LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 777 - படையில்

Next Kural >

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் - துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக்காரிகை நீர்த்து - கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து. (வையைத்தைச் சூழும் எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல் - அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பரவும் புகழை விரும்பி, உயிரை விரும்பாதார், கழல் கட்டுதல் அழகுடைத்து. இது புகழ் விரும்பும் படை வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
சுழலும் இசை வேண்டி-விண்ணகத்திற்குத் தம்முடன் வராது மண்ணகத்தையே சூழ்ந்து நிற்கும் புகழை விரும்பி; வேண்டா உயிரார்-இங்கு, உடலோடு கூடி உயிர்வாழ விரும்பாத மறவர்; கழல்யாப்புக் காரிகை நீர்த்து-தம் காலில் மறக்கழலைக் கட்டிக் கொள்ளுதல் ஒரு தனியழகு பெறுந்தன்மையதாம். 'சுழலும்' எனவே, அதற்குரிய செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. சூழ்தல் பார் முழுதும் பரவுதல். உருண்டையான தென்று பொருள்படும் உலகம் என்னும் பெயருக்கேற்பச் 'சுழலும்' என்றார். பிற அணிகள் பெண்டிர்க்குப்போல் ஆடவர்க்கு அழகு செய்யாமையின், ஆடவர்க்குச் சிறப்பாக வுரிய மறக் கழலணியைக் 'காரிகை நீர்த்து' என்றார். 'உயிர்' ஆகுபெயர். உயிர்வேண்டார் என்பதை வேண்டா வுயிரார் என்றது செய்யுள் நடை. மறக்கழலை வெண்டையம் என்பது உலக வழக்கு.
கலைஞர் உரை:
சுழலும் இசை வேண்டி-விண்ணகத்திற்குத் தம்முடன் வராது மண்ணகத்தையே சூழ்ந்து நிற்கும் புகழை விரும்பி; வேண்டா உயிரார்-இங்கு, உடலோடு கூடி உயிர்வாழ விரும்பாத மறவர்; கழல்யாப்புக் காரிகை நீர்த்து-தம் காலில் மறக்கழலைக் கட்டிக் கொள்ளுதல் ஒரு தனியழகு பெறுந்தன்மையதாம். 'சுழலும்' எனவே, அதற்குரிய செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. சூழ்தல் பார் முழுதும் பரவுதல். உருண்டையான தென்று பொருள்படும் உலகம் என்னும் பெயருக்கேற்பச் 'சுழலும்' என்றார். பிற அணிகள் பெண்டிர்க்குப்போல் ஆடவர்க்கு அழகு செய்யாமையின், ஆடவர்க்குச் சிறப்பாக வுரிய மறக் கழலணியைக் 'காரிகை நீர்த்து' என்றார். 'உயிர்' ஆகுபெயர். உயிர்வேண்டார் என்பதை வேண்டா வுயிரார் என்றது செய்யுள் நடை. மறக்கழலை வெண்டையம் என்பது உலக வழக்கு.
சாலமன் பாப்பையா உரை:
சுழலும் இசை வேண்டி-விண்ணகத்திற்குத் தம்முடன் வராது மண்ணகத்தையே சூழ்ந்து நிற்கும் புகழை விரும்பி; வேண்டா உயிரார்-இங்கு, உடலோடு கூடி உயிர்வாழ விரும்பாத மறவர்; கழல்யாப்புக் காரிகை நீர்த்து-தம் காலில் மறக்கழலைக் கட்டிக் கொள்ளுதல் ஒரு தனியழகு பெறுந்தன்மையதாம். 'சுழலும்' எனவே, அதற்குரிய செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. சூழ்தல் பார் முழுதும் பரவுதல். உருண்டையான தென்று பொருள்படும் உலகம் என்னும் பெயருக்கேற்பச் 'சுழலும்' என்றார். பிற அணிகள் பெண்டிர்க்குப்போல் ஆடவர்க்கு அழகு செய்யாமையின், ஆடவர்க்குச் சிறப்பாக வுரிய மறக் கழலணியைக் 'காரிகை நீர்த்து' என்றார். 'உயிர்' ஆகுபெயர். உயிர்வேண்டார் என்பதை வேண்டா வுயிரார் என்றது செய்யுள் நடை. மறக்கழலை வெண்டையம் என்பது உலக வழக்கு.
Translation
Who seek for world-wide fame, regardless of their life, The glorious clasp adorns, sign of heroic strife.
Explanation
The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).
Transliteration
Suzhalum Isaiventi Ventaa Uyiraar Kazhalyaappuk Kaarikai Neerththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >