கம்பம் நகரில் மாலை 4.30 மணி அளவில் தமது 88 ஆவது வயதில் மரணமடைந்திருக்கிறார், தமிழக நூலகத் துறையின் முன்னோடி டாக்டர். வே.தில்லைநாயகம்.
1982 இல் இவர் எழுதிய “இந்திய நூலக இயக்கம்" நூலைப் பாராட்டி உலகப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. இவரது, "இந்திய அரசமைப்பு" நூல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசினைப் பெற்றது. மேலும், நூலக உணர்வு (1971), வள்ளல்கள் வரலாறு (1975), இந்திய நூலக இயக்கம் (1978) முதலிய நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் முதல் பரிசு கிடைத்துள்ளது.
நூலகவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகராக 1949இல் பொறுப்பு வகித்தார். 1962ல் கன்னிமாரா பொதுநூலகத்தில் நூலகரானார். தமிழக அரசு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக 1972ல் சேர்ந்தார். 1982ல் ஓய்வு பெற்றார். 10 ஆண்டுகள் இயக்குநராக ஒரே துறையில் தொடர்ந்து இருந்திகிறார். பல தேசிய, மாநில பல்கலைக்கழக நூலகக் குழுக்களில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
|