தமிழக சட்டப்பேரவைத் தலைவரால் ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ-க்கள் ஆறு பேரும் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தேர்தல் அலுவலரும், சட்டமன்ற செயலாளருமான ஜமாலுதீன் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடைநீக்கம் செய்யப்பட்ட வி.சி. சந்திர குமார், பார்த்தசாரதி, முருகேசன், நல்லதம்பி, செந்தில்குமார், அருள்செல்வன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருகின்றன. இதனை அடுத்து தேமுதிக எம்.எல்.ஏ-க்கள் ஆறு பேரும் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படலாம் என அஞ்சுவதாக தெரிவித்துள்ள தேமுதிக எம்.எல்.ஏ-க்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான இடைக்கால உத்தரவை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
|