LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- மூக்கு பராமரிப்பு(Nose Care)

மூக்கின் மேல் ஒரு கண் வைங்க !

 

1. பல்லில் உண்டாகும் சொத்தைக்கும், சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்து வைப்பது அவற்றின் இருப்பிட அமைப்பு தான். பற்களின் வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன. பல்லில் உண்டாகும் சொத்தை மேலும் வளரும் பட்சத்தில் அது பல்லின் வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.
 
2.அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ் தேங்க ஆரம்பித்துவிடும். இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்து விடும். பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படித்தான். பல்சொத்தை மட்டுமல்ல, ஏதோ காரணத்துக்காக பல்லை பிடுங்கும்போதும் உஷாராக இருக்க வேண்டும் இல்லையென்றாலும் கஷ்டம்தான்.
 
3.பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையை பாதித்து விடக்கூடாது. விபத்துக்களின்போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தை குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளை சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவை கொண்டுவரும் வாய்ப்பு இருக்கிறது.
 
4.சைனஸ் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக விடுபட சிகிச்சை முறைகள் இருக்கிறது. சைனஸ் பிரச்சினையை நாங்கள் இண்டு வகையாக எடுத்துக்கொள்கிறோம். ஒன்று திடீர் திடீரென்று வந்து போகும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று நிரந்தரமான ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்தி விடலாம்.
 
5.மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும். ஆனால் சைனஸ் பிரச்சினையை பொருட்படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் கட்டுப்படுத்த இயலும்.
 
6.பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால் தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை டர்பனேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். ஆனால் இதெல்லாம் சாதாரண காரியமில்லை. இப்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத் துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன.
 
7.பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடிகிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை. முன்பெல்லாம் சைனஸ் பிரச்சினை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது.
 
8.மூக்குக்கு உள்ளே சிரிஞ்ச் வாயிலாக நீரை பீய்ச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும். உள்ளே தேங்கிக் கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்துவிடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு விடும் என்றாலும் இதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது.
 
9.அடுத்து எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம் என்பது ஒருபுறமிருக்க அப்படி வந்தால் மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்த சிக்கலுக்கும் தீர்வு கண்டாகி விட்டது. மூடப்பட்ட கதவை திறந்தாலே உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறிவிடும் அல்லவா?
 
10.அந்த கதவை சரியான அளவில் சரியான அளவில் திறந்து வைப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்குது, அவற்றில் இருப்பது சளிதானா அல்லது சீழா? என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகி விட்டது.
 
11.சைனஸ் அறையில் செய்யப்படும் அறுசை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டியிருக்குமா? அது தழும்புகளை உண்டாகும் அளவுக்கு இருக்குமா? அதற்கெல்லாம் அவசியமே இல்லை. அறுவை சிகிச்சை கருவிகளை கையாள மூக்குக்கு உள்ளேயே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது.
 
12.அப்படியில்லை என்றால் வாய்வழியாக கூட சைனஸ் அறைகளை அடைந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். எத்மாய்டு அல்லது பிரண்ட்ஸ் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே. தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாக கிழிக்க வேண்டியிருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாக தெரியாத அளவுக்கு மிகமிக சிறியதாக இருக்கும். கவலையே வேண்டாம்.
 
13.சைனஸ் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் விட்டால் விபரீதமாகிவிடும் என்று சொல்லியிருக்கிறீர்கள் டாக்டர். அப்படியென்ன விபரீதங்கள் நேரும்?
 
14.கண்பார்வை குறைபாடுகள்தான் முதலும் முக்கியமான விபரீதம். இந்த சைனஸ் அறைகளுக்கு மிக அருகில்தான் கண்கள் இருக்கின்றன. என்பதால் அறைகள் பாதிப்புக்குள்ளாகும் பட்சத்தில் அது கண்களையும் பாதிக்கலாம். இப்படி ஒரு கண்ணின் பார்வையை பறிகொடுத்த நோயாளியை சமீபத்தில்கூட சந்தித்தேன்.
 
