நான்காவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 7-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள போட்டியை நடத்தும் இலங்கையும், ஜிம்பாப்வேயும் விளையாடின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, இலங்கையை பேட் செய்ய அழைத்தது. இலங்கையின் தில்ஷானும், முனவீராவும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஜார்விஸ் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து கணக்கைத் தொடங்கினார் முனவீரா. தொடர்ந்து ஆடிய முனவீரா, 17 ரன்களில் ரன் அவுட் ஆனார். மறுபுறம் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷான், 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் குவித்தார். அவரது விக்கெட்டை கிரீமர் கைப்பற்றினார். 13 ரன்கள் மட்டுமே எடுத்த கேப்டன் ஜெயவர்தனே ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே அணியால் 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது இலங்கை அணி சார்பில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய அஜந்தா மென்டிஸ்க்கு வழங்கப்பட்டது.
நான்காவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 7-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள போட்டியை நடத்தும் இலங்கையும், ஜிம்பாப்வேயும் விளையாடின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, இலங்கையை பேட் செய்ய அழைத்தது. இலங்கையின் தில்ஷானும், முனவீராவும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஜார்விஸ் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து கணக்கைத் தொடங்கினார் முனவீரா. தொடர்ந்து ஆடிய முனவீரா, 17 ரன்களில் ரன் அவுட் ஆனார். மறுபுறம் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷான், 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் குவித்தார். அவரது விக்கெட்டை கிரீமர் கைப்பற்றினார். 13 ரன்கள் மட்டுமே எடுத்த கேப்டன் ஜெயவர்தனே ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே அணியால் 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது இலங்கை அணி சார்பில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய அஜந்தா மென்டிஸ்க்கு வழங்கப்பட்டது.
|