கொலை குற்ற வழக்கில், கொலையாளிகளை, கிளி ஒன்று காடிக்கொடுத்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பு கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகே வசிக்கும், விஜய் சர்மா என்பவர், கடந்த திங்கள் கிழமை அன்று வெளியூர் சென்றிருந்தபோது, அவரின் மனைவி நீலம் மற்றும் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதை அந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் கிளி பார்த்துள்ளது.
இந்த கொலைக்குப் பிறகு, அந்த கிளி, சரியாக சாப்பிடாமலும், ஓய்வு எடுக்காமலும், அங்கும், இங்கும், ஆவேசமாக பறந்து கொண்டிருந்தது.
இதை கவனித்த விஜய் சர்மா, கொலையாளிகளை, கிளி பார்த்திருக்கலாம் என்ற சந்தேகம் அடைந்தார். கிளியின் அருகில் சென்று, அவர் வீட்டுக்கு வழக்கமாக வரும் நபர்களின் பெயர்களை, ஒவ்வொன்றாக, விஜய் சர்மா கூறி வந்தார். அப்போது, "அஷு' என்ற நபரின் பெயரை சொன்னதும், அந்த கிளி, அந்த பெயரை பல முறை திரும்பத் திரும்ப கூறியது. இதனால், அஷு தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என்ற முடிவில், போலீசாரிடம், விஜய் சர்மா கூறினார்.
போலீஸ் விசாரணையில், அஷு தான் உண்மையான கொலையாளி என்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த கொலை நீண்ட கால சொத்து தகராறின் காரணமாக நிகழ்ந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
|