LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ் கையெழுத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ்., வழிகாட்டும் மக்கள் பாதை அமைப்பு கின்னஸ் சாதனை!

தமிழ் கையெழுத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை அமைப்பு கின்னஸ் சாதனை படைத்து உள்ளது.

சமூக மாற்றம் ஏற்பட்டால் அரசியல் மாற்றம் தானாக நிகழும் என்று கூறி 'மக்கள் பாதை' என்னும் அமைப்பைத்  தொடங்கி,  சகாயம் ஐ.ஏ.எஸ், சமூக மாற்றத்திற்கான பணிகளை சகாயம் செய்து கொண்டு இருக்கிறார்.

மக்கள் பாதை அமைப்பு சமூக மாற்றத்திற்காகவும், எளியோரின் வாழ்வை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் உங்களுக்கு எது முக்கியம்- ஐ.ஏ.எஸ். பதவியா அல்லது தமிழா என்று கேட்டால் தமிழ்தான் முக்கியம் என்று கூறியவர் சகாயம் ஐ.ஏ.எஸ். ஆங்கில மோகத்தால், தமிழின் அழிவைக் கண்டு வருந்தி,  தமிழை மீட்டெடுக்கும் முயற்சியாக மக்கள் பாதை திட்டங்களில் ஒன்றான "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்று ஒரு  திட்டத்தின் கீழ் தமிழ் கையெழுத்து இயக்கத்தை நடத்தத் தொடங்கினார்.

தன் பெயரை தமிழில் கையெழுத்து இடுவதைக் கூட அவமானமாக கருதும் தலைமுறைக்கு, தமிழில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல தன்மானம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த இயக்கத்தின் தோக்கமாக அமைந்தது.

உலகின் மூத்த குடிமக்கள் தமிழ் மக்கள், உலகின் மூத்த மொழி மட்டுமல்லாமல் முதன்மை மொழியான தமிழ் மொழியின் பெருமையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதமாக தமிழ் கையெழுத்து இயக்க விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. 

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எஸ்.ஐ.ஜி.ஏ. தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ் கையெழுத்து  திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழ்ச் சான்றோர்களின் வழித்தோன்றல்கள், தமிழ் மீது பற்றுக் கொண்டவர்கள், பொதுமக்கள் என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

மக்கள் பாதை அமைப்பின் தலைவர் நாகல்சாமி ஐ.ஏ.எஸ். தலைமையில், மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டியான சகாயம் ஐ.ஏ.எஸ். முன்னிலையில் இந்த விழா நடந்தது.

இதில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விருந்தினர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திடுவோம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தமிழ் கையெழுத்து கின்னஸ் சாதனை முயற்சியும் மேற்கொண்டனர். இதில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமிழில் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் கின்னஸ் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியின் காணொலிப் பதிவை ஆய்வு செய்து, மக்கள் பாதையின் அதிகமானோர் தமிழில் கையெழுத்திடும் முயற்சியை கின்னஸ் சாதனையாக அங்கீகரித்து உள்ளனர். 

கின்னஸ் சாதனை படைத்ததற்கான சான்றிதழை மக்கள் பாதை அமைப்பிடம் அளித்துள்ளனர்.  சகாயம் ஐ.ஏ.எஸ். சிந்தனையில் தோன்றிய இம்முயற்சியால் தமிழ் மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் கொண்டு செல்லப்பட்டு உள்ளது என்றால் அதில் மிகையில்லை.

by Mani Bharathi   on 20 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.