15.சைனஸ்தானே அது போய் என்ன பண்ணிடும் என்று அலட்சியமாக இருந்துட்டேன் டாக்டர் என்று கதறினார்  அவர். சிலருக்கு கண்பார்வையை சுற்றி சீழ்பிடித்து இரண்டு கண்களுக்கும் இடையேயான ஒருங்கிசைவு பாதிக்கப்பட்டு இரட்டை பார்வை சிக்கல் நேரலாம். இது கொஞ்சம் விபரீதமானதுதான். ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு இமேஜ் தெரிந்தால் குழப்பம் ஏற்பட்டு அதனால் உண்டாகும் மனஉளைச்சலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
16.பிரன்டல் சைனஸ் அறைகளும் எத்மாய்டு சைனஸ் அறைகளும் மூளைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கின்றன. இவற்றில் ஏதாவது பாதிப்பு என்றாலும் அது மூளை வரை பரவி மூளைக் காய்ச்சல் வரலாம். அது மட்டுமல்ல... உயிருக்கே கூட அது ஆபத்தை உண்டாக்கலாம். மூக்கு என்பது சுவாசிப்பது, வாசனையை அறிவது போன்ற விஷயங்களுக்கு மட்டுமே உதவக்கூடிய உறுப்பு அல்ல. மருத்துவ சிகிச்சை முறைகளில் அதற்கு மகத்தான ஓர் இடம் இருக்கிறது.

1. பல்லில் உண்டாகும் சொத்தைக்கும், சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்து வைப்பது அவற்றின் இருப்பிட அமைப்பு தான். பற்களின் வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன. பல்லில் உண்டாகும் சொத்தை மேலும் வளரும் பட்சத்தில் அது பல்லின் வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.

 

2.அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ் தேங்க ஆரம்பித்துவிடும். இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்து விடும். பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படித்தான். பல்சொத்தை மட்டுமல்ல, ஏதோ காரணத்துக்காக பல்லை பிடுங்கும்போதும் உஷாராக இருக்க வேண்டும் இல்லையென்றாலும் கஷ்டம்தான்.

 

3.பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையை பாதித்து விடக்கூடாது. விபத்துக்களின்போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தை குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளை சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவை கொண்டுவரும் வாய்ப்பு இருக்கிறது.

 

4.சைனஸ் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக விடுபட சிகிச்சை முறைகள் இருக்கிறது. சைனஸ் பிரச்சினையை நாங்கள் இண்டு வகையாக எடுத்துக்கொள்கிறோம். ஒன்று திடீர் திடீரென்று வந்து போகும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று நிரந்தரமான ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்தி விடலாம்.

 

5.மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும். ஆனால் சைனஸ் பிரச்சினையை பொருட்படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் கட்டுப்படுத்த இயலும்.

 

6.பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால் தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை டர்பனேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். ஆனால் இதெல்லாம் சாதாரண காரியமில்லை. இப்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத் துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன.

 

7.பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடிகிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை. முன்பெல்லாம் சைனஸ் பிரச்சினை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது.

 

8.மூக்குக்கு உள்ளே சிரிஞ்ச் வாயிலாக நீரை பீய்ச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும். உள்ளே தேங்கிக் கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்துவிடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு விடும் என்றாலும் இதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது.

 

9.அடுத்து எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம் என்பது ஒருபுறமிருக்க அப்படி வந்தால் மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்த சிக்கலுக்கும் தீர்வு கண்டாகி விட்டது. மூடப்பட்ட கதவை திறந்தாலே உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறிவிடும் அல்லவா?

 

10.அந்த கதவை சரியான அளவில் சரியான அளவில் திறந்து வைப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்குது, அவற்றில் இருப்பது சளிதானா அல்லது சீழா? என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகி விட்டது.

