LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

செம்மொழிக்கான 11 தகுதிகளும் முழுமையாக பொருந்தும் ஒரே மொழி.. தமிழ் செம்மொழியான நாள் சூலை 6!

செம்மொழிக்கான 11 தகுதிகளும் முழுமையாக பொருந்தும் ஒரே மொழி.. தமிழ் செம்மொழியான நாள் சூலை 6!

 

 தமிழ் மொழி உலக செம்மொழியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நாள் இன்று. 2004ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

 

ஒரு மொழி செம்மொழியாக கீழ்காணும் 11 தகுதிகளை அறிஞர்கள் வரையறுத்துள்ளனர்.

 1.தொன்மை 

 2. தனித்தன்மை,

3. பொதுமைப்பண்பு,

4. நடுநிலைமை,

5. கிளைமொழிகளின் தாய்,

6. பட்டறிவு இலக்கியங்கள்,

7.பிறமொழித்தன்மை,

8. சமயச் சார்பு,

9. உயர்சிந்தனை,

10. கலை,

11. மொழிக் கோட்பாடுகள்

 

என்பனவாகும். இந்த பதினொரு தகுதிகளுள் முற்றிலும் பொருந்தக்கூடிய ஒரே மொழியாகத் 'தமிழ் மொழி' திகழ்கின்றது.

மேலும்கீழ்காணும் செம்மொழித் தகுதிகளனைத்தும் பொருந்தி அமைந்திருப்பதால் தமிழ் செம்மொழியாயிற்று .

 

  • மனித நாகரீகம் தோன்றிய பகுதியில் முதலில் தோன்றிய தொன்மை.
  • 2500 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணமும் அதற்கு முன்னரே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கியமும் தோன்றிய மொழி.
  • மனித வாழ்வைச் சாதி, மதங்கொண்டு பிரிக்காமல் அகம்புறமெனப் பிரித்த பொதுமை. குறிப்பிட்ட எச்சாராரையும் சாராமை, தமிழ், தமிழர் என்று கூடத் குறிப்பிடாத சார்பின்மை கொண்ட நடுநிலைமை.
  • தென்மொழிகளுக்கு மட்டுமின்றி, பிராகூயி போன்ற வடமொழிகளுக்கும் தாய்மொழி எனும் தலைமை.
  • பிறமொழிகளில் கற்பனைப் படைப்புகளேயிருக்க, தமிழிலோ மனிதர்களே இலக்கியங்களில் வாழ்கின்றனர். அவர்தம் அனுபவங்களே பேசப்பட்டுள்ளன.
  • தொல் இலக்கியங்களில் பிறமொழித் தாக்கம் இருந்ததில்லை.
  • சங்க இலக்கியத்தின் சமயச் சார்பில்லாத தன்மை.
  • உலகினைப் பொதுத்தன்மையில் பார்க்கும் தனித்தன்மையே உயர்சிந்தனை.
  • இயல், இசை, நாடகம் எனும் பிரிவும், குடிமக்களையும் காப்பிய நாயகர்களாக்கிய உயர்வும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இலக்கியங்களிலிருந்தும், தமிழ்மொழி வழக்குகளிலிருந்தும் கோட்பாடுகளை வகுத்துத் தொல்காப்பியம் இயற்றப்பட்டது.
by Swathi   on 06 Jun 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.