நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றவற்றை ஒழிப்பதற்காக, சுவிட்சர்லாந்து நாட்டு அரசு ஒரு புரட்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் படி, பொது மக்கள் அனைவருக்கும், அதாவது, ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி, ஒவ்வொருவருக்கும், இந்திய மதிப்பில் 1.70 லட்ச ரூபாய் ஆண்டு ஊதியமாக சுவிட்சர்லாந்து அரசு வழங்க உள்ளது. இந்த உதவித்தொகையை பெறுவதற்கு, குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும்; குற்றப்பின்னணி ஏதும் இருக்கக்கூடாது. இந்த உதவி தொகையை, 1.92 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும், என, ஒரு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்."குறைந்தபட்ச மாத வருமானம் கிடைத்தால், குழந்தைகளின் கல்வித்தரம் உயரும்; நோயாளிகள் நல்ல மருத்துவ சிகிச்சையை பெற முடியும். அனைத்து நாடுகளிலும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், அந்நாட்டில் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்க முடியும்' என, நிபுணர்கள் கருதுகின்றனர். ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை, பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் வரவேற்றுள்ளனர். உலக பணக்கார நாடுகளுள் சுவிட்சர்லாந்து நாடும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது.
|