LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- சிங்கப்பூர்

தமிழ் சாகாது இங்கே! மொழி வளர்ச்சியில் இளையர் பங்கு! -- முனைவர் மன்னை இராஜகோபாலன்

"சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். ஆனாலும் மாணவர்களிடம் போட்டிகளில் பங்கேற்கும் பேரார்வம் தற்போது அதிகம் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் இளையர்கள் மேற்கோள்களாக திருக்குறளையும் ஔவைப் பாடல்களையும் அறநெறிக் கருத்துகளையும் தன் உரைக்குச் சான்றாக, ஆதாரங்களாக எடுத்து விளக்கிப் பேசுவதை அதிகமாகக் காணமுடிகிறது. இத்தகைய விழுமியங்களைப் பிஞ்சு நெஞ்சில் விதைக்கவும் ஆரோக்கியமான மனநிலையை இளையர்களிடம் வளர்க்கவும் இப்போட்டிகள் உபாயமாகின்றன. பாட்டுப் போட்டிகளில் பத்துவயதுப் பிள்ளைகள்கூட 1950களில் வெளிவந்தப் பாடல்களை ரசித்து உள்வாங்கி பாவனை வெளிப்படப் பாடுகிறார்கள். இந்நிலை ‘இறைச்சல்தான் இசை’ என்னும் இன்றைய மனப்போக்கை மாற்ற உதவும் என்று கருதுகிறேன். நுண்கலைகளைக் ( Fine arts) கற்போர் எண்ணிக்கை கூடியுள்ளதும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். பாட்டு, பேச்சு, நடிப்புப் போட்டிகள் எதுவாயினும் கலையை கலையாக மட்டும் கருதும் மேற்கத்திய நிலையில் ‘கலா லாவண்யம்’ மட்டுமே முதன்மையாகிறது. ஆனால் எந்த கலையாயினும் அதன் வழி அறக்கோட்பாட்டைக் கலந்தே கொடுக்கும் நம் தமிழ்ச் சமூகத்தில் அத்தனையும் விதையாய் இளையோர் மனங்களில் விழுகிறது. போட்டிகள் வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதும் சாந்த நிலையைத் தருவதுடன் ஆளுமைப் பண்பை வளர்க்கும் கருவியாகவும் விளங்குகிறது என்பதனைப் பெற்றோர்களும் உணர்ந்துள்ளனர். வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப்பதவி கொள்வார்-மகாகவி பாரதி!

by Swathi   on 22 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.