|
|||||
ரசாயன ஆயுதங்களை ஒழிக்க, இன்னும் ஒரு ஆண்டு காலம் ஆகும் - சிரியா அதிபர் !!! |
|||||
சிரியாவின் ரசாயன ஆயுதங்களை ஒழிக்க, ஒரு ஆண்டு காலம் ஆகும் எனவும், அதற்கு 1 பில்லியன் டாலர் செலவாகும் என சிரியா நாட்டு அதிபர், பஷார் அல்-அஸாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த ஆகஸ்ட் 21 -ந்தேதி டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் நடத்தப்பட்ட, ரசாயன ஆயுத தாக்குதலில் “சரின்” வாயு பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராகப் போராடி வரும் பயங்கரவாதிகள்தான் அந்தத் தாக்குதலை நடத்தினர். அதற்கான ஆதாரம் சிரியா அரசிடம் உள்ளது. பயங்கரவாதிகள் ஆதிக்க பகுதியில் இருந்து ரசாயன குண்டுகளை தாங்கிய ராக்கெட்டுகள் ஏவப்பட்டிருப்பது ரஷிய செயற்கைக்கோள் பதிவில் நிரூபணமாகியுள்ளது.
இந்த காரணத்தால்தான், ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில்கூட யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடவில்லை. வெறும் வீடியோ ஆதாரத்தை வைத்து அரசு மீது குற்றம் சாட்டுவது ஏற்கத்தக்கதல்ல. இணையதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் போலியாக பல்வேறு காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுவாக “சரின்” வாயுவை யார் வேண்டுமானாலும் சமையல் அறையிலேயே உற்பத்தி செய்ய முடியும். இதுதவிர பயங்கரவாதிகளுக்கு பல்வேறு அரசுகள் உதவி செய்கின்றன. அவர்கள்கூட பயங்கரவாதிகளுக்கு ரசாயன ஆயுதங்களை அளித்திருக்கலாம். இந்தப் பின்னணியில் ரசாயன தாக்குதலை நடத்தியது பயங்கரவாதிகள்தான் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியும்.
சிரியா அரசு, அமெரிக்கா, ரஷியா இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டை முழுமனதுடன் நிறைவேற்றுவோம். எங்களிடம் உள்ள ரசாயன ஆயுதங்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம். அந்த ஆயுதங்களை அழிக்க ஓராண்டு வரை ஆகும் என சிரியா நாட்டு அதிபர், பஷார் அல்-அஸாத் தெரிவித்துள்ளார். |
|||||
by Swathi on 20 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|