தேவையானவை :
புழுங்கல் அரிசி - 1 கப் தேங்காய் - 1 கப் சர்க்கரை - தேவையானளவு நெய் - சிறிது
செய்முறை :
1.அரிசியை ஊறப் போட்டுப் பின்பு உலர வைத்துக் கொள்ள வேண்டும் .
2. அதை அரைத்து மாவாக்கிக் கொள்ள வேண்டும் .அதில் தேவையான அளவு வெந்நீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும் . பிசைந்த மாவை இடியாப்பக் குழலில் போட்டுப் இட்லி தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்கவேண்டும் .
3. இடியாப்பம் வெந்ததும் ஒரு தட்டில் எடுத்து உதிர்த்து அத்துடன் சர்க்கரை, நெய் தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கிளறி விடுங்கள். விரும்பினால் அதில் தேங்காய் பால் சேர்த்தும் சாப்பிடலாம் .
|