அஞ்சான் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா இது வரை பார்த்திராத வித்தியாசமான பேய் படமாக உருவாகி வருகிறதாம் மாஸ். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஒரு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு ஜோடியாக ப்ரணிதா நடிக்கிறார்.
மேலும் இவர்களுடன், பிரேம்ஜி, சமுத்திரக்கனி, ஜெயராம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தமிழ் சினிமாவிலேயே முதன் முறையாக 3டியில் படமாக்கப்பட்டு வருகிறதாம் மாஸ். அதனால் படம் 3டியிலே வெளியாகிறது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையையும் ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வாங்கி உள்ளது.
மாஸ் திரைப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிகின்றன.
|