பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு, உயிர்பிழைத்த மாணவி மலாலாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் புத்தகமாக வெளிவருகிறது உள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்காக போராடிய மாணவி மலாலா, கடந்த 2009ல், அந்நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதி பெண்களின் வாழ்க்கை மற்றும் தலிபான்களின் அடக்குமுறை பற்றி, உருது மொழியில், பி.பி.சி.,யின் இணையதளத்தில், கட்டுரை எழுதினாள்.புனைப்பெயரில் அவள் எழுதிய கட்டுரை பிரபலமடைந்ததை அடுத்து, மலாலாவின் அடையாளத்தை தெரிந்து கொண்ட தலிபான்கள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், துப்பாக்கியால் சுட்டனர்.படுகாயமடைந்த மலாலா, பிரிட்டன் மருத்துவமனையில், சிகிச்சை பெற்றாள். பர்மிங்ஹாமில் உள்ள பள்ளியில் தற்போது, பள்ளி படிப்பை தொடர்கிறாள். மலாலாவின் போரட்ட வாழ்க்கையை, புத்தகமாக வெளியிட, பிரிட்டனை சேர்ந்த, "வீடன்பெல்ட் அண்ட் நிக்கல்சன்' மற்றும் லிட்டில் பிரவுன் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளது. இதற்காக, 16 1/2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது."நான் மலாலா' என்ற பெயரில் இந்த புத்தகம் வெளியாக இருக்கிறது.
|