தமிழ் எழுத, படிக்க தெரியாத, தமிழக பள்ளிகளில் பயிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, தமிழக கல்வித் துறை முடிவு செய்துள்ளது உள்ளது.
இன்றைய தமிழகத்தில், உயர் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. இது குறித்து ஆய்வு நடத்திய பள்ளிக்கல்வித் துறை, மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டு, அதற்காக செயல்முறை புத்தகங்களையும் வடிவமைத்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், மூன்று தமிழாசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள், அந்தந்த மாவட்டங்களில், மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு, செயல்முறை புத்தக பாட அடிப்படையில், பயிற்சியளிக்க உள்ளனர். இந்த சிறப்பு திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.
|