த வேற்று கிரகவாசிகள் வருவதால் மாஸ் என்ற டைட்டில் என்று கூட யோசிக்க வைக்கிறது. பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் நடித்த கோய் மில் கயா மற்றும் சமீபத்தில் ஆமிர் கான் நடிப்பில் வெளியான பீகே போன்ற படங்களின் சாயல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|