 

11.சைனஸ் அறையில் செய்யப்படும் அறுசை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டியிருக்குமா? அது தழும்புகளை உண்டாகும் அளவுக்கு இருக்குமா? அதற்கெல்லாம் அவசியமே இல்லை. அறுவை சிகிச்சை கருவிகளை கையாள மூக்குக்கு உள்ளேயே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது.

 

12.அப்படியில்லை என்றால் வாய்வழியாக கூட சைனஸ் அறைகளை அடைந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். எத்மாய்டு அல்லது பிரண்ட்ஸ் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே. தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாக கிழிக்க வேண்டியிருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாக தெரியாத அளவுக்கு மிகமிக சிறியதாக இருக்கும். கவலையே வேண்டாம்.

 

13.சைனஸ் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் விட்டால் விபரீதமாகிவிடும் என்று சொல்லியிருக்கிறீர்கள் டாக்டர். அப்படியென்ன விபரீதங்கள் நேரும்?

 

14.கண்பார்வை குறைபாடுகள்தான் முதலும் முக்கியமான விபரீதம். இந்த சைனஸ் அறைகளுக்கு மிக அருகில்தான் கண்கள் இருக்கின்றன. என்பதால் அறைகள் பாதிப்புக்குள்ளாகும் பட்சத்தில் அது கண்களையும் பாதிக்கலாம். இப்படி ஒரு கண்ணின் பார்வையை பறிகொடுத்த நோயாளியை சமீபத்தில்கூட சந்தித்தேன்.

 

15.சைனஸ்தானே அது போய் என்ன பண்ணிடும் என்று அலட்சியமாக இருந்துட்டேன் டாக்டர் என்று கதறினார்  அவர். சிலருக்கு கண்பார்வையை சுற்றி சீழ்பிடித்து இரண்டு கண்களுக்கும் இடையேயான ஒருங்கிசைவு பாதிக்கப்பட்டு இரட்டை பார்வை சிக்கல் நேரலாம். இது கொஞ்சம் விபரீதமானதுதான். ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு இமேஜ் தெரிந்தால் குழப்பம் ஏற்பட்டு அதனால் உண்டாகும் மனஉளைச்சலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.


16.பிரன்டல் சைனஸ் அறைகளும் எத்மாய்டு சைனஸ் அறைகளும் மூளைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கின்றன. இவற்றில் ஏதாவது பாதிப்பு என்றாலும் அது மூளை வரை பரவி மூளைக் காய்ச்சல் வரலாம். அது மட்டுமல்ல... உயிருக்கே கூட அது ஆபத்தை உண்டாக்கலாம். மூக்கு என்பது சுவாசிப்பது, வாசனையை அறிவது போன்ற விஷயங்களுக்கு மட்டுமே உதவக்கூடிய உறுப்பு அல்ல. மருத்துவ சிகிச்சை முறைகளில் அதற்கு மகத்தான ஓர் இடம் இருக்கிறது.

by sandhiya   on 07 Jun 2012  0 Comments
Tags: மூக்கு   Nose   Mooku              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
அலர்ஜி, தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கு அடைப்பு, ஆஸ்துமா குணமாக | Sneezing and runny nose அலர்ஜி, தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கு அடைப்பு, ஆஸ்துமா குணமாக | Sneezing and runny nose
மனித கொழுப்பில் இருந்து காது, மூக்கு தயாரித்து இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை !! மனித கொழுப்பில் இருந்து காது, மூக்கு தயாரித்து இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை !!
மூக்கில் சளி ஒழுகுவதை நிறுத்த !! - ஹீலர் பாஸ்கர் மூக்கில் சளி ஒழுகுவதை நிறுத்த !! - ஹீலர் பாஸ்கர்
பெண்களை விட ஆண்களின் மூக்கு அளவில் பெரிதாக இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? பெண்களை விட ஆண்களின் மூக்கு அளவில் பெரிதாக இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?
மூக்கின் மேல் ஒரு கண் வைங்க ! மூக்கின் மேல் ஒரு கண் வைங்க !